NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாடு முழுவதும் மின் விநியோகத்தில் தட்டுப்பாடு வரக்கூடாது - மத்திய மின்சாரத்துறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாடு முழுவதும் மின் விநியோகத்தில் தட்டுப்பாடு வரக்கூடாது - மத்திய மின்சாரத்துறை
    நாடு முழுவதும் மின் விநியோகத்தில் தட்டுப்பாடு வரக்கூடாது - மத்திய மின்சாரத்துறை அமைச்சர்

    நாடு முழுவதும் மின் விநியோகத்தில் தட்டுப்பாடு வரக்கூடாது - மத்திய மின்சாரத்துறை

    எழுதியவர் Nivetha P
    Mar 10, 2023
    05:43 pm

    செய்தி முன்னோட்டம்

    நாடு முழுவதும் கோடை காலம் துவங்கிய நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

    இனிவரும் காலங்களில் மின்சார தேவை அதிகம் தேவைப்படும்.

    இதனை கருத்தில் கொண்டு மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்,கே,சிங் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

    இதில் நிலக்கரி அமைச்சகம், ரயில்வே அமைச்சகம், மின்சாரத்துறை ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் மின்சார தேவையினை சமாளிப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    அதன் ஒரு பகுதியாக, நிலக்கரி அடிப்படையிலான அனல்மின் உற்பத்தி நிலையங்களில், முன்னதாகவே தேவையான அனைத்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுமாறு மின்பயன்பாட்டு அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, இறக்குமதி நிலக்கரியை அடிப்படையாக கொண்டுள்ள மின் நிலையங்கள் மார்ச் 16ம்தேதி முதல் முழு உற்பத்தி திறனுடன் இயங்க 11ம்பிரிவின் கீழ் உத்தரவிடப்பட்டுள்ளது.

    என்டிபிசி நிறுவனத்துக்கு உத்தரவு

    உச்சகட்ட தேவையின் போது எரிவாயு மின்சாரம் பயன்படுத்தப்படும்

    இதனை தொடர்ந்து இந்த கூட்டத்தில் ரயில்வே வாரிய உறுப்பினர் நிலக்கரியை தடையில்லாமல் பல பகுதிகளுக்கு கொண்டு செல்ல போதுமான ரயில் பெட்டிகள் இருப்பதை உறுதி செய்து கொண்டனர்.

    உச்சகட்ட தேவையின் போது, எரிவாயு மின்சாரம் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு, ஏப்ரல், மே மாதங்களில் பற்றாக்குறை ஏற்படும் நிலையில் 9,000 மெகாவாட் எரிவாயு திறன் கொண்ட மின் நிலையங்களை இயக்க என்டிபிசி நிறுவனத்துக்கு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மேலும், அடுத்த மாத உற்பத்திக்கு போதுமான தண்ணீரை தேக்கி வைக்குமாறு புனல் மின் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    புதிய நிலக்கரி மின் நிலையங்கள் அமைக்கப்பட்டால் கூடுதலாக 2,920 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்பதால் மார்ச் மாதத்திற்குள் அவை நிறுவப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மத்திய அரசு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    இந்தியாவிற்கு வந்து ஆட்டோ ஓட்டிய பில் கேட்ஸ்: குதூகலத்தில் மஹிந்திரா குழுமம் இந்தியா
    திகார் சிறைக்கு மாற்றப்பட்டார் சிசோடியா: மார்ச் 20 வரை காவல் நீட்டிப்பு டெல்லி
    உலகின் மிக கடினமான மாரத்தானை ஓடி கடந்த இந்தியர் சுகந்த் சுகி விளையாட்டு
    ஹோலி விடுமுறையை முன்னிட்டு அதிகரித்திருக்கும் பெண்களின் சுற்றுலா பயணம் தமிழ்நாடு

    மத்திய அரசு

    நாசல் கொரோனா தடுப்பூசி-இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல் கோவிட் தடுப்பூசி
    பொருளாதார ஆய்வறிக்கை: 2023-24 நிதியாண்டில் ஜிடிபி 6.5 சதவீத வளர்ச்சி பதிவாகும் பட்ஜெட் 2023
    மத்திய பட்ஜெட் 2023-24: சிறப்பம்சங்கள் பட்ஜெட் 2023
    பட்ஜெட் 2023-24: நிதியமைச்சரின் சீரியஸான பட்ஜெட் உரையின் ஊடே நடைபெற்ற, சில சுவாரஸ்ய தருணங்கள் பட்ஜெட் 2023
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025