NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை மெட்ரோ குறித்த புதிய அப்டேட் கொடுத்த அதிகாரிகள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை மெட்ரோ குறித்த புதிய அப்டேட் கொடுத்த அதிகாரிகள் 
    சென்னை மெட்ரோ குறித்த புதிய அப்டேட் கொடுத்த அதிகாரிகள்

    சென்னை மெட்ரோ குறித்த புதிய அப்டேட் கொடுத்த அதிகாரிகள் 

    எழுதியவர் Nivetha P
    Sep 08, 2023
    07:11 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை மாநகரில் செயல்படுத்தப்பட்டுள்ள மெட்ரோ ரயில் சேவை மக்களை போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பயணம் மேற்கொள்ள பேருதவியாக உள்ளது.

    இதனால் இதில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

    இதனைத்தொடர்ந்து தற்போது சென்னையில் 2ம்கட்ட மெட்ரோப்பணிகள் ரூ.63,246 கோடி செலவில் நடந்து வருகிறது.

    இந்நிலையில் சென்னையின் புறநகர் பகுதிகளையும் இணைக்க மெட்ரோ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அதன்படி, 2ம்-கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம் பால் பண்ணை பகுதியிலிருந்து சிறுசேரி வரையான 3ம் வழித்தடத்தினை கிளம்பாக்கம் வரை நீட்டிக்கலாம் என்றும், பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் வரையிலான 4ம் வழித்தடம் பரந்தூர் வரையும், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரையிலான 5ம் வழித்தடத்தினை கோயம்பேட்டிலிருந்து ஆவடி வரை நீட்டிக்கவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    மெட்ரோ 

    அரசு ஒப்புதல் அளித்த பின்னரே விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் 

    இந்நிலையில், தற்போது இதற்கான சாத்தியக்கூறு குறித்த அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது என்று கூறப்படுகிறது.

    அதன்படி, கோயம்பேட்டில் இருந்து ஆவடி வரை மற்றும் சிறுசேரியில் இருந்து கிளம்பாக்கம் வரையிலான 2 வழித்தடங்கள் நீட்டிப்பு குறித்த சாத்தியக்கூறு அறிக்கை அடுத்த 2 வாரங்களில் முடிக்கப்பட்டு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மெட்ரோ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    இந்த மெட்ரோ விரிவாக்க திட்டத்தில், கோயம்பேடு-ஆவடி வழித்தடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில், சாத்தியக்கூற்றுக்கான அறிக்கையில் செலவினங்கள், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட முழு விவரங்கள் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே சாத்தியக்கூறு அறிக்கைக்கு அரசு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், விரிவான திட்ட அறிக்கையானது தயார் செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    மெட்ரோ

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    சென்னை

    ஆகஸ்ட் 16 முதல் சென்னையில் சர்வதேச கோல்ஃப் ப்ரோ சாம்பியன்ஷிப் போட்டி இந்தியா
    இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் ட்ரோன் சோதனை மையம்  தமிழ்நாடு
    சென்னையில் கட்டமைக்கப்படவிருக்கும் புதிய F4 ஸ்ட்ரீட் சர்க்யூட் ஃபார்முலா ஒன்
    சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு  செந்தில் பாலாஜி

    மெட்ரோ

    நள்ளிரவு வரை மெட்ரோ சேவைகளை தொடர சென்னை மெட்ரோ நிர்வாகம் முடிவு? சென்னை
    சென்னை மெட்ரோ ரயில் பார்க்கிங் கட்டணம் உயர்வு - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு சென்னை
    மதுரை மெட்ரோ: 27 ஸ்டேஷன்களுடன், 32 கி.மீ., வரை நீடிக்கப்படுவதாக அறிவிப்பு  மதுரை
    திருமங்கலம் மெட்ரோ பயணிகளுக்காக மினி பஸ் மற்றும் மின்சார ஆட்டோ சேவை அறிமுகம்  சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025