NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வளர்ந்த இந்தியாவிற்காக புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுகிறது: பிரதமர் மோடி
    வளர்ந்த இந்தியாவிற்காக புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுகிறது: பிரதமர் மோடி
    இந்தியா

    வளர்ந்த இந்தியாவிற்காக புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுகிறது: பிரதமர் மோடி

    எழுதியவர் Sindhuja SM
    April 12, 2023 | 05:37 pm 1 நிமிட வாசிப்பு
    வளர்ந்த இந்தியாவிற்காக புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுகிறது: பிரதமர் மோடி
    ஆசிரியர் பணி போன்ற முக்கிய பணிகளில் புதிதாக சேரவுள்ள இளைஞர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

    நவீன மற்றும் வளர்ந்த இந்தியாவின் தேவைகளை மனதில் கொண்டு புதிய தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப் 12) தெரிவித்தார். குழந்தைகளின் வளர்ச்சி, அறிவு, திறன்கள், மற்றும் இந்திய கலாச்சாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் இந்த கல்வி கொள்கை கவனம் செலுத்துகிறது என்றும் அவர் கூறினார். "நவீன மற்றும் வளர்ந்த இந்தியாவின் தேவைகளை கருத்தில் கொண்டு புதிய தேசிய கல்விக் கொள்கையை(NEP) மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது" என்று மத்தியப் பிரதேசத்தில் நடந்த ஆசிரியர்கள் நியமன நிகழ்ச்சியில் உரையாற்றும் போது பிரதமர் தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தில் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதற்கான பிரச்சாரம் வேகமாக நடந்து வருவதாகவும், பல்வேறு மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

    மத்தியப் பிரதேசத்தின் கல்வித் தரம் உயர்ந்துள்ளது: மோடி 

    மேலும், ஆசிரியர் பணி போன்ற முக்கிய பணிகளில் புதிதாக சேரவுள்ள இளைஞர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். NEP-ஐ திறம்பட செயல்படுத்துவதில் ஆசிரியர்களின் முக்கிய பங்கை எடுத்துரைத்த பிரதமர், மத்தியப் பிரதேசத்தில் நடத்தப்படும் மாபெரும் ஆசிரியர் வேலைவாய்ப்பு முகாம்கள் இளைஞர்களுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரும் வாய்ப்பு என்றும் கூறினார். இன்று நியமிக்கப்படும் ஆசிரியர்களில் பாதி பேர் பழங்குடியினப் பகுதிகளில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும், இதனால் பல குழந்தைகள் பயனடைவார்கள் என்றும் மோடி தெரிவித்தார். மேலும், மத்தியப் பிரதேச அரசு இந்த ஆண்டு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்களில் பணி நியமனம் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், இதனால், மாநிலத்தின் கல்வித் தரம் உயர்ந்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    மத்திய பிரதேசம்
    மோடி
    நரேந்திர மோடி
    பிரதமர் மோடி

    இந்தியா

    உயிரிழந்த 2 உடல்கள் - வேறு வேறு முகவரிக்கு அனுப்பிய கொரியர் நிறுவனம் ராஜஸ்தான்
    இன வெறுப்பு: இந்திய-இஸ்லாமியர்களை விரட்டிவிட்ட சிங்கப்பூர் சூப்பர் மார்க்கெட்  சிங்கப்பூர்
    ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ள முடியும்?  அரசின் விதிமுறைகள் தங்கம் வெள்ளி விலை
    ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2023 : வெள்ளி வென்றார் நிஷா தஹியா இந்திய அணி

    மத்திய பிரதேசம்

    ஆசிரியர்களின் அலட்சியம்: சூடான குழம்பு சட்டிக்குள் விழுந்த 5 வயது சிறுமி  இந்தியா
    மத்தியபிரதேசத்தில் நர்மதா ஆற்றில் நடந்து சென்ற மூதாட்டி - கடவுள் என நினைத்து வழிபட்ட மக்கள் வைரல் செய்தி
    மத்திய பிரதேசத்தில் ஆயிரத்தில் சம்பளம் வாங்கும் நபருக்கு கோடியில் வருமான வரி விதிப்பு மாநில அரசு
    இந்தூர் கோவில் விபத்து: உயிரிழந்த 8 பேரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன இந்தியா

    மோடி

    உக்ரைனுக்கு உதவி தேவை: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய உக்ரைன் அதிபர்  இந்தியா
    இந்தியாவில் டெஸ்லா உற்பத்தியை தொடங்க திட்டமா? மோடியை பின் தொடர்ந்த எலான் மஸ்க்!  எலான் மஸ்க்
    ஆசியாவின் மிக நீளமான சுரங்கப்பாதை உருவாக்கம் - முக்கிய நோக்கம் என்ன? உலகம்
    இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 3,167ஆக உயர்வு: 2018ஐ விட 200 புலிகள் அதிகரிப்பு இந்தியா

    நரேந்திர மோடி

    ஊழியர்கள் சிறை செல்வார்கள்... இந்திய சட்டங்கள் குறித்து எலான் மஸ்க் பதில்!  எலான் மஸ்க்
    தெலுங்கானா மாநில அரசு ஒத்துழைக்க மறுக்கிறது: பிரதமர் மோடி காட்டம் மோடி
    நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் அறிமுகம் இந்தியா
    நாட்டில் ஏழைகள் ஏழையாகி கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடியை சாடிய கபில் சிபல் இந்தியா

    பிரதமர் மோடி

    சென்னை ஒருங்கிணைந்த விமான நிலைய முனையத்தின் அதிநவீன வசதிகள் ஓர் பார்வை இந்தியா
    சென்னை ராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி உரை மெரினா கடற்கரை
    பிரதமர் மோடி சென்னை-கோவை வந்தே பாரத் ரயிலினை கொடியசைத்து துவக்கி வைத்தார் வந்தே பாரத்
    நிலக்கரி சுரங்கத்திட்ட பட்டியல் - தமிழக டெல்டா பகுதிகளை நீக்கிய மத்திய அரசு மத்திய அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023