NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 5 மணிநேரத்திற்கு முன்பே கிளம்பி 35 பயணிகளை விட்டு சென்ற விமானம்
    இந்தியா

    5 மணிநேரத்திற்கு முன்பே கிளம்பி 35 பயணிகளை விட்டு சென்ற விமானம்

    5 மணிநேரத்திற்கு முன்பே கிளம்பி 35 பயணிகளை விட்டு சென்ற விமானம்
    எழுதியவர் Sindhuja SM
    Jan 20, 2023, 05:17 pm 1 நிமிட வாசிப்பு
    5 மணிநேரத்திற்கு முன்பே கிளம்பி 35 பயணிகளை விட்டு சென்ற விமானம்
    இரவு 7.55 மணிக்குப் புறப்பட வேண்டிய விமானம் மாலை 3 மணிக்கே புறப்பட்டதால் சர்ச்சை

    சமீபத்தில், பெங்களூரு விமான நிலையத்தில் 55 பயணிகளை விட்டுவிட்டு 'கோ ஃபர்ஸ்ட்' விமானம் பெங்களூரில் இருந்து டெல்லி சென்றது. இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இது நடந்து சில நாட்களுக்குள், அமிர்தசரஸில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம், திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பே புறப்பட்டு அமிர்தசரஸ் விமான நிலையத்தில் 35 பயணிகளை விட்டுச் சென்றிருக்கிறது. ஸ்கூட் ஏர்லைன் விமானம் இரவு 7.55 மணிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அது புதன்கிழமை(ஜன:18) மாலை 3 மணிக்கே புறப்பட்டது. இதனால் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் விட்டு செல்லப்பட்ட 35 பயணிகளும் குழப்பமடைந்தனர். விட்டுச் செல்லப்பட்ட அனைத்து பயணிகளுக்கும் பயண வசதிகளை செய்து தருவதாக ஸ்கூட் ஏர்லைன் தெரிவித்திருக்கிறது என்று விமான நிலைய இயக்குனர் வி.கே.சேத் கூறி இருக்கிறார்.

    55 பயணிகளை விட்டு சென்ற பெங்களூரு-டெல்லி விமானம்

    பயணிகள் விமானத்தை முன்பதிவு செய்த முகவர் நேர மாற்றம் குறித்து அவர்களுக்கு தெரியப்படுத்தவில்லை, அதுவே இதற்கு காரணம் என்று சேத் கூறியுள்ளார். விமான நேர மாற்றம் குறித்து பயணிகளுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(DGCA) 'கோ ஃபர்ஸ்ட்' ஏர்லைன்ஸின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரிக்கு 55 பயணிகளை விட்டு சென்றதற்காக நோட்டீஸ் அனுப்பி இருந்தது. விமான நிறுவனம் தனது பதிலை DGCAக்கு சமர்பிக்க இரண்டு வார கால அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்தின் போது, 55 பயணிகளை விமான நிலைய பேருந்திலேயே காக்க வைத்துவிட்டு விமானம் சென்றுவிட்டது. அதன்பின், சுமார் 4 மணிநேரத்திற்கு பிறகு இந்த 55 பயணிகளும் இன்னொரு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    இந்திய இதிகாசங்களை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படங்களில் பட்டியல் கோலிவுட்
    அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் ஏப்ரல் 7ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு அதிமுக
    காமெடியனாக அறிமுகம் ஆகி, ஹீரோவாக கெத்து காட்டும் நடிகர்கள் கோலிவுட்
    2023-இல் வெளியாகும் மாருதி மற்றும் ஹூண்டாய் டாடா கார்கள்! கார் உரிமையாளர்கள்

    இந்தியா

    ஆப்பிள் டெவலப்பர்கள் WWDC 2023 நிகழ்வு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு! ஆப்பிள் நிறுவனம்
    ஸ்பெயின் மாஸ்டர்ஸ் 2023 : அரையிறுதிக்கு முன்னேறினார் பிவி சிந்து இந்திய அணி
    உலகளவில் தாவர பூஞ்சையால் பாதிக்கப்பட்ட முதல் இந்தியர் உலக செய்திகள்
    கேரளாவில் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரளா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023