NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / NEET-UG மறுதேர்வு கிடையாது; முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    NEET-UG மறுதேர்வு கிடையாது; முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு 

    NEET-UG மறுதேர்வு கிடையாது; முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 23, 2024
    06:36 pm

    செய்தி முன்னோட்டம்

    நீட்-யுஜி தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்ததுள்ளது.

    தேர்வுதாள் கசிவு நடந்தது என்பதை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

    புதிதாக நீட்-யுஜிக்கு மறுதேர்வு வைப்பது, தேர்வெழுதிய 24 லட்சம் மாணவர்கள் மீது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    வினாத்தாள் கசிவு மற்றும் பிற முறைகேடுகள் நடந்ததாக கூறி இந்த ஆண்டு மே 5 ஆம் தேதி நடத்தப்பட்ட நீட்-யுஜி தேர்வுக்கு மறுதேர்வு வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இதற்காக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இந்திய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு இன்று விசாரித்தது.

    இந்தியா 

    வினாத்தாள் கசிந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை

    இதற்கான தீர்ப்பை வழங்கிய தலைமை நீதிபதி சந்திரசூட், தேசிய தேர்வு முகமை அளித்த தரவுகளையும், ஐஐடி மெட்ராஸின் அறிக்கையையும் நீதிமன்றம் ஆய்வு செய்ததாக கூறினார்.

    மேலும், வினாத்தாள் கசிந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

    "இந்த கட்டத்தில், தேர்வில் முறைகேடுகள் நடந்தது என்பதையும், தேர்வின் புனிதத்தன்மைக்கு பங்கம் நடந்துள்ளது உள்ளது என்பதையும் நிரூபிப்பதற்கு ஆவணங்கள் எதுவும் இல்லை," என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

    மறுதேர்வு நடத்துவது, பரீட்சையை எழுதிய பல மாணவர்களின் வாழ்வில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற உண்மையை நீதிமன்றம் கவனத்தில் கொண்டுள்ளது என்றும் தலைமை நீதிபதி கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உச்ச நீதிமன்றம்
    நீட் தேர்வு

    சமீபத்திய

    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்
    முதன்முறையாக 90 மீட்டருக்கும் மேல்... தோஹா டயமண்ட் லீக்கில் புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா
    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்

    உச்ச நீதிமன்றம்

    நீதித்துறைக்கு அரசியல் அழுத்த அச்சுறுத்தல்: தலைமை நீதிபதிக்கு 600 வழக்கறிஞர்கள் கடிதம் இந்தியா
    பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரங்கள் தொடர்பாக ராம்தேவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் பதஞ்சலி
    அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி துறை முறைகேடு வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தடை வீட்டு வசதி வாரியம்
    பதஞ்சலி ராம்தேவின் மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு பதஞ்சலி

    நீட் தேர்வு

    ஏழை பழங்குடியின இளைஞரின் மருத்துவ கனவு - கடந்து வந்த பாதை  ஒடிசா
    ஒரே நாளில் 2 நீட் மாணவர்கள் தற்கொலை: ராஜஸ்தானின் கோட்டாவில் என்ன நடக்கிறது? ராஜஸ்தான்
    முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தகுதி மதிப்பெண் ரத்து - இந்திய மருத்துவ கவுன்சில்  மத்திய அரசு
    தொடரும் NEET தற்கொலைகள்: கோட்டாவில் நீட் பயிற்சி பெற்று வந்த மாணவன் தற்கொலை ராஜஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025