NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருவள்ளுவர் பிறந்ததின சர்ச்சை: சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருவள்ளுவர் பிறந்ததின சர்ச்சை: சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
    சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

    திருவள்ளுவர் பிறந்ததின சர்ச்சை: சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 19, 2024
    03:08 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை உயர்நீதிமன்றம், "திருவள்ளுவர் பிறந்த தினம் இதுதான் என உத்தரவிட முடியாது" எனத் தெரிவித்துள்ளது.

    தை 2 ஆம் தேதி திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுவதாக எதிர்த்து, திருவள்ளுவர் திருநாள் கழகத்தின் தலைவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    1935-ம் ஆண்டு நடைபெற்ற கருத்தரங்கில், மறைமலையடிகள் போன்ற தமிழறிஞர்கள், வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில் திருவள்ளுவர் பிறந்ததாக குறிப்பிட்டனர்.

    மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோயிலில், அந்த நாளில் தான் விழா கொண்டாடப்படுகிறது என்றும் மனுதாரர் குறிப்பிட்டார்.

    ஆனால், அரசு தரப்பில், தை 2-ஆம் தேதியை திருவள்ளுவர் பிறந்த நாளாக அறிவிக்கவில்லை எனக் கூறி, திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்படும் விதம் பற்றிய வாதம் முன்வைக்கப்பட்டது.

    தள்ளுபடி

    வழக்கினை தள்ளுபடி செய்த நீதிபதி 

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, திருவள்ளுவர் பிறந்தநாள் எது என்று அறுதியிட்டு கூற எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில், வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தை, அவரது பிறந்தநாளாக அறிவிக்கும்படி உத்தரவிட முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    மேலும் திருவள்ளுவரின் பிறந்தநாளை கண்டுபிடிக்க நீதிமன்றமே ஆராய்ச்சியில் இறங்கியதாகவும், அது குறித்து தீர்க்கமான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

    அவற்றுடன், மனுதாரர் சார்ந்த அமைப்பு, வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தை திருவள்ளுவர் பிறந்த தினமாக கொண்டாட எந்த தடையும் இல்லை என்றும் தெளிவுப்படுத்தினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை உயர் நீதிமன்றம்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    சென்னை உயர் நீதிமன்றம்

    'வெள்ளம் வந்தாலும் மும்பை நீதிமன்றங்கள் செயல்படும்': சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் சர்ச்சை கருத்து உயர்நீதிமன்றம்
    அமைச்சர் பொன்முடி விடுதலையை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் திமுக
    வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு - அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை உயர்கல்வித்துறை
    அமைச்சர் பொன்முடி வகித்த துறைகள் அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் ஆர்.காந்திக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு  சிறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025