NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தொழிலதிபரை துப்பாக்கி முனையில் கடத்திய சிவசேனா எம்எல்ஏ மகன்; காவல்துறை வழக்கு பதிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தொழிலதிபரை துப்பாக்கி முனையில் கடத்திய சிவசேனா எம்எல்ஏ மகன்; காவல்துறை வழக்கு பதிவு
    தொழிலதிபரை துப்பாக்கி முனையில் கடத்திய சிவசேனா எம்எல்ஏ மகன்

    தொழிலதிபரை துப்பாக்கி முனையில் கடத்திய சிவசேனா எம்எல்ஏ மகன்; காவல்துறை வழக்கு பதிவு

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 10, 2023
    03:24 pm

    செய்தி முன்னோட்டம்

    மகாராஷ்டிரா ஆளும் கட்சிகளில் ஒன்றான சிவசேனா (ஷிண்டே பிரிவு) எம்எல்ஏ பிரகாஷ் சர்வேயின் மகன் ராஜ் சர்வே மற்றும் பலர் மீது, தொழிலதிபரை கடத்திய குற்றச்சாட்டில், மும்பை காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக, புதன்கிழமை (ஆகஸ்ட் 9) மும்பையின் கோரேகான் கிழக்கு பகுதியில் இருந்து ஒரு இசை நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் தொழிலதிபர் ராஜ்குமார் சிங்கை, 10-15 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் கடத்தியுள்ளது.

    இதுகுறித்து ஊழியர்கள், காவல்துறை கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு புகார் தெரிவித்த நிலையில், உடனடியாக செயல்பட்ட காவல்துறை, எம்எல்ஏ மகனின் கட்டுப்பாட்டில் இருந்ததாக கூறப்படும் ராஜ்குமார் சிங்கை மீட்டது.

    reason behind abduction of businessman

    தொழிலதிபரை கடத்தியதின் பின்னணி

    தொழிலதிபர் ராஜ்குமார் சிங்கிடம், ஆதிசக்தி பிரைவேட் லிமிடெட் என்ற யூடியூப் நிறுவனத்தின் தலைவர் மனோஜ் மிஸ்ரா, ரூ.8 கோடி கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது.

    கடனை திருப்பி தருவதில் ஏற்பட்ட பிரச்சினையால் மனோஜ் மிஸ்ரா, சிவசேனா எம்எல்ஏ பிரகாஷ் சர்வேயின் மகன் ராஜ் சர்வேவை அணுக, அவர் ராஜ்குமார் சிங்கை துப்பாக்கி முனையில் கடத்தியுள்ளார்.

    மேலும், ராஜ்குமார் சிங்கை எம்எல்ஏ அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று துப்பாக்கி முனையில் கடன் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வைத்த நிலையில்தான், காவல்துறை அவரை மீட்டுள்ளது.

    ராஜ் சர்வே உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகாராஷ்டிரா

    சமீபத்திய

    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா
    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா
    தமிழக சிறை விதிகளில் திருத்தம்: கைதிகளின் சாதியை கேட்க தடை தமிழக அரசு

    மகாராஷ்டிரா

    IIT பாம்பேயில் மாணவர் உயிரிழப்பு: சாதிய பாகுபாடுகளால் தற்கொலை செய்து கொண்டாரா இந்தியா
    மகாராஷ்டிராவில் 512 கிலோ வெங்காயம் வெறும் ரூ.2 - விவசாயி அதிர்ச்சி இந்தியா
    உலகின் முதல் மூங்கில் விபத்து தடுப்பு மஹாராஷ்டிராவில் நிறுவப்பட்டுள்ளது: நிதின் கட்கரி இந்தியா
    5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களைக் காட்டிய ஆசிரியர் கைது இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025