NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தொங்குபால விபத்து நடந்த மோர்பி நகராட்சியை ஏன் கலைக்கக் கூடாது: குஜராத் அரசு நோட்டீஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தொங்குபால விபத்து நடந்த மோர்பி நகராட்சியை ஏன் கலைக்கக் கூடாது: குஜராத் அரசு நோட்டீஸ்
    "தனது கடமையை செய்ய தவறிய" மோர்பி நகராட்சியிடம் காரணம் கேட்டு குஜராத் அரசு நோட்டீஸ்

    தொங்குபால விபத்து நடந்த மோர்பி நகராட்சியை ஏன் கலைக்கக் கூடாது: குஜராத் அரசு நோட்டீஸ்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 20, 2023
    07:05 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த அக்டோபரில் மோர்பி தொங்கு பாலம் இடிந்து விழுந்ததைக் கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மோர்பி நகராட்சியை ஏன் கலைக்கக்கூடாது என்று குஜராத் அரசு மோர்பி நகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    பாலம் இடிந்து விழுந்ததில் 135 பேர் உயிரிழந்தனர் மற்றும் 56 பேர் காயமடைந்தனர்.

    இதனால், "தனது கடமையை செய்ய தவறிய" மோர்பி நகராட்சியிடம் காரணம் கேட்டு குஜராத் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இதற்கு வரும் 25ஆம் தேதிக்குள் பதலளிக்குமாறு உத்தரவும் போடப்பட்டுள்ளது.

    இந்த நோட்டீஸ் மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறையால் புதன்கிழமை(ஜன:18) மோர்பி நகராட்சி நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டது.

    ஏற்கனவே, இந்த வழக்கை ஏற்று நடத்தி வந்த குஜராத் உயர்நீதிமன்றத்தில் மோர்பி நகராட்சியை கலைக்கப்போவதாக அரசு தெரிவித்திருந்தது.

    இதையடுத்து, தற்போது இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    மோர்பி

    நகராட்சியைக் கலைக்க அரசுக்கு உரிமை இருக்கிறது

    ஒரு நகராட்சி திறமையற்றதாக கண்டறியப்பட்டால் அதை கலைக்கும் முழு அதிகாரமும் மாநில அரசுக்கு உள்ளது என்கிறது நகராட்சிகள் சட்டத்தின் 263வது பிரிவு, என்றும் இந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    "குஜராத் நகராட்சிகள் சட்டப்படி(1963), மோர்பி நகராட்சி தனது கடமைகளைச் செய்யத் தவறியதாகத் தெரிகிறது. மோர்பி நகராட்சியால் அதன் கடமைகளைச் செய்ய முடியவில்லை. எனவே, நகராட்சியில் தேர்தலால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவு அதன் முதன்மையான கடமைகளை நிறைவேற்றத் தகுதியற்றது." என்று மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அனுப்பிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    "மோர்பி நகராட்சியின் கவுன்சிலர்களுடன் நாங்கள் இந்த விஷயத்தை ஆலோசித்து வருகிறோம், சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்போம்" என்று இதை பெற்று கொண்ட மோர்பி நகராட்சியின் தலைவர் குசும் பர்மரின் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    இந்தியா

    இனி தப்பிக்கமுடியாது! Soundboxஐ அறிமுகப்படுத்திய கூகுள் பே கூகுள்
    வைரலாகும் வீடியோ: 71 வயது முதியவரை ரோட்டில் தரதரவென இழுத்து சென்ற பைக் ஆசாமி வைரல் செய்தி
    பிரதமர் மோடியுடன் பேச்சு வார்த்தை நடத்த பாகிஸ்தான் விதித்த நிபந்தனை உலகம்
    ஜனவரி 30, 31ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்-வங்கி தொழிற்சங்கங்களின் அமைப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025