NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அதிமுக-பாஜக இடையே எவ்வித பிரச்சனையும் இல்லை : பரபரப்பு பேட்டியளித்த அண்ணாமலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    அதிமுக-பாஜக இடையே எவ்வித பிரச்சனையும் இல்லை : பரபரப்பு பேட்டியளித்த அண்ணாமலை
    அதிமுக-பாஜக இடையே எவ்வித பிரச்சனையும் இல்லை : பரபரப்பு பேட்டியளித்த அண்ணாமலை

    அதிமுக-பாஜக இடையே எவ்வித பிரச்சனையும் இல்லை : பரபரப்பு பேட்டியளித்த அண்ணாமலை

    எழுதியவர் Nivetha P
    Sep 21, 2023
    06:32 pm

    செய்தி முன்னோட்டம்

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று(செப்.,21) செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

    அப்போது அவர் பேசுகையில், "எனது அரசியலில் நான் தெளிவாக இருக்கிறேன். எனக்கு தன்மானம் என்பது மிக அவசியம்" என்றும்,

    "அதிமுக-பாஜக இடையே எவ்வித பிரச்சனையும் இல்லை. அதிமுகவில் உள்ள சில தலைவர்களுக்கும் எனக்கும் பிரச்சனை உள்ளதா? என்றால் இருக்கலாம். ஆனால் நான் யாரையும் தவறாக பேசவில்லை" என்றும் கூறியுள்ளார்.

    தொடர்ந்து, கூட்டணி குறித்த கேள்விகளுக்கு தன்னால் பதிலளிக்க முடியாது என்று கூறிய அண்ணாமலை, பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவிப்போருக்கு தானும் ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

    அதில் மாற்று கருத்தே இல்லை என்றும் அவர் கூறியது குறிப்பிடவேண்டியவை.

    அண்ணாமலை 

    அண்ணா குறித்து பேசியதற்கு மன்னிப்பு கோர முடியாது - அண்ணாமலை 

    அதனை தொடர்ந்து அவர், "மத்தியில் பிரதமர் மோடி, மாநிலத்தில் முதல்வராக எடப்பாடி கே பழனிசாமியை பாஜக அறிவிக்க வேண்டும் என்று செல்லூர் ராஜு கூறுகிறார். அது எப்படி சாத்தியம் என்று எனக்கு தெரியவில்லை. பாஜக தலைமைதான் இதற்கு பதில் அளிக்க வேண்டும்" என்று கூறினார்.

    மேலும் அவர், அண்ணா குறித்து தான் என்றும் விமர்சனம் செய்ததும் இல்லை, எதிர்த்ததும் இல்லை என்று கூறியுள்ளார்.

    இதனையடுத்து அவர், "குடும்ப அரசியலை விமர்சித்தவர் அண்ணா. தமிழகத்தை பொருத்தவரையில் காங்கிரஸ் குரலும் திமுக'வின் குரலும் ஒன்றுதான்" என்று பேசியுள்ளார்.

    அதேபோல் அவர், அண்ணா குறித்து பேசியதற்கு மன்னிப்பு கோர முடியாது என்றும், வரலாற்றில் உள்ளதை எடுத்து சொல்ல வேண்டியது தனது கடமை என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாஜக
    அண்ணாமலை
    அதிமுக
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பாஜக

    பாஜக நடத்துவது பாத யாத்திரை அல்ல... பாவ யாத்திரை - மு.க.ஸ்டாலின் பேச்சு திமுக
    நாடாளுமன்றம்: நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் நடைபெறும்  மக்களவை
    டெல்லி அவசர சட்டம் தொடர்பான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு  தாக்கல் செய்தது டெல்லி
    ஓ.பன்னீர் செல்வத்தினை ஒதுக்கவில்லை - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஓ.பன்னீர் செல்வம்

    அண்ணாமலை

    அதிமுக போல் தரம் தாழந்த கருத்துக்களை முன்வைக்க விரும்பவில்லை - அண்ணாமலை பதிலடி  எடப்பாடி கே பழனிசாமி
    'திமுக ஃபைல்ஸ்' அவதூறு வழக்கு: பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சம்மன்  தமிழ்நாடு
    அண்ணாமலையை வைத்து திருமண விழா நடத்திய அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்  எடப்பாடி கே பழனிசாமி
    பாதயாத்திரை மேற்கொள்ளும் பாஜக அண்ணாமலை - தேமுதிக'விற்கு அழைப்பு  தேமுதிக

    அதிமுக

    பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு  மத்திய அரசு
    அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு  போக்குவரத்து காவல்துறை
    அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்  தமிழ்நாடு
    கவர்னர் மாளிகையினை நோக்கி எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் அதிமுக பேரணி  திமுக

    பிரதமர் மோடி

    பிரதமர் மோடி 9 ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கவில்லை இந்தியா
    இந்தியாவின் பெயரை 'பாரதம்' என்று மாற்ற பாஜக அரசு நடவடிக்கை  இந்தியா
    இன்று இந்தோனேசியா செல்கிறார் பிரதமர் மோடி: ஆசியான் உச்சி மாநாடு எதற்காக நடத்தப்படுகிறது? இந்தியா
    பிரதமரின் பாதுகாப்புக்கு பொறுப்பான பாதுகாப்பு குழுவின் இயக்குநர் அருண்குமார் சின்ஹா ​​காலமானார் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025