NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சட்டசபையில் கொச்சையாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சட்டசபையில் கொச்சையாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் 
    முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

    சட்டசபையில் கொச்சையாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் 

    எழுதியவர் Sindhuja SM
    Nov 08, 2023
    12:05 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று பிற்பகல் பீகார் சட்டசபையில் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் பெண் கல்வியின் பங்கு குறித்து பேசும் போது, "இழிவான" மற்றும் "கொச்சையான" சொற்களை பயன்படுத்தியதற்காக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று மன்னிப்பு கேட்டார்.

    பெண்களை அவமதிப்பதற்காக தான் அப்படி பேசவில்லை என்றும், தனது வார்த்தைகள் யாரையாவது புண்படுத்தியிருந்தால் அவர்கள் தன்னை மன்னித்துவிட வேண்டும் என்றும் முதல்வர் நிதிஷ் குமார் இன்று செய்தியர்களிடம் பேசும் போது கூறினார்.

    பீகாரின் கருவுறுதல் விகிதம் ஏன் 4.2ல் இருந்து 2.9 சதவீதமாக குறைந்துள்ளது என்பதை முதல்வர் நிதிஷ் குமார் நேற்று சட்டசபையில் விளக்கினார்.

    அப்படி விளக்கும் போது, அவர் பாலியல் ரீதியான விவரங்களை விவரித்து பேசியதாகவும், கைகளால் சில கொச்சையான சைகைகளை செய்து காட்டியதாகவும் கூறப்படுகிறது.

    லாட்ஜ்

    'முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்': தேசிய மகளிர் ஆணையம்

    ஒரு படித்த திருமணமான பெண் தான் கருவுறாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதை அவர் நேற்று சட்டசபையில் விளக்கிய போது, பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சிக்கு உள்ளானதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

    அவரது இந்த உரையை "வெட்கக்கேடானது" மற்றும் "கொச்சையானது" என்று பாஜக, NCW உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்துள்ளன.

    இதற்கிடையில், இந்த விவகாரத்தில் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

    இந்த விஷயம் குறித்து பேசிய பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், பாலியல் கல்வி பற்றி முதல்வர் பேசியதாக கூறினார்.ஆனால், பாஜக உள்ளிட்ட கட்சிகள் முதல்வர் நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சித்து வந்தன. இந்நிலையில், தனது கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பீகார்
    பாஜக
    நிதிஷ் குமார்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    பீகார்

    பீகார் பாலம் இடிந்து விழுந்ததற்கு முதல்வர் நிதிஷ் குமார் அளித்த பதில் இந்தியா
    முகங்களை அடையாளம் கண்டு கள்ள ஓட்டுகளை தடுக்கும் புதிய தொழிநுட்பம் இந்தியா
    கலைஞர் கோட்டம் திறப்பு விழா - பீகார் முதல்வரின் தமிழக வருகை திடீர் ரத்து  கருணாநிதி
    தேசியளவிலான எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம் - பாட்னா செல்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்

    பாஜக

    அதிமுக-பாஜக இடையே எவ்வித பிரச்சனையும் இல்லை : பரபரப்பு பேட்டியளித்த அண்ணாமலை அண்ணாமலை
    மோடி கூறிய 5-Tக்கு பதில் 5-c தான் ஆட்சியில் நடக்கிறது - முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் மோடி
     உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.25 கோடி - தொகையை உயர்த்திய அயோத்தி சாமியார் உதயநிதி ஸ்டாலின்
    நாளை கூடும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - கூட்டணி குறித்த முடிவு எடுக்கப்படுமா? அதிமுக

    நிதிஷ் குமார்

    பீகாரில் 30 பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்து விபத்து பீகார்
    இந்தியா கூட்டணியில் தொய்வா? பீகார் முதல்வருடன் உரையாடிய மல்லிகார்ஜுன கார்கே  மல்லிகார்ஜுன் கார்கே
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025