NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தொங்குபால விபத்து நடந்த மோர்பி நகராட்சியை ஏன் கலைக்கக் கூடாது: குஜராத் அரசு நோட்டீஸ்
    இந்தியா

    தொங்குபால விபத்து நடந்த மோர்பி நகராட்சியை ஏன் கலைக்கக் கூடாது: குஜராத் அரசு நோட்டீஸ்

    தொங்குபால விபத்து நடந்த மோர்பி நகராட்சியை ஏன் கலைக்கக் கூடாது: குஜராத் அரசு நோட்டீஸ்
    எழுதியவர் Sindhuja SM
    Jan 20, 2023, 07:05 pm 0 நிமிட வாசிப்பு
    தொங்குபால விபத்து நடந்த மோர்பி நகராட்சியை ஏன் கலைக்கக் கூடாது: குஜராத் அரசு நோட்டீஸ்
    "தனது கடமையை செய்ய தவறிய" மோர்பி நகராட்சியிடம் காரணம் கேட்டு குஜராத் அரசு நோட்டீஸ்

    கடந்த அக்டோபரில் மோர்பி தொங்கு பாலம் இடிந்து விழுந்ததைக் கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மோர்பி நகராட்சியை ஏன் கலைக்கக்கூடாது என்று குஜராத் அரசு மோர்பி நகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாலம் இடிந்து விழுந்ததில் 135 பேர் உயிரிழந்தனர் மற்றும் 56 பேர் காயமடைந்தனர். இதனால், "தனது கடமையை செய்ய தவறிய" மோர்பி நகராட்சியிடம் காரணம் கேட்டு குஜராத் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு வரும் 25ஆம் தேதிக்குள் பதலளிக்குமாறு உத்தரவும் போடப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறையால் புதன்கிழமை(ஜன:18) மோர்பி நகராட்சி நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டது. ஏற்கனவே, இந்த வழக்கை ஏற்று நடத்தி வந்த குஜராத் உயர்நீதிமன்றத்தில் மோர்பி நகராட்சியை கலைக்கப்போவதாக அரசு தெரிவித்திருந்தது. இதையடுத்து, தற்போது இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    நகராட்சியைக் கலைக்க அரசுக்கு உரிமை இருக்கிறது

    ஒரு நகராட்சி திறமையற்றதாக கண்டறியப்பட்டால் அதை கலைக்கும் முழு அதிகாரமும் மாநில அரசுக்கு உள்ளது என்கிறது நகராட்சிகள் சட்டத்தின் 263வது பிரிவு, என்றும் இந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. "குஜராத் நகராட்சிகள் சட்டப்படி(1963), மோர்பி நகராட்சி தனது கடமைகளைச் செய்யத் தவறியதாகத் தெரிகிறது. மோர்பி நகராட்சியால் அதன் கடமைகளைச் செய்ய முடியவில்லை. எனவே, நகராட்சியில் தேர்தலால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவு அதன் முதன்மையான கடமைகளை நிறைவேற்றத் தகுதியற்றது." என்று மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அனுப்பிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. "மோர்பி நகராட்சியின் கவுன்சிலர்களுடன் நாங்கள் இந்த விஷயத்தை ஆலோசித்து வருகிறோம், சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்போம்" என்று இதை பெற்று கொண்ட மோர்பி நகராட்சியின் தலைவர் குசும் பர்மரின் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    ரோஹிணி தியேட்டர் விவகாரம்: இன்றும் தொடர்கிறதா தீண்டாமை கொடுமை?தியேட்டர் உரிமையாளர்கள் அளித்த விளக்கம் திரைப்பட வெளியீடு
    ITR தாக்கல்: நீங்கள் தவிர்க்க வேண்டிய தவறுகள் என்னென்ன? தொழில்நுட்பம்
    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    அரியலூர் மாவட்டத்தில் சிறுவர்கள் ஓட்டிய 25 வாகனங்கள் பறிமுதல் மாவட்ட செய்திகள்

    இந்தியா

    ராகுல் காந்தியை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கும் லலித் மோடி காங்கிரஸ்
    மளமளவென உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    ராகுல் காந்தியின் தகுதி நீக்க விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மனி உலக செய்திகள்
    பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கம் பாகிஸ்தான்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023