NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தான் கண்ணில் மண்ணை தூவி பயங்கரவாத தளங்களை இந்தியா எவ்வாறு தாக்கியது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தான் கண்ணில் மண்ணை தூவி பயங்கரவாத தளங்களை இந்தியா எவ்வாறு தாக்கியது?
    பாகிஸ்தான் வான்வெளியை கடந்து சென்று இலக்குகளை தாக்க இந்திய விமானப்படைக்கு வெறும் 23 நிமிடங்கள் மட்டுமே ஆனதாம்

    ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தான் கண்ணில் மண்ணை தூவி பயங்கரவாத தளங்களை இந்தியா எவ்வாறு தாக்கியது?

    எழுதியவர் Venkatalakshmi V
    May 15, 2025
    09:21 am

    செய்தி முன்னோட்டம்

    ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியாவின் முப்படைகளின் கூட்டு நடவடிக்கை ஆபரேஷன் சிந்தூர்.

    இந்த நடவடிக்கையின் போது, ​​பாகிஸ்தானின் கண்ணில் மண்ணை தூவி இந்தியா எப்படி தாக்கியது என்ற கேள்வி பலருக்கும் இருந்தது.

    தற்போது அதற்கான விடை வெளியாகியுள்ளது.

    ஆபரேஷன் சிந்தூரில், பாகிஸ்தானிற்கு சீனா வழங்கிய வான் பாதுகாப்பு அமைப்புகளை முடக்கி, பாகிஸ்தான் வான்வெளியை கடந்து சென்று இலக்குகளை தாக்க இந்திய விமானப்படைக்கு வெறும் 23 நிமிடங்கள் மட்டுமே ஆனதாம்.

    அறிக்கை

    வெற்றிகரமாக சீனாவின் தொழில்நுட்பத்தை முறியடித்த இந்தியா

    "பாகிஸ்தானின் சீனா வழங்கிய AD அமைப்புகளை IAF புறக்கணித்து முடக்கியது(Jamming). இந்த பணியை வெறும் 23 நிமிடங்களில் முடித்து இந்தியாவின் தொழில்நுட்ப நுண்ணறிவை நிரூபித்தது" என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

    "Jamming" என்பது எதிரிகளின் ரேடார் மற்றும் தகவல்தொடர்புகளை சீர்குலைப்பது அல்லது குழப்புவது என்று பொருள்.

    "23 நிமிடங்கள்" என்பது IAF மற்றும் இராணுவம் மே 7 அதிகாலையில் பாகிஸ்தான் மற்றும் PoK இல் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களை குண்டுவீச எடுத்துக்கொண்ட நேரத்தைக் குறிக்கிறது.

    ஆபரேஷன் சிந்தூர்

    ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அதை தொடர்ந்து நடந்த எதிர்தாக்குதல்கள்

    மே 7ஆம் தேதி அதிகாலை, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.

    ஆபரேஷன் சிந்தூர் என்ற இந்த ராணுவ நடவடிக்கையின் கீழ் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    பதிலுக்கு பாகிஸ்தான் பல இந்திய இராணுவ நிலைகளை குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்க முயன்றது.

    ஆனால் அவை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பான ஆகாஷால் சுட்டு வீழ்த்தப்பட்டன.

    இதற்கு பதிலடியாக இந்தியா, அவர்களின் நூர் கான் மற்றும் ரஹீம் யார் கான் உள்ளிட்ட முக்கிய பாகிஸ்தானிய விமானப்படை தளங்களை துல்லியத்துடன் குறிவைத்தன.

    தாக்குதல் ஒவ்வொன்றும் எதிரி ரேடார் மற்றும் ஏவுகணை அமைப்புகள் உட்பட அதிக மதிப்புள்ள இலக்குகளைக் கண்டுபிடித்து அழித்தன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆபரேஷன் சிந்தூர்
    இந்திய ராணுவம்
    இந்தியா
    பாகிஸ்தான்

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தான் கண்ணில் மண்ணை தூவி பயங்கரவாத தளங்களை இந்தியா எவ்வாறு தாக்கியது? ஆபரேஷன் சிந்தூர்
    இந்தியா-மியான்மர் எல்லையில் பதற்றம்: 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை மணிப்பூர்
    கனடாவின் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இந்திய வம்சாவளி அமைச்சர்கள்! கனடா
    ராஜ் நிதிமோருவுடனான தனது உறவை சமந்தா உறுதி செய்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு சமந்தா ரூத் பிரபு

    ஆபரேஷன் சிந்தூர்

    LoC-இல் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் தாக்குதலில் 10 இந்திய பிரஜைகள் கொல்லப்பட்டனர் துப்பாக்கி சூடு
    'மேலும் பஹல்காம் போன்ற தாக்குதல்கள் திட்டமிடப்பட்டன': 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து விளக்கமளித்த இந்திய ராணுவம் இந்திய ராணுவம்
    ஆபரேஷன் சிந்தூர்: இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளுக்கு 'பயணம் செய்ய வேண்டாம்' என அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா அறிவுறுத்தல் அமெரிக்கா
    ‛ஆபரேஷன் சிந்தூர்'-ல் முன்னின்று நடத்திய சிங்கப் பெண்கள் இவர்கள்தான்! ராணுவ, விமானப்படையில் பெண் வீராங்கனைகளின் அதிரடி பங்கேற்பு விமானப்படை

    இந்திய ராணுவம்

    இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    ராணுவ நடவடிக்கைகளை லைவ் கவரேஜ் செய்ய வேண்டாம் என மத்திய அரசு அறிவுரை மத்திய அரசு
    2028 வரை டெரிட்டோரியல் ஆர்மியின் 14 பட்டாலியன்களை நிலைநிறுத்த மத்திய அரசு உத்தரவு மத்திய அரசு

    இந்தியா

    ஆபரேஷன் சிந்தூர்: 35-40 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவிப்பு இந்திய ராணுவம்
    ஆப் சிந்தூரில், கராச்சியைத் தாக்க இந்திய கடற்படை தயாராக இருந்தது: துணை அட்மிரல் ஆபரேஷன் சிந்தூர்
    இந்தியா, பாகிஸ்தான் உயர் ராணுவ அதிகாரிகள் இன்று நண்பகல் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் இந்திய ராணுவம்
    போர் பதற்றத்தால் தற்காலிகமாக மூடப்பட்ட 32 விமான நிலையங்களையும் மீண்டும் திறந்தது இந்தியா விமான நிலையம்

    பாகிஸ்தான்

    அமெரிக்காவுக்கு போன் போட்ட பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர்; மத்தியஸ்தம் செய்ய உதவுவதாக அமெரிக்கா அறிவிப்பு அமெரிக்கா
    பாகிஸ்தானின் சியால்கோட்டில் பயங்கரவாத ஏவுதளத்தை தாக்கி அழித்தது பிஎஸ்எஃப் பாகிஸ்தான் ராணுவம்
    இந்தியா தாக்கி அழித்த பாகிஸ்தானின் சுக்கூர் விமானப்படை தளத்தின் முக்கியத்துவம் என்ன? விமானப்படை
    ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானின் முரிட்கேவில் ஐந்து தேடப்படும் பயங்கரவாதிகளை கொன்றது இந்தியா தீவிரவாதிகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025