NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நிபா வைரஸ்: இறந்தவரின் தோப்புக்குள் வௌவால்கள் காணப்படுவதாக தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நிபா வைரஸ்: இறந்தவரின் தோப்புக்குள் வௌவால்கள் காணப்படுவதாக தகவல்
    நிபா வைரஸ்: இறந்தவரின் தோப்புக்குள் வௌவால்கள் காணப்படுவதாக தகவல்

    நிபா வைரஸ்: இறந்தவரின் தோப்புக்குள் வௌவால்கள் காணப்படுவதாக தகவல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 15, 2023
    02:44 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில், சென்ற வாரத்தில், கேரளாவின் கோழிக்கோட்டில், ஒருவருக்கு நிபா வைரஸ் இருப்பது முதல்முதலில் கண்டறியப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக, இருவர் மரணமடைந்துள்ளனர், மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக நேற்று கூறப்பட்டது.

    இன்றைய சுகாதாரத்துறையின் அறிக்கைப்படி, 6 நபர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், ஆகஸ்ட் 30ம் தேதி உயிரிழந்த இந்த தொற்றின் பாதிப்பால் இறந்த 47 வயது நபரின் வீட்டு தோட்டத்தில், வௌவால்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    அந்த தோட்டத்தில் வாழை மரங்கள் நிறைந்து இருப்பதாலும், அவர் வீடு அமைந்திருக்கும் இடத்திற்கு அருகே ஒரு அடர்ந்த வானம் இருப்பதாகவும், அங்கேயும் நிறைய வௌவால்கள் இருப்பதாகவும் சுகாதாரத்துறையினர் கூறியுள்ளனர்.

    card 2

    வௌவால்கள் மூலம் பரவும் வைரஸ்

    தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வௌவ்வால்களின் எச்சங்கள், மருத்துவ ஆராய்ச்சிக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதன் பின்னரே இந்த தொற்றுக்கான ஆரம்பப்புள்ளி கண்டறியப்படும்.

    மேலே குறிப்பிட்ட அந்த வனத்தில் காணப்பட்ட வௌவ்வால்களிடம் தான் சென்றமுறையும் நிபா வைரஸ் படிமங்கள் காணப்பட்டது என செய்திகள் கூறுகின்றன.

    பாதிக்கப்பட்ட அந்த நபர், வளைகுடா நாட்டில் கடை நடத்தி வந்ததாகவும், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை நோய்வாய்ப்பட்டதால் கேரளாவுக்கு திரும்பியதாகவும் கூறுகிறார்கள்.

    அதன்பின்னர், அவரது தோட்டத்திலேயே விவசாயத்தை பார்த்துக்கொண்டு, இங்கேயே தங்கிவிட்டதாக தெரிகிறது.

    நிபா வைரஸ், வௌவால்கள் கடித்த பழங்கள் மூலமாகவோ, அவற்றின் எச்சங்களை தொடுவதாலோ பரவுவதால், தற்போது பழ வியாபாரிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    card 3

    ஸ்கெட்ச் போட்டு தூக்கும் சுகாதாரத்துறை

    இதற்கிடையில், புதன்கிழமை அன்று, கேரளாவின் சுகாதாரத் துறை பாதிக்கப்பட்ட இருவரின் 'வழி வரைபடங்களை' வெளியிட்டது.

    அதன்படி, இறந்த நபருக்கு, ஆகஸ்ட் 22 ஆம் தேதி அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்தன. 23 ஆம் தேதி, அவர் ஒரு குடும்ப விழாவில் கலந்துகொண்டு, 25 ஆம் தேதி வங்கிக்குச் சென்றார்.

    அதே நாளில், அவர் அருகிலுள்ள மசூதியில் பிரார்த்தனை செய்தார். அவர் ஆகஸ்ட் 30 அன்று ஒரு தனியார் மருத்துவமனையில் இறப்பதற்கு முன், இரண்டு வெவ்வேறு கிளினிக்குகளுக்குச் சென்றுள்ளார்.

    இதுமட்டுமன்றி, அவர் இறந்தபோது, ​​அது இயற்கை மரணம் என்று நினைத்து பலரும், சிறு வயதிலேயே இறந்துபோனாரே என்ற ஆற்றாமையினாலும், அவரது இறுதிச் சடங்கில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    தற்போது அவர்கள் அனைவரையும் தனிமை படுத்தியுள்ளது சுகாதாரத்துறை

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நிபா வைரஸ்
    வைரஸ்
    கேரளா

    சமீபத்திய

    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா
    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா

    நிபா வைரஸ்

    கேரளத்தில் பயங்கரமான நிபா வைரஸால் பரபரப்பு: 7 கிராமங்களில் பள்ளிகள், வங்கிகள் மூடல்  கோழிக்கோடு
    அச்சுறுத்தும் நிபா வைரஸ்: அறிகுறிகளும், தற்காப்பு நடவடிக்கைகளும் என்ன ஆரோக்கியம்
    கேரளாவில் நிபா வைரஸ்: 5 பேருக்கு பாதிப்பு உறுதி, தொடர்பு பட்டியலில் 700 பேர் கேரளா

    வைரஸ்

    'மெட்ராஸ் - ஐ' பருவகாலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடதாவை தூக்கம்
    கர்நாடகாவில் பரவும் ஜிகா வைரஸ் - 5 வயது சிறுமிக்கு தொற்று உறுதி இந்தியா
    மகாராஷ்டிராவில் தட்டம்மை நோய் பரவலைக் கட்டுப்படுத்த போதுமான அளவு தடுப்பூசிகள் வேண்டும் - எம்.பி. வேண்டுகோள் இந்தியா
    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்

    கேரளா

    அரிக்கொம்பன் யானை தாக்கி சிகிச்சைப்பெற்ற நபர் உயிரிழப்பு  தமிழ்நாடு
    'பைபர்ஜாய்' புயலால் கேரள பருவமழை பாதிக்கப்படலாம்: வானிலை ஆய்வு மையம்  இந்தியா
    'பிப்பர்ஜாய்' புயல் அடுத்த 36 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும் இந்தியா
    கேரளாவில் இருந்து புறப்பட்டது முதல் பெண்கள் ஹஜ் விமானம்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025