NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஒடிசா ரயில் விபத்து: 3 மேற்கு வங்க சகோதரர்கள் பலி!
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒடிசா ரயில் விபத்து: 3 மேற்கு வங்க சகோதரர்கள் பலி!
    3 மேற்கு வங்க சகோதரர்கள் பலி

    ஒடிசா ரயில் விபத்து: 3 மேற்கு வங்க சகோதரர்கள் பலி!

    எழுதியவர் Arul Jothe
    Jun 05, 2023
    10:14 am

    செய்தி முன்னோட்டம்

    மேற்கு வங்கத்தின் பர்கானாஸ் மாவட்டத்தில் வசிப்பவர்களான ஹரன் கயென் (40), நிஷிகாந்த் கயென் (35) மற்றும் திபாகர் கயென் (32) ஆகியோர் ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள். பிழைப்புக்காக தமிழகம் வந்தவர்கள். இடையில் சொந்த ஊருக்கு சென்றவர்கள், மீண்டும் தமிழ்நாடு நோக்கி, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பிரயாணம் செய்த போது, விதிவசத்தால் மூவருமே இறந்த செய்தி உள்ளூர் வாசிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

    அவர்கள் இறந்த செய்தியை கேட்டு அவர்களின் குடும்பத்தினர் பெரும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    ஹரனின் மனைவி அனாஜிதா ஒரு நோயாளி. ஹரனின் சம்பாத்தியத்தை கொண்டு நடைபெற்று வந்த அவரது சிகிச்சை, தற்போது என்ன ஆகுமோ எனவும் அவர் குடும்பத்தார் வருந்துகின்றனர்

    Odisha Rail Accident 

    3 மேற்கு வங்க சகோதரர்கள் பலி

    நிஷிகாந்த்க்கு மனைவி, ஒரு மகள் மற்றும் ஒரு மகன்,திபாகருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.

    குடும்பம் பிழைப்பதற்கு வாழ்வாதாரமாக இருந்தவர்கள் இவர்கள் மூவர் மட்டும் தான்.

    வெள்ளிக்கிழமை மாலை நடந்த இந்த விபத்தில் பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இறந்தவர்களில், ஆறு பேர் பசந்தி தொகுதியைச் சேர்ந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் மோதிய விபத்தில் 270 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளனர்.

    இறந்தவர்களில் பலர் அடையாளம் காணப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மேற்கு வங்காளம்
    ரயில்கள்
    இந்தியா

    சமீபத்திய

    உங்கள் வீட்டில் வைஃபை இணைப்பு விரைவில் வலுவாகவும் வேகமாகவும் மாறப்போகிறது தொலைத்தொடர்புத் துறை
    இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது; இலங்கை பிரஜையை நாடுகடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்
    படகு சேவைகளை மேம்படுத்த இந்தியாவும் மாலத்தீவும் 13 MoUகளில் கையெழுத்திட்டன மாலத்தீவு
    அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் ஒரே அளவிலான ஓய்வூதியம்; உச்ச நீதிமன்றம் உத்தரவு ஓய்வூதியம்

    மேற்கு வங்காளம்

    மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது! வைரல் செய்தி
    ஜனாதிபதி திரௌபதி முர்முவை நடனமாடி வரவேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ்
    ராம நவமி கலவரம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்: உள்துறை அமைச்சகம் இந்தியா
    ராம நவமி பிரச்சனை: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை இந்தியா

    ரயில்கள்

    சென்னையில் மீண்டும் ட்ராம் ரயில்களுக்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு சென்னை
    இந்தியாவின் ஆமை வேக ரயில் இதுதான்! 46 கிமீ பயணிக்க 5 மணிநேரம் இந்தியா
    ரயிலை காணவில்லை: 90 கண்டைனர்களை ஏற்றி சென்ற கூட்ஸ் ரயிலை காணவில்லை இந்தியா
    விமானத்துக்கு இணையான இந்தியாவின் முதல் ரேபிட் ரயில்! எங்கு தெரியுமா? தொழில்நுட்பம்

    இந்தியா

    பிரிஜ் பூஷனை கைது செய்ய போதுமான ஆதாரம் இல்லை: டெல்லி காவல்துறை  டெல்லி
    மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது: மோர்கன் ஸ்டான்லி நரேந்திர மோடி
    'குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், நான் தூக்கில் தொங்க தயார்': பிரிஜ் பூஷன் காவல்துறை
    இந்தியாவில் அதிகரிக்கும் போலி ரூ.500 நோட்டுகள் - அதிர்ச்சி தகவல்  ரிசர்வ் வங்கி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025