NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காதலரை தேடி பாகிஸ்தானுக்கு சென்ற திருமணமான இந்திய பெண் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    காதலரை தேடி பாகிஸ்தானுக்கு சென்ற திருமணமான இந்திய பெண் 
    பொய் சொல்லிவிட்டு அஞ்சு பிவாடியில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்டார்.

    காதலரை தேடி பாகிஸ்தானுக்கு சென்ற திருமணமான இந்திய பெண் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 24, 2023
    10:42 am

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தானை சேர்ந்த சீமா ஹைதர் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவை சேர்ந்த அஞ்சு என்ற திருமணமான பெண் தன் பேஸ்புக் காதலரை தேடி பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

    ராஜஸ்தானை சேர்ந்த அஞ்சு, தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளோடு பிவாடி மாவட்டத்தில் வசித்து வந்தார்.

    அஞ்சுவின் கணவர் அரவிந்த் பிவாடியில் பணிபுரிந்து வருகிறார். அஞ்சு, தனியார் நிறுவனம் ஒன்றில் பயோடேட்டா என்ட்ரி ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை ஜெய்ப்பூர் செல்வதாக தன் குடும்பத்தினரிடம் பொய் சொல்லிவிட்டு அஞ்சு பிவாடியில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்டார்.

    அதன் பிறகு, அவர் தனது பேஸ்புக் நண்பரான நஸ்ருல்லாவை(29) சந்திக்க பாகிஸ்தானுக்கு சென்றார்.

    சுஇவ்

    நேற்று மாலை 4 மணியளவில் தன் கணவரை தொடர்புகொண்ட அஞ்சு

    மருத்துவத் துறையில் பணிபுரியும் நஸ்ருல்லாவும், அஞ்சுவும் சில மாதங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் நண்பர்களானார்கள் என்று செய்திகள் கூறுகின்றன.

    முதலில் அவர் பாகிஸ்தானுக்குள் நுழைந்தவுடன் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர், அவரது பயண ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகே அவர் விடுவிக்கப்பட்டார்.

    இதற்கிடையில், ஊடங்களின் மூலம் அஞ்சுவின் கணவர் அரவிந்துக்கு இந்த விஷயம் தெரிய வந்தது.

    அது போக, நேற்று மாலை 4 மணியளவில் தன் கணவரை தொடர்புகொண்ட அஞ்சு, தான் லாகூரில் இருப்பதாகவும், இரண்டு மூன்று நாட்களில் திரும்பி வருவேன் என்றும் கூறியுள்ளார்.

    இதனையடுத்து, செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி அளித்த அரவிந்த், தன் மனைவியின் காதலரை பற்றி கேள்விப்பட்டதாகவும், சீக்கிரமே தன் மனைவி தன்னிடம் திரும்பி வருவாள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    இந்தியா

    சமீபத்திய

    டர்புலன்ஸின் போது வான்வெளியைப் பயன்படுத்த இண்டிகோ விமானியின் கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்தது இண்டிகோ
    ஹார்வர்டின் இந்திய, வெளிநாட்டு மாணவர்கள் 3 நாட்களில் 6 நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் அங்கேயே தொடரலாம்! ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
    மஹிந்திரா BE 6 ரியர் வியூ கண்ணாடி விலை மட்டும் இவ்ளோவா? இதுக்கு ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கே வாங்கிடலாமே! மஹிந்திரா
    உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் கனிமொழி தலைமையிலான குழு பயணித்த விமானத்தை மாஸ்கோவில் தரையிறக்க முடியாமல் அவதி கனிமொழி

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுப்பது அரசின் செயல்திட்டத்தில் உள்ளது: மத்திய அமைச்சர் இந்தியா
    இந்தியாவுக்கு வருவதற்கு முன் பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி வெளியிட்ட வீடியோ இந்தியா
    பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் அளித்ததற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு விஞ்ஞானி கைது இந்தியா
    வீடியோ: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரை வரவேற்றார் அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்  இந்தியா

    இந்தியா

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 17 தங்கம் வெள்ளி விலை
    கன்வார் யாத்திரை: ஹரித்வாரில் 30,000 டன் குப்பைகள் குவிந்துள்ளன உத்தரகாண்ட்
    எஸ்.ஜெய்சங்கர் உட்பட 11 மாநிலங்களவை எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு  மாநிலங்களவை
    இன்றைய கொரோனா நிலவரம்: இந்தியாவில் 43 புதிய பாதிப்புகள் கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025