NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆப்பிரிக்க சிறுத்தைகள் விவகாரம்: மத்திய அரசுக்கு சாதகமாக பதிலளித்தது உச்ச நீதிமன்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆப்பிரிக்க சிறுத்தைகள் விவகாரம்: மத்திய அரசுக்கு சாதகமாக பதிலளித்தது உச்ச நீதிமன்றம் 
    இந்த சிறுத்தைகளால் இதுவரை நான்கு குட்டிகள் இந்தியாவில் பிறந்துள்ளன.

    ஆப்பிரிக்க சிறுத்தைகள் விவகாரம்: மத்திய அரசுக்கு சாதகமாக பதிலளித்தது உச்ச நீதிமன்றம் 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 07, 2023
    02:40 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆப்பிரிக்க சிறுத்தைகள் இந்தியாவில் உயிரிழந்ததால் எழுந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், இந்தியாவில் சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்தை கேள்வி கேட்க எந்த காரணமும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று(ஆகஸ்ட் 7) தெரிவித்துள்ளது.

    ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இந்தியாவின் குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டுவரப்பட்ட 20 சிறுத்தைகளில் 9 சிறுத்தைகள் உயிரிழந்ததை அடுத்து, இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவுக்கு பதிலளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரசாங்கத்தை கேள்வி கேட்க எந்த காரணமும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

    எனினும், சிறுத்தைகள் எதனால் உயிரிழந்தன என்ற "பொது அக்கறை" கேள்விக்கு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசை கேட்டுக் கொண்டது.

    டிஜில்

    இந்தியாவில் பிறநத 4 குட்டிகளில் 3 குட்டிகள் உயிரிழந்துவிட்டன 

    1952இல் ஆசிய சிறுத்தைகள் இந்தியாவில் மொத்தமாக அழிந்துவிட்டன.

    அது போன்ற சிறுத்தைகளை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்த 'பிராஜெக்ட்-சீட்டா' என்ற திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது.

    இதனையடுத்து, நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து 20 சிறுத்தைகள் மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டது.

    இந்த சிறுத்தைகளால் இதுவரை நான்கு குட்டிகள் இந்தியாவில் பிறந்துள்ளன.

    அப்படி பிறந்த முதல் மூன்று குட்டிகள் உட்பட 9 சிறுத்தைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்தன.

    இதற்கிடையில், இந்த திட்டத்தை வழிநடத்தும் குழுவில் உறுப்பினர்களாக இருக்கும் ஆப்பிரிக்க நிபுணர்கள், சமீபத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு எழுதிய கடிதத்தில் திட்ட மேலாண்மை குறித்து கடுமையான கவலைகளை எழுப்பி இருந்தனர்.

    இந்நிலையில், தற்போது உச்சநீதிமன்றம் இது குறித்து பேசியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உச்ச நீதிமன்றம்
    மத்திய அரசு

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் கொரோனா
    முதல் காலாண்டில் 35% வரை சரிந்த என்எல்சி இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம் வணிகம்
    இனி தங்கும் விடுதிகளில் வழங்கப்படும் சேவைகளுக்கு 12% ஜிஎஸ்டி வரி கட்டாயம் ஜிஎஸ்டி
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் கொரோனா

    உச்ச நீதிமன்றம்

    ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கிற்கு இன்று தீர்ப்பு அளிக்கிறது உச்சநீதிமன்றம்  தமிழ்நாடு
    ஜல்லிக்கட்டு குறித்த தீர்ப்பு வெளியானது - தமிழக அரசு இயற்றிய அவசர சட்டம் செல்லும்  ஜல்லிக்கட்டு
    ஜல்லிக்கட்டு வெற்றி விழாவினை கொண்டாடுவோம் - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  ஜல்லிக்கட்டு
    உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற கே.வி.விஸ்வநாதன் உயர்ந்த கதை  டெல்லி

    மத்திய அரசு

    வந்தே பாரத் ரயில் நிறத்தில் திடீர் மாற்றம் - மத்திய ரயில்வேத்துறை  வந்தே பாரத்
    GST வலைப்பின்னலை பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தது மத்திய அரசு இந்தியா
    மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்ட ஸ்கேனர்களை விமான நிலையங்களில் பொருத்த முடிவு விமான சேவைகள்
    வேதாந்தாவுடன் கூட்டு முயற்சியில் இருந்து விலகும் ஃபாக்ஸ்கானின் முடிவு; இந்தியாவிற்கு பின்னடைவு இல்லை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025