NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாடு முழுவதும் மின் விநியோகத்தில் தட்டுப்பாடு வரக்கூடாது - மத்திய மின்சாரத்துறை
    நாடு முழுவதும் மின் விநியோகத்தில் தட்டுப்பாடு வரக்கூடாது - மத்திய மின்சாரத்துறை
    இந்தியா

    நாடு முழுவதும் மின் விநியோகத்தில் தட்டுப்பாடு வரக்கூடாது - மத்திய மின்சாரத்துறை

    எழுதியவர் Nivetha P
    March 10, 2023 | 05:43 pm 0 நிமிட வாசிப்பு
    நாடு முழுவதும் மின் விநியோகத்தில் தட்டுப்பாடு வரக்கூடாது - மத்திய மின்சாரத்துறை
    நாடு முழுவதும் மின் விநியோகத்தில் தட்டுப்பாடு வரக்கூடாது - மத்திய மின்சாரத்துறை அமைச்சர்

    நாடு முழுவதும் கோடை காலம் துவங்கிய நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இனிவரும் காலங்களில் மின்சார தேவை அதிகம் தேவைப்படும். இதனை கருத்தில் கொண்டு மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்,கே,சிங் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் நிலக்கரி அமைச்சகம், ரயில்வே அமைச்சகம், மின்சாரத்துறை ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மின்சார தேவையினை சமாளிப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, நிலக்கரி அடிப்படையிலான அனல்மின் உற்பத்தி நிலையங்களில், முன்னதாகவே தேவையான அனைத்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுமாறு மின்பயன்பாட்டு அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, இறக்குமதி நிலக்கரியை அடிப்படையாக கொண்டுள்ள மின் நிலையங்கள் மார்ச் 16ம்தேதி முதல் முழு உற்பத்தி திறனுடன் இயங்க 11ம்பிரிவின் கீழ் உத்தரவிடப்பட்டுள்ளது.

    உச்சகட்ட தேவையின் போது எரிவாயு மின்சாரம் பயன்படுத்தப்படும்

    இதனை தொடர்ந்து இந்த கூட்டத்தில் ரயில்வே வாரிய உறுப்பினர் நிலக்கரியை தடையில்லாமல் பல பகுதிகளுக்கு கொண்டு செல்ல போதுமான ரயில் பெட்டிகள் இருப்பதை உறுதி செய்து கொண்டனர். உச்சகட்ட தேவையின் போது, எரிவாயு மின்சாரம் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, ஏப்ரல், மே மாதங்களில் பற்றாக்குறை ஏற்படும் நிலையில் 9,000 மெகாவாட் எரிவாயு திறன் கொண்ட மின் நிலையங்களை இயக்க என்டிபிசி நிறுவனத்துக்கு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், அடுத்த மாத உற்பத்திக்கு போதுமான தண்ணீரை தேக்கி வைக்குமாறு புனல் மின் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய நிலக்கரி மின் நிலையங்கள் அமைக்கப்பட்டால் கூடுதலாக 2,920 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்பதால் மார்ச் மாதத்திற்குள் அவை நிறுவப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    மத்திய அரசு

    இந்தியா

    மின்வெட்டால் தான் மக்கள் தொகை அதிகரித்தது: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு காங்கிரஸ்
    CampaCola-வை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்திய ரிலையன்ஸ்! ரிலையன்ஸ்
    இந்து கோவில்கள் பிரச்சனை: ஆஸ்திரேலிய பிரதமருடன் பிரதமர் மோடி பேச்சு ஆஸ்திரேலியா
    H3N2 இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் இந்தியாவில் ஏற்பட்ட முதல் இறப்புகள் H1N1 வைரஸ்

    மத்திய அரசு

    ஏப் 1 முதல் உயரப்போகும் டோல்கேட் கட்டணம் - மத்திய அரசு அதிரடி இந்தியா
    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய தலைவராக உத்திரபிரதேச மருத்துவர் பிரசாந்த் லாவனியா நியமனம் மதுரை
    ஆதார் கார்டுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் அனைத்தும் செயலிழந்துவிடும் - மத்திய அரசு பான் கார்டு
    ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி - ஆர்ப்பாட்டம் செய்யும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023