NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாபர் மசூதி போன்ற தலைப்புகளை பள்ளி புத்தகங்களில் இருந்து நீக்கியது சரியே: NCERT தலைவர் வாதம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாபர் மசூதி போன்ற தலைப்புகளை பள்ளி புத்தகங்களில் இருந்து நீக்கியது சரியே: NCERT தலைவர் வாதம் 

    பாபர் மசூதி போன்ற தலைப்புகளை பள்ளி புத்தகங்களில் இருந்து நீக்கியது சரியே: NCERT தலைவர் வாதம் 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 16, 2024
    06:54 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின்(NCERT) இயக்குநரான தினேஷ் பிரசாத் சக்லானி, பள்ளி பாடப்புத்தகங்களில் காவி நிறம் பூசப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ளார்.

    குஜராத் கலவரம் மற்றும் பாபர் மசூதி இடிப்பு போன்ற தலைப்புகள் பள்ளி புத்தகங்களில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டது. இது பள்ளி புத்தங்களை ஹிந்துத்துவாவுக்கு ஆதரவாக மாற்றும் செயல் என்று பலர் குற்றம்சாட்டி இருந்தனர்.

    மேலும், தற்போதைய புத்தகங்களில் பாபர் மசூதி என்ற பெயர் குறிப்பிடப்படாமல் அதற்கு பதிலாக "மூன்று குவிமாடம் கொண்ட அமைப்பு" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் இதற்கு பதிலளித்த NCERT தலைவர் சக்லானி, "நாங்கள் வன்முறை மற்றும் மனச்சோர்வடைந்த நபர்களை அல்ல நேர்மறை குடிமக்களை உருவாக்க விரும்புகிறோம்," என்று கூறியுள்ளார்.

    இந்தியா 

    "சிறு குழந்தைகளுக்கு வன்முறை குறித்த பாடங்கள் எதற்கு?": சக்லானி

    வன்முறை குறித்து ஏன் பாடம் எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    "மாணவர்களின் மனதை புண்படுத்தும் வகையில், சமூகத்தில் வெறுப்பை உண்டாக்கும் வகையில், வெறுப்புக்கு ஆளாகும் வகையில் மாணவர்களை உருவாக்குவது தான் கல்வியின் நோக்கமா? சிறு குழந்தைகளுக்கு, இதுபோன்ற கலவரம் பற்றிக் கற்றுக் கொடுக்க வேண்டுமா... அவர்கள் வளரும்போது, ​​தேவையென்றால் அவர்கள் தனியாக அதை கற்றுக்கொள்ளலாம். அது ஏன் பள்ளி பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட வேண்டும்" என்று அவர் PTI செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

    "அவர்கள் வளரும்போது என்ன நடந்தது மற்றும் ஏன் நடந்தது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளட்டும். மாற்றங்கள் வேண்டும் என்று பள்ளி மாணவர்களிடம் அழுவது பொருத்தமற்றது," என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    ஆட்சி அமைக்க போவது யார்: கிங் மேக்கர்களாக உருவெடுக்கும் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு  பாஜக
    தேர்தலில் தோற்றதை அடுத்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ராஜினாமா  ஒடிசா
    சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியை ஆதரிக்க இருப்பதாக தகவல்  பாஜக
    பதவியை ராஜினாமா செய்தார் பிரதமர் மோடி: ஜூன் 8ஆம் தேதி மீண்டும் பதவியேற்க உள்ளதாக தகவல்  பாஜக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025