NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தூர் கோவில் கிணறு இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 35ஆக உயர்வு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தூர் கோவில் கிணறு இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 35ஆக உயர்வு
    பெலேஷ்வர் மகாதேவ் கோவில், நான்கு தசாப்தங்களுக்கு முன்பு படிக்கட்டுக் கிணற்றுக்கு மேல் கட்டப்பட்டது.

    இந்தூர் கோவில் கிணறு இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 35ஆக உயர்வு

    எழுதியவர் Sindhuja SM
    Mar 31, 2023
    09:46 am

    செய்தி முன்னோட்டம்

    மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இருக்கும் ஒரு கோயிலில் உள்ள படிக்கட்டுக் கிணற்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 35 பேர் உயிரிழந்தனர்.

    பெலேஷ்வர் மகாதேவ் கோவிலில் உள்ள கிணறு, ராம நவமி அன்று மக்கள் கூட்டத்தின் எடையைத் தாங்க முடியாமல் இடிந்து விழுந்தது.

    "மொத்தம் 35 பேர் உயிரிழந்தனர். ஒருவரை காணவில்லை. 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர். சிகிச்சைக்குப் பின் 2 பேர் பத்திரமாக வீடு திரும்பினர். காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது." என்று இந்தூர் கலெக்டர் டி.இளையராஜா கூறியுள்ளார்.

    "வியாழன் மதியம் 12:30 மணியளவில் 18 மணிநேர மீட்புப் பணி தொடங்கியது. அது இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

    இந்தியா

    உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு

    தனியார் அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படும் இந்த கோவில், இந்தூரில் உள்ள பழமையான குடியிருப்பு காலனிகளில் ஒன்றான ஸ்னே நகரில் அமைந்துள்ளது.

    ராம நவமி அன்று, கோயிலின் மேடையாகவும் கிணற்றின் மேற் கூரையாகவும் செயல்படும் கான்கிரீட் ஸ்லாப்பில் ஹவானி நடத்தப்பட்டது.

    30-40 பேர் எடையை தாங்கும் அளவுக்கு அந்த கான்கிரீட் ஸ்லாப் வலுவாக இல்லாததால், 40 அடி ஆழமுள்ள படிக்கட்டு கிணற்றில் பக்தர்கள் தவறி விழுந்தனர்.

    பெலேஷ்வர் மகாதேவ் கோவில், நான்கு தசாப்தங்களுக்கு முன்பு படிக்கட்டுக் கிணற்றுக்கு மேல் கட்டப்பட்டது.

    மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மத்திய பிரதேசம்

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    இந்தியா

    ஸ்மார்ட் கீ வசதியுடன் ஹோண்டாவின் புதிய ஆக்டிவா 125 அறிமுகம்! ஹோண்டா
    ஆதார் கார்டுடன் பான் கார்டினை இணைக்க கால அவகாசத்தை நீட்டித்த மத்திய அரசு ஆதார் புதுப்பிப்பு
    இந்திய-சீக்கிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பேர் பிலிப்பைன்ஸில் கைது பிலிப்பைன்ஸ்
    இந்தியாவில் ஏப்ரல் மாதம் முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை 12% வரை உயருகிறது இந்தியா

    மத்திய பிரதேசம்

    மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் இந்திய விமானப்படை விமானம் விபத்து இந்தியா
    சூடான இரும்பு கம்பியை வைத்து 51 முறை குத்தியதால் மூன்று மாத குழந்தை பலி இந்தியா
    வைரல் வீடியோ: காவல்துறை அதிகாரியை சரமாரியாக தாக்கிய 'பாஜக MLAவின் ஆட்கள்' வைரல் செய்தி
    வைரல் செய்தி: மத்திய பிரதேச மாநிலத்தில் கிளிக்கும், மைனாவிற்கும் நடந்த வினோத திருமணம் வைரல் செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025