NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாங்குநேரி சம்பவம் : மாணவருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவர்கள் மூலம் சிகிச்சை
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாங்குநேரி சம்பவம் : மாணவருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவர்கள் மூலம் சிகிச்சை
    நாங்குநேரி மாணவருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவர்கள் மூலம் சிகிச்சை

    நாங்குநேரி சம்பவம் : மாணவருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவர்கள் மூலம் சிகிச்சை

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 13, 2023
    07:24 pm

    செய்தி முன்னோட்டம்

    நாங்குநேரியில் சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்ட மாணவர் சின்னத்துரைக்கு அறுவை சிகிச்சை செய்ய சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் நெல்லைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துளளார்.

    நாங்குநேரியைச் சேர்ந்த அம்பிகாவின் மகன் சின்னத்துரை வள்ளியூரில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

    அவரிடம் சில மாணவர்கள் சாதி ரீதியாக மோசமாக நடந்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், சம்பத்தன்று இரவு சின்னத்துரையை சக மாணவர்கள் வீடு புகுந்து கொடூரமாக வெட்டியுள்ளனர். மேலும் சின்னத்திரையின் சகோதரியையும் வெட்டியுள்ளனர்.

    இருவருக்கு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், கயல்விழி செல்வராஜ் மற்றும் சபாநாயகர் அப்பாவு நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

    goverment job for student

    சென்னை மருத்துவர்களுக்கு அழைப்பு

    மருத்துவர்களிடம் ஆலோசனை செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாணவருக்கு கையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.

    இதற்காக ஸ்டான்லி மருத்துவமனை பரிந்துரைக்கப்பட்டாலும், மாணவனை சென்னை கொண்டு செல்வதில் உள்ள சிரமம் காரணமாக ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்களை ஒரு வாரம் திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்க முடிவெடுக்கப்பட்டதாகக் கூறினார்.

    மேலும், மாணவருக்கு 18 வயதைக் கடந்தவுடன் அரசு வேலை வழங்கப்படும் என்றும், மாணவர் குணமடைந்து வந்தவுடன், உறைவிடப் பள்ளியில் சேர்த்து கல்வி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    இதற்கிடையே, அமைச்சர் கயல்விழி மாணவர் படிக்கும் பள்ளிக்கு சென்று நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, சின்னத்திரையின் குடும்பத்திற்கு தேவையான உதவியை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருநெல்வேலி
    தமிழக அரசு

    சமீபத்திய

    அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் தென்னாப்பிரிக்க வீரர் ஹென்ரிச் கிளாசென் ஓய்வு அறிவிப்பு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி
    வாரத் தொடக்கத்திலேயே ஷாக் கொடுத்த தங்கம் விலை; ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்வு தங்கம் வெள்ளி விலை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    ரோஜர் பின்னிக்கு பதிலாக பிசிசிஐ இடைக்கால தலைவராக ராஜீவ் சுக்லா நியமனம் செய்யப்படலாம் என தகவல் பிசிசிஐ

    திருநெல்வேலி

    திருநெல்வேலியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓட்டுநர் உரிமம் ரத்து - ஆர்.டி.ஓக்கு மாநகர போலீசார் பரிந்துரை மாவட்ட செய்திகள்
    திருநெல்வேலியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் - பெற்றோருக்கு வலைவீச்சு தமிழ்நாடு
    வட மாநில தொழிலாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்
    நெல்லை மாவட்டத்தில் பங்குனி உத்திரத்திருவிழா முன்னிட்டு ஏப்ரல் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை உள்ளூர் செய்தி

    தமிழக அரசு

    பெண் இதழியலாளருக்கு 'கலைஞர் எழுதுகோல் விருது': தமிழக அரசு கலைஞர் கருணாநிதி
    ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்ய முடிவு தமிழகம்
    தமிழ்நாட்டில் ஹோட்டல்களில் டிரைவர்களுக்கு தங்கும் வசதி கட்டாயம்; காரணமான இறையன்பு IAS தமிழ்நாடு
    'மேகதாது அணைத் திட்டத்தை முறியடிப்போம்': துரைமுருகன் உறுதி கர்நாடகா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025