NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ்நாட்டில் மேலும் ஒரு மாநகராட்சி; தரம் உயர்த்தப்படுகிறது ஊட்டி; புதிய நகராட்சியை உருவாக்கவும் திட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழ்நாட்டில் மேலும் ஒரு மாநகராட்சி; தரம் உயர்த்தப்படுகிறது ஊட்டி; புதிய நகராட்சியை உருவாக்கவும் திட்டம்
    மாநகராட்சியாக தரம் உயர்கிறது ஊட்டி

    தமிழ்நாட்டில் மேலும் ஒரு மாநகராட்சி; தரம் உயர்த்தப்படுகிறது ஊட்டி; புதிய நகராட்சியை உருவாக்கவும் திட்டம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 30, 2024
    11:17 am

    செய்தி முன்னோட்டம்

    நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஊட்டியை மாநகராட்சியாக தரம் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 9 மாவட்டங்களைத் தவிர்த்து இதர மாவட்டங்களில் உள்ள ஊராட்சி அமைப்புகளில் உள்ள பிரதிநிதிகளின் பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது.

    இதையொட்டி ஊராட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த தமிழக மாநில தேர்தல் ஆணையம் பணிகளைத் தொடங்கியுள்ளது.

    இந்நிலையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, கோயம்புத்தூர், நாமக்கல், திருநெல்வேலி, திருச்சி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, தேனி, சிவகங்களை ஆகிய 17 மாவட்டங்களில் உள்ள பல்வேறு பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    இவை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்போது, அருகிலுள்ள ஊராட்சிகளும் இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நீலகிரி

    ஊட்டி மாநகராட்சி

    இதேபோல் நீலகிரி மாவட்டத்தின் தலைநகராக விளங்கும் ஊட்டியையும் மாநகராட்சியாக தரம் உயர்த்த பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

    ஊட்டியை மாநகராட்சியாக தரம் உயர்த்தும்போது, அருகிலுள்ள கேத்தி பேரூராட்சியும், தொட்டபெட்டா, நஞ்சநாடு, இத்தலார் மற்றும் உல்லத்தி ஆகிய ஊராட்சிகளும் ஊட்டி மாநகராட்சியுடன் இணைக்கப்படலாம் எனக்கூறப்படுகிறது.

    டிசம்பரில் ஊராட்சிகளின் பதவிக்காலம் காலாவதியாகும் நிலையில், அதற்கு முன்னர் அல்லது 2025 ஜனவரியில் தரம் உயர்த்தப்படுவதற்கான பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கான பணிகள் முடிந்த பின்னரே ஊராட்சிகளுக்கான தேர்தல் அறிவிப்பு வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

    இதற்கிடையே, ஊட்டியை மாநகராட்சியாக தரம் உயர்த்தினால், உள்கட்டமைப்புகள் அதிகரித்து சுற்றுச்சூழல் அபாயங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என சூழலியல் ஆர்வலர்கள் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    புதிய நகராட்சிகளை உருவாக்க பரிந்துரை 

    Nilgiris to be upgraded as a municipal corporation soon.

    Sriperumbudur, Mamallapuram, Thirupporur, Tirukkazhukkundram, Avinashi, Perundurai, Kothagiri, Sankagiri, Thiruvaiyaru, Polur, Chengam, Chetpet, Annur, Sulur, Velur, Mohanur, Valliyur, Manachanallur, Harur, Thiruvattaru,… pic.twitter.com/2yaIMu1FO4

    — Tamil Nadu Infra (@TamilNaduInfra) September 29, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஊட்டி
    ஊட்டி
    நீலகிரி
    தமிழகம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ஊட்டி

    ஊட்டியில் 1.6 செல்சியஸ் வெப்பநிலை பதிவு - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு தமிழ்நாடு
    ஊட்டியில் அதிகளவு சத்து மாத்திரைகளை சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு - 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் தமிழ்நாடு
    கோடை காலம் காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் படப்பிடிப்புக்கு தடை ஊட்டி
    நீலகிரி வனப்பகுதியில் அத்துமீறி 4 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைப்பு - 3 பேர் மீது வழக்குப்பதிவு  ஊட்டி

    ஊட்டி

    ஊட்டியில் தாறுமாறாக விலை உயர்வு - சுற்றுலா பயணிகள் விடுத்த கோரிக்கை  ஊட்டி
    ஊட்டியின் அழகை எடுத்துரைக்கும் புகைப்பட கண்காட்சி துவக்கம்  தமிழ்நாடு
    ஊட்டியில் ரோஜா கண்காட்சி நாளை முதல் துவக்கம்  ஊட்டி
    நீலகிரி கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை திட்டத்திற்கு தடை ஊட்டி

    நீலகிரி

    நீலகிரி: நீட் தேர்வை வென்ற முதல் பழங்குடியின மாணவி  நீட் தேர்வு
    'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படத்திற்கு விருது வழங்கினார் பிரிட்டன் மன்னர்  ஆஸ்கார் விருது
    கனமழை காரணமாக நீலகிரி, வால்பாறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கல்லூரி
    தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம் - பொம்மன்,பெள்ளி தம்பதியை பாராட்டிய குடியரசுத்தலைவர்  இந்தியா

    தமிழகம்

    நாளை (செப்.14) 7.93 லட்சம் பேர் பங்கேற்கும் குரூப் 2 தேர்வு; தேர்வர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விதிமுறைகள் டிஎன்பிஎஸ்சி
    அமெரிக்க பயணம் வெற்றி; ரூ.7,600 கோடி முதலீட்டுடன் தமிழகம் வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின் மு.க.ஸ்டாலின்
    6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு குட் நியூஸ்; அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித்துறை
    திராவிட உடன்பிறப்புகளுக்கு ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓணம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025