NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெற்றோரைக் கவனிப்பது குழந்தைகளின் சட்டப்பூர்வமான கடமை: கர்நாடக உயர்நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெற்றோரைக் கவனிப்பது குழந்தைகளின் சட்டப்பூர்வமான கடமை: கர்நாடக உயர்நீதிமன்றம்
    ஆர்.கவிதா என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த கருத்தை கூறியுள்ளனர்.

    பெற்றோரைக் கவனிப்பது குழந்தைகளின் சட்டப்பூர்வமான கடமை: கர்நாடக உயர்நீதிமன்றம்

    எழுதியவர் Sindhuja SM
    Nov 12, 2023
    06:48 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் சட்டம் பேசுவோம் கட்டுரையை படித்து, இந்திய மற்றும் சர்வதேச சட்டங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

    வயதான பெற்றோரின் சொத்துக்களை குழந்தைகள் பரிசாகப் பெற்றுக் கொள்ளும்போது அவர்களைக் கவனித்து கொள்ள வேண்டிய கடமை குழந்தைளுக்கு அதிகமாகிறது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

    ஆர்.கவிதா என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த கருத்தை கூறியுள்ளனர்.

    கவிதாவின் பெற்றோரான நிர்மலும், ராஜசேகரையாவும் தங்களுக்குச் சொந்தமான சொத்தை தங்கள் மகளுக்கு 2018ஆம் ஆண்டு அன்பளிப்பாக வழங்கினர்.

    அந்த பரிசு வழங்கும் போது கையெழுத்தான பரிசுப் பத்திரத்தில் கவிதா தன் பெற்றோரை கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

    வ்ஜ்க்ள்

    பெற்றோரை துன்புறுத்தியால்  பரிசுப் பத்திரம் ரத்து 

    ஆனால், கவிதாவும் அவரது கணவரும் நிர்மல் மற்றும் ராஜசேகரையா ஆகியோரை உடல் ரீதியாக தாக்கி அவர்களை வீட்டை விட்டு விரட்டிவிட்டனர்.

    இதனையடுத்து, கடனை அடைப்பதற்காக நிலத்தை விற்குமாறு கவிதாவும் அவரது கணவரும் தன்னை வற்புறுத்துவதாக கூறி ராஜசேகரையா உதவி ஆணையரிடம் மனு அளித்தார்.

    அந்த மனுவை பெற்ற உதவி ஆணையர்,பரிசுப் பத்திரத்தை ரத்து செய்தார். அதனால், கவிதாவுக்கு கொடுக்கப்பட்டிருந்த சொத்துக்கள் திரும்ப பெறப்பட்டன.

    இந்நிலையில், பரிசுப் பத்திரத்தை ரத்து செய்த உதவி ஆணையரின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் கவிதாவும் அவரது கணவரும் மனு தாக்கல் செய்தனர்.

    அந்த மனு செப்டம்பர் 10, 2021 அன்று நீதிமன்றத்தால் நிராகரிப்பட்டது.

    டவ்ங்கள்

    'பெற்றோரைக் கவனித்து கொள்வது சட்டப்பூர்வ கடமை': நீதிபதிகள்

    அதனை தொடர்ந்து, கவிதாவும் அவரது கணவரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

    அவர்களது அந்த மேல்முறையீட்டு மனுவை தலைமை நீதிபதி பிரசன்னா பி வரலே மற்றும் நீதிபதி கிருஷ்ணா எஸ் தீட்சித் ஆகியோர் அடங்கிய டிவிஷன் அமர்வு நேற்று விசாரித்தது.

    அதை விசாரித்த நீதிபதிகள், துமகுரு மாவட்டம் குப்பி தாலுகாவில் உள்ள பசவபட்டனாவைச் சேர்ந்த ஆர்.கவிதா மற்றும் அவரது கணவர் யோகேஷ் ஆகியோரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    "இதற்குமுன் ஒற்றை நீதிபதி வழங்கிய தீர்ப்புடன் நாங்கள் உடன்படுகிறோம். இது குறித்து விவாதிக்க நாங்கள் விரும்பவில்லை. அதனால் இந்த மனுவை நிராகரிக்கிறோம். வயதான தந்தையையும் தாயையும் கவனித்துக்கொள்வது தர்மம் செய்வது அல்ல, அது ஒரு சட்டப்பூர்வ கடமையாகும்." என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உயர்நீதிமன்றம்
    கர்நாடகா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    உயர்நீதிமன்றம்

    மரணதண்டனை மனு விசாரணை: யாசின் மாலிக்கை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட NIA இந்தியா
    ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை - மதுரை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு
    சடலங்களுடன் உடலுறவு கொள்வதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம் இந்தியா
    வனப் பாதுகாப்பு மசோதா தமிழ் மொழியில் வெளியிடப்படும்: மத்திய அரசு  இந்தியா

    கர்நாடகா

    தமிழகத்தில் அதிகளவு மாசடைந்துள்ள காவிரி நீர் - அதிர்ச்சி தகவல்  தமிழ்நாடு
    செல்போன் சார்ஜர் வயரால் பறிபோன 8 மாத குழந்தையின் உயிர்  காவல்துறை
    கர்நாடகாவின் மிகப்பெரிய மாவட்டம் பெலகாவியை பிரிப்பது குறித்து ஆலோசனை மாநில அரசு
    'மதம் மாறு அல்லது பணம் கொடு'; பெங்களூரை அதிர வைத்த பாலியல் தொழில் பெங்களூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025