NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்தரகாண்ட் சுரங்கப்பாதை சரிந்து விபத்து: 3வது நாளாக தொடரும் 40 தொழிலாளர்களை மீட்கும் பணி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    உத்தரகாண்ட் சுரங்கப்பாதை சரிந்து விபத்து: 3வது நாளாக தொடரும் 40 தொழிலாளர்களை மீட்கும் பணி 
    சிக்கிய தொழிலாளர்களை அடைய மீட்புப் பணியாளர்கள் தப்பிக்கும் பாதையை உருவாக்க முயற்சித்து வருகின்றனர்.

    உத்தரகாண்ட் சுரங்கப்பாதை சரிந்து விபத்து: 3வது நாளாக தொடரும் 40 தொழிலாளர்களை மீட்கும் பணி 

    எழுதியவர் Sindhuja SM
    Nov 14, 2023
    09:59 am

    செய்தி முன்னோட்டம்

    உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய 40 தொழிலாளர்களை மீட்க 48 மணி நேரத்திற்கும் மேலாக ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 200 மீட்டர் பரப்பளவின் மீது சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததை அடுத்து, அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த 40 தொழிலாளர்கள் சுரங்கப்பாதைக்குள் சிக்கினர்.

    அந்த தொழிலாளர்களை மீட்பதற்கு 48 மணிரத்திற்கும் மேலாக மீட்பு குழுக்கள் இடிந்து விழுந்த பாறைகளை அதிநவீன இயந்திரங்கள் கொண்டு வெட்டி வருகின்றன.

    சிக்கிய தொழிலாளர்களை அடைய மீட்புப் பணியாளர்கள் தப்பிக்கும் பாதையை உருவாக்க முயற்சித்து வருகின்றனர்.

    தொழிலாளர்களை மீட்க மொத்தம் சுமார் 40 மீட்டருக்கு துளையிட வேண்டும். ஆனால், இதுவரை 21 மீட்டருக்கு மட்டுமே துளையிடபட்டிருக்கிறது.

    எக்ஜகிவ்

    மண் சரிந்து விழுந்ததால் மீட் பணியில் தாமதம் 

    இன்று அல்லது நாளைக்குள் மீதமுள்ள 19 மீட்டருக்கும் துளை போடப்பட்டு தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே 30 மீட்டருக்கு துளையிடப்பட்டதாகவும், ஆனால் அந்த பணி தொடர்ந்து கொண்டிருக்கும் போதே போடப்பட்டிருந்த துளைக்குள் மண் சரிந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது. அதனால், மீட்பு பணியாளர்களால் இதுவரை 21 மீட்டருக்கு மட்டுமே துளையிட முடிந்தது.

    இந்த துளையிடும் பணி முடிந்த பிறகு, 900 மிமீ விட்டம் கொண்ட ஒரு குழாயை மீட்புக் குழுக்கள் உள்ளே அனுப்ப உள்ளது.

    அந்த குழாய் வழியாக தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவார்கள்.

    இந்த துணிச்சலான மீட்பு பணிக்கு தேவையான அனைத்து பொருட்களும் இயந்திரங்களும் சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரகாண்ட்
    விபத்து

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    உத்தரகாண்ட்

    ஜோஷிமத்: அரசாங்க கணக்கெடுப்பிற்கு மாற்று கருத்து தெரிவிக்கும் மக்கள் இந்தியா
    ஜோஷிமத் தீர்வுத் திட்டத்தைச் சமர்பித்தனர் உத்தரகாண்டின் சாமோலி அதிகாரிகள் இந்தியா
    உத்தரகாண்டில் பெண் விவசாயிகள் கொண்டு இயங்கும் வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனம் இந்தியா
    நைனிடால், முசோரியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அதிக சேதம் ஏற்படும் இந்தியா

    விபத்து

    மதுரை ரயில் தீ விபத்து - கேஸ் சிலிண்டர் வெடிப்பு குறித்து 2வது நாளாக தொடரும் விசாரணை  மதுரை
    சேலம் சங்கரகிரி அருகே லாரி மீது கார் மோதி கோர விபத்து - 6 பேர் உயிரிழப்பு சேலம்
    நெடுஞ்சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லாரி: 11 பேர் பலி  ராஜஸ்தான்
    திருச்சி-குஜராத் செல்லும் 'ஹம்சஃபர்' ரயிலில் திடீர் தீ விபத்து திருச்சி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025