NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை பேருந்தில் செல்லும் ஒருவருக்கு கொரோனா இருந்தால் அது 9 பேரை பாதிக்கும்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை பேருந்தில் செல்லும் ஒருவருக்கு கொரோனா இருந்தால் அது 9 பேரை பாதிக்கும்
    இந்த ஆய்வு, அறிவியல் இதழான வைரஸ் டிசீஸில் வெளியிடப்பட்டுள்ளது.

    சென்னை பேருந்தில் செல்லும் ஒருவருக்கு கொரோனா இருந்தால் அது 9 பேரை பாதிக்கும்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 29, 2023
    01:55 pm

    செய்தி முன்னோட்டம்

    ஓரளவு கூட்டம் உள்ள சென்னை பேருந்தில் பயணிக்கும் போது, ஒரு பயணிக்கு கொரோனா இருந்தாலும் அதனால் 9 பேர் வரை பாதிக்கப்படலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் புதுச்சேரியை தளமாகக் கொண்ட ICMRவெக்டர் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட எத்தனை பயணிகள் பேருந்தில் இருக்கிறார்கள், பேருந்து எந்த அளவு கூட்டமாக இருக்கிறது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட பயணி எவ்வளவு தூரம் பயணிக்கிறார் என்பதை பொறுத்து பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வு, அறிவியல் இதழான வைரஸ் டிசீஸில் (முன்னர், இந்தியன் ஜர்னல் ஆஃப் வைராலஜி என்று அறியப்பட்டது) வெளியிடப்பட்டுள்ளது.

    இந்தியா

    தாம்பரம்-பிராட்வே பேருந்து வழியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வு

    விஞ்ஞானிகள் கொரோனா தொற்று சூழ்நிலையை உருவகப்படுத்த, 21-ஜி தாம்பரம் முதல் பிராட்வே பேருந்து வழியைப் பயன்படுத்தி இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.

    இந்த 36.1 கிலோமீட்டர் பாதையில் உள்ள 40 நிறுத்தங்களில் ஒவ்வொன்றிலும் ஐந்து பயணிகள் ஏறுவார்கள் என்ற கணக்கின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

    குறைந்தது ஒரு பயணி SARS-CoV-2ஆல் பாதிக்கப்பட்டிருப்பதாக கருதப்பட்டது.

    "தாம்பரத்திலிருந்து பிராட்வே வரையிலான ஒவ்வொரு பயணத்தின் போதும் இரண்டாம் நிலை நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை, பேருந்தில் உள்ளவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஐந்து முதல் ஒன்பதாக மாறுபடும்" என்று இந்த ஆய்வின் இணை ஆசிரியர் கமலானந்த் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    "தொற்றுநோய் அபாயத்தைக் குறைக்க மக்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்" என்றும் அவர் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    கொரோனா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    தமிழ்நாடு

    காஞ்சிபுரம் - ஸ்ரீ பெரம்பத்தூரில் தேசிய அளவிலான அறிவியல் மாநாடு மாவட்ட செய்திகள்
    தமிழகத்தில் முதன்முறையாக வருகிறது பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா - விருதுநகரில் அமைகிறது விருதுநகர்
    தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் தாக்கல் மு.க ஸ்டாலின்
    வானிலை அறிக்கை: மார்ச் 23- மார்ச் 27 புதுச்சேரி

    கொரோனா

    சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த தாய்-மகள் இருவருக்கு கொரோனா தொற்று தொற்று
    அடுத்த 40 நாட்களுக்குள் கொரோனா அதிகரிக்கும்: மத்திய சுகாதாரத்துறை இந்தியா
    மீண்டும் பேரழிவை மேற்கொள்ளும் சீனா - மீண்டும் துவங்கிய கொரோனாவின் கோரத்தாண்டவம் சீனா
    மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ஜனவரி 1 முதல் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025