NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை பேருந்தில் செல்லும் ஒருவருக்கு கொரோனா இருந்தால் அது 9 பேரை பாதிக்கும்
    இந்தியா

    சென்னை பேருந்தில் செல்லும் ஒருவருக்கு கொரோனா இருந்தால் அது 9 பேரை பாதிக்கும்

    சென்னை பேருந்தில் செல்லும் ஒருவருக்கு கொரோனா இருந்தால் அது 9 பேரை பாதிக்கும்
    எழுதியவர் Sindhuja SM
    Mar 29, 2023, 01:55 pm 1 நிமிட வாசிப்பு
    சென்னை பேருந்தில் செல்லும் ஒருவருக்கு கொரோனா இருந்தால் அது 9 பேரை பாதிக்கும்
    இந்த ஆய்வு, அறிவியல் இதழான வைரஸ் டிசீஸில் வெளியிடப்பட்டுள்ளது.

    ஓரளவு கூட்டம் உள்ள சென்னை பேருந்தில் பயணிக்கும் போது, ஒரு பயணிக்கு கொரோனா இருந்தாலும் அதனால் 9 பேர் வரை பாதிக்கப்படலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் புதுச்சேரியை தளமாகக் கொண்ட ICMRவெக்டர் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட எத்தனை பயணிகள் பேருந்தில் இருக்கிறார்கள், பேருந்து எந்த அளவு கூட்டமாக இருக்கிறது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட பயணி எவ்வளவு தூரம் பயணிக்கிறார் என்பதை பொறுத்து பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு, அறிவியல் இதழான வைரஸ் டிசீஸில் (முன்னர், இந்தியன் ஜர்னல் ஆஃப் வைராலஜி என்று அறியப்பட்டது) வெளியிடப்பட்டுள்ளது.

    தாம்பரம்-பிராட்வே பேருந்து வழியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வு

    விஞ்ஞானிகள் கொரோனா தொற்று சூழ்நிலையை உருவகப்படுத்த, 21-ஜி தாம்பரம் முதல் பிராட்வே பேருந்து வழியைப் பயன்படுத்தி இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். இந்த 36.1 கிலோமீட்டர் பாதையில் உள்ள 40 நிறுத்தங்களில் ஒவ்வொன்றிலும் ஐந்து பயணிகள் ஏறுவார்கள் என்ற கணக்கின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. குறைந்தது ஒரு பயணி SARS-CoV-2ஆல் பாதிக்கப்பட்டிருப்பதாக கருதப்பட்டது. "தாம்பரத்திலிருந்து பிராட்வே வரையிலான ஒவ்வொரு பயணத்தின் போதும் இரண்டாம் நிலை நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை, பேருந்தில் உள்ளவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஐந்து முதல் ஒன்பதாக மாறுபடும்" என்று இந்த ஆய்வின் இணை ஆசிரியர் கமலானந்த் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். "தொற்றுநோய் அபாயத்தைக் குறைக்க மக்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்" என்றும் அவர் கூறியுள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தமிழ்நாடு
    கொரோனா

    தமிழ்நாடு

    காரைக்குடி திரையரங்கு கேன்டீனில் பப்ஸ் சாப்பிடும் பூனை - உணவு விற்பனைக்கு தடை திரையரங்குகள்
    சென்னையில் மாநகர பேருந்துகள் திடீர் போராட்டத்தால் பொதுமக்கள் அவதி  போராட்டம்
    பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மாற்றாக கோவையில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம்  கோவை
    8 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்  தமிழகம்

    கொரோனா

    இந்தியாவில் ஒரே நாளில் 310 கொரோனா பாதிப்பு: 2 பேர் உயிரிழப்பு இந்தியா
    கொரோனா தடுப்பூசி போடாத மணமகள் தேவை - வினோத விளம்பரம் மாரடைப்பு
    இந்தியாவில் ஒரே நாளில் 490 கொரோனா பாதிப்பு: 2 பேர் உயிரிழப்பு இந்தியா
    சீனாவின் புதிய கொரோனா அலை: வாரந்தோறும் 65 மில்லியன் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு சீனா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023