NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராஞ்சியில் இன்று திறந்தவெளி வண்ணத்துப்பூச்சி பூங்கா துவங்கப்பட்டது
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராஞ்சியில் இன்று திறந்தவெளி வண்ணத்துப்பூச்சி பூங்கா துவங்கப்பட்டது
    ராஞ்சியில் இன்று திறந்தவெளி வண்ணத்துப்பூச்சி பூங்கா துவங்கப்பட்டது

    ராஞ்சியில் இன்று திறந்தவெளி வண்ணத்துப்பூச்சி பூங்கா துவங்கப்பட்டது

    எழுதியவர் Nivetha P
    Nov 07, 2023
    08:47 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் திறந்தவெளி வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று(நவ.,7) துவங்கி வைக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

    ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு அருகில் அமைந்துள்ளது பக்வான் பிர்சா உயிரியல் பூங்கா.

    அந்த பூங்காவில் தற்போது வண்ணத்துப்பூச்சிகளுக்கு என தனியாக திறந்தவெளியில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் ஓர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

    இதனை வனத்துறை கூடுதல் செயலாளர் எல்.கியாங்க்ட் இன்று பார்வையாளர்களுக்கு திறந்து வைத்தார்.

    அதன்படி இந்த பூங்காவில் 88 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்களை காண முடியும் என்று கூறப்படுகிறது.

    மேலும் இது கிழக்கு இநதியாவிலேயே மிக பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா என்றும் கூறப்படுகிறது.

    பூங்கா 

    பராமரிப்பு பணிகளுக்கு ஆண்டுக்கு ரூ.25 லட்சம்

    இந்த பூங்காவில் சாதாரண லியோபார்ட் வண்ணத்து பூச்சி இனம் முதல் மிகவும் அரியவகையான 'நீல பென்சி' என்று அழைக்கப்படும் வண்ணத்துப்பூச்சிகளின் இனம் வரை நம்மால் பார்க்க முடியும் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

    தற்போதைய உலக சூழலியலில் வண்ணத்துப்பூச்சிகளின் முக்கியத்துவம் குறித்து இப்பூங்கா எடுத்துரைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

    தொடர்ந்து இந்த பூங்கா பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் இல்லாமல் வண்ணத்துப்பூச்சிகள் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த பூங்காவில் வண்ணத்துப்பூச்சிகளுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதோடு அதற்கான தேன் செடிகளும் வைக்கப்பட்டுள்ளது.

    பார்வையாளர்களுக்கான நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பூங்காவிற்கான பராமரிப்பு பணிகளுக்கு ஆண்டுக்கு ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    வனத்துறை

    சமீபத்திய

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்
    அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன? மின்சார வாகனம்
    நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது! மெட்டா

    இந்தியா

    இந்தியா முழுவதும் தீபாவளி எவ்வாறு கொண்டாடப்படுகிறது? தீபாவளி
    துப்பாக்கிச் சுடுதல் ஆசிய சாம்பியன்ஷிப்பில் சீனாவை வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா துப்பாக்கிச் சுடுதல்
    பணமோசடி வழக்கு: ஜெட் ஏர்வேஸுக்கு சொந்தமான ரூ.538 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் அமலாக்க இயக்குநரகம்
    பெங்களூரில் சுற்றித்திரிந்த சிறுத்தையை வனத்துறையினர் கொன்று பிடித்தனர் பெங்களூர்

    வனத்துறை

    அரிக்கொம்பன் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிவாரணம்!  தமிழ்நாடு
    சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி விருதுநகர்
    நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிடிபட்டது அரிக்கொம்பன் யானை! தமிழ்நாடு
    அரிக்கொம்பன் யானை, களகாடு வனப்பகுதிக்கு அழைத்து செல்லப்படுகிறது  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025