NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரேஷன் கார்டுகளுக்கு புதிய எஸ்.எம்.எஸ். வசதி அறிமுகம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரேஷன் கார்டுகளுக்கு புதிய எஸ்.எம்.எஸ். வசதி அறிமுகம் 
    ரேஷன் கார்டுகளுக்கு புதிய எஸ்.எம்.எஸ். வசதி அறிமுகம்

    ரேஷன் கார்டுகளுக்கு புதிய எஸ்.எம்.எஸ். வசதி அறிமுகம் 

    எழுதியவர் Nivetha P
    May 19, 2023
    02:31 pm

    செய்தி முன்னோட்டம்

    நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர குடும்பங்களின் அத்தியாவசிய தேவையினை பூர்த்திச்செய்யும் வகையில் மாநில அரசு ரேஷன் கடைகளை நடத்தி வருகிறது.

    மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒத்துழைப்பால் அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், பருப்பு போன்ற பொருட்கள் மக்களுக்கு குறைந்தவிலையில் அளிக்கப்பட்டு வருகிறது.

    இதில் குறிப்பாக தமிழ்நாடு மாநிலத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள் சிறப்பாக செயல்பட்டு வருவதாக மக்கள் மத்தியில் கூறப்படுகிறது.

    மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரேஷன் கார்டுகளை அடிப்படையாக வைத்தே பொங்கல் பரிசு, கூடுதல் உணவுப்பொருள் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    எனினும், கடைகளுக்கு சென்று வாங்குவதில் மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகளுக்கு சிரமம் ஏற்பட கூடாது என்று நடமாடும் நியாய விலை கடைகள் அறிமுகம் செய்யப்பட்டன.

    ரேஷன் 

    புகார்கள் தெரிவிக்க கட்டணமில்லா இலவச தொலைபேசி எண் அறிவிப்பு 

    அதன்படி, ரேஷன் கடைகளில் பதிவுசெய்துள்ள மொபைல் எண்ணில் PDS 102 என்று குறிப்பிட்டு 9773904050 என்னும் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவேண்டும்.

    அப்படி அனுப்பினால் ரேஷன் கடைகள் திறந்துள்ளதா இல்லையா என்று தெரிந்துக்கொள்ளலாம்.

    அதே போல் PDS 101 என்னும் எண்ணுக்கு 9773904050 என்னும் எண்ணுக்கு அனுப்பினால் கடையில் உள்ள பொருளின் இருப்புகள் குறித்த விவரத்தினை பெற்றுக்கொள்ளலாம்.

    இதன் மூலம் மக்கள் கடை திறந்திக்கிறதா, என்னென்ன பொருட்கள் உள்ளது என்பதை வீட்டில் இருந்தபடியே தெரிந்துக்கொள்ளலாம்.

    கடைக்கு சென்று காலி பையுடன் திரும்பவேண்டிய அவசியம் இருக்காது.

    இதனையடுத்து பொது விநியோக திட்ட பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்குதல் குறித்த புகாரினை அளிக்க 18005995950 என்னும் இலவச தொலைபேசி எண்ணினை தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மாநில அரசு

    சமீபத்திய

    இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது: அதற்கான காரணம் இதோ! தங்க விலை
    செரிமான ஆரோக்கியத்திற்கு உதவும் கொத்தமல்லி: அவற்றின் ஆச்சரியமான நன்மைகளை பற்றி தெரிந்துகொள்வோமா? ஆரோக்கியமான உணவு
    கொடைக்கானலுக்கு ட்ரிப் போக ஐடியாவா? அப்போ இந்த டேட்ஸ்-ஐ மிஸ் பண்ணிடாதீங்க! கொடைக்கானல்
    'ஆபரேஷன் சிந்தூர்'-இல் சொந்தங்களை இழந்த தீவிரவாதி மசூத் அசாருக்கு பாகிஸ்தான் அரசு இழப்பீடு வழங்கும் எனத்தகவல் ஆபரேஷன் சிந்தூர்

    தமிழ்நாடு

    அமைச்சரவை கூட்டத்தில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்  அமைச்சரவை
    மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அலுவலக உதவியாளர் பணியை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்!  உதயநிதி ஸ்டாலின்
    +2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு: நடிகர் விஜய்யின் புதிய திட்டம் விஜய்
    மோக்கா புயல்: மே 14ஆம் தேதி வரை மீனவர்களுக்கு எச்சரிக்கை  புதுச்சேரி

    மாநில அரசு

    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் ஆந்திரா
    சென்னையில் பேனா நினைவு சின்னம்-மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு மத்திய அரசு
    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025