NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தூர் கோவில் விபத்து: உயிரிழந்த 8 பேரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன
    இந்தியா

    இந்தூர் கோவில் விபத்து: உயிரிழந்த 8 பேரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன

    இந்தூர் கோவில் விபத்து: உயிரிழந்த 8 பேரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன
    எழுதியவர் Sindhuja SM
    Mar 31, 2023, 07:05 pm 1 நிமிட வாசிப்பு
    இந்தூர் கோவில் விபத்து: உயிரிழந்த 8 பேரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன
    கண் மற்றும் தோல் தானம் செய்வதற்கு குடும்பத்தினர் எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளித்தனர்.

    மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் கோவில் கிணற்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 36 பேரில் 8 பேரின் குடும்பத்தினர் உயிரிழந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்தனர். பெலேஷ்வர் மகாதேவ் கோவில் கிணற்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் உயிரிழந்த தங்களின் அன்புக்குரியவர்களின் தோல் மற்றும் கண்களை தானமாக வழங்க அவர்களது குடும்பத்தினர் ஒப்புக்கொண்டதாக தன்னார்வ தொண்டு நிறுவனமான முஸ்கான் குழுமம் தெரிவித்துள்ளது. "கனத்த இதயத்துடன், துக்கத்தில் இருந்த குடும்பத்தினர், இறந்த தங்கள் குடும்ப உறுப்பினரின் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புதல் அளித்தனர்." என்று அந்த அமைப்பை சேர்நத சந்தீபன் ஆர்யா தெரிவித்தார்.

    கண் மற்றும் தோல் தானம் செய்யப்பட்டுள்ளது

    "இதுவரை, இந்திர குமார், பூமிகா கான்சந்தனி, ஜெயந்தி பாய், தக்ஷ் படேல், லக்ஷ்மி படேல், பாரதி குக்ரேஜா, இந்தார் சந்த்கி மற்றும் கனக் படேல் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள் கண் மற்றும் தோல் தானம் செய்வதற்கு எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளனர்." என்று மேலும் அவர் கூறினார். அவர்களது கண்கள் MY மருத்துவமனை மற்றும் சங்கரா கண் வங்கிக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. சோய்த்ராம் மருத்துவமனை அதிகாரிகள் தோலை தானமாக பெற்றுள்ளனர். "உடல் உறுப்பு தானத்தில் பணியாற்றும் தன்னார்வ அமைப்பான முஸ்கான் குழுமத்தின் கோரிக்கை கிடைத்தது. அதனையடுத்து, மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு தேவையான ஆதரவுகளை வழங்கியது." என்று இந்தூரின் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் அஜய்தியோ சர்மா தெரிவித்திருக்கிறார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    மத்திய பிரதேசம்
    இந்தியா

    மத்திய பிரதேசம்

    இந்தூர் கோவில் கிணறு இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 35ஆக உயர்வு இந்தியா
    நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைக்கு பிறந்த 4 குட்டிகள் இந்தியா
    ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய 7 வயது சிறுவன் பலி இந்தியா
    நரபலிக்கு பயந்து தமிழகம் வந்த இளம்பெண் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு தமிழ்நாடு

    இந்தியா

    இந்தியாவில் டெக்னோவின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் - எப்போது வெளியீடு! ஸ்மார்ட்போன்
    இந்திய விற்பனையில் கலக்கும் சிட்ரோன் சி3 காரின் ஏற்றுமதி தொடக்கம்! சிட்ரோயன்
    பிரதமரின் பட்டபடிப்பு விவரங்கள் தேவையில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம் மோடி
    இந்தியாவிலேயே 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற முதல் மாநிலம் தமிழகம் தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023