NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மணிப்பூரில் நடந்த பழங்குடியின போராட்டத்தால் இணைய சேவைகள் முடக்கம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மணிப்பூரில் நடந்த பழங்குடியின போராட்டத்தால் இணைய சேவைகள் முடக்கம் 
    தற்போதுள்ள சட்டத்தின்படி மலைப்பகுதிகளில் மெய்த்தே சமூகத்தினர் குடியேற அனுமதி இல்லை.

    மணிப்பூரில் நடந்த பழங்குடியின போராட்டத்தால் இணைய சேவைகள் முடக்கம் 

    எழுதியவர் Sindhuja SM
    May 04, 2023
    11:14 am

    செய்தி முன்னோட்டம்

    பழங்குடியினர் குழுக்கள் மணிப்பூர் மாநிலத்தின் பல மாவட்டங்களில் பேரணிகளை நடத்தியதை அடுத்து, மோசமடைந்து வரும் சட்டம் ஒழுங்கு நிலைமையைச் சமாளிக்க மணிப்பூர் அரசாங்கம் அடுத்த ஐந்து நாட்களுக்கு மாநிலத்தில் மொபைல் இணையத்தை நிறுத்தி வைத்துள்ளது.

    பெரிய கூட்டங்களுக்கு தடை விதித்ததோடு, மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மெய்த்தே சமூகத்தை ST பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் 'பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு' பேரணியில் கலந்துகொண்டனர்.

    இந்த பேரணி மாநிலத்தின் பத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது.

    மணிப்பூரின் அனைத்து பழங்குடி மாணவர் சங்கம்(ATSUM), இந்த அணிவகுப்புக்கு அழைப்பு விடுத்தது.

    DETAILS

    மாநிலத்தின் மக்கள்தொகையில் 53% பேர் மெய்த்தே சமூகத்தை சேர்ந்தவர்கள்

    "எஸ்டி பிரிவில் சேர்க்கப்பட வேண்டும் என்ற மெய்த்தே சமூகத்தின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு" எதிர்ப்பு தெரிவிக்க இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது என்று இதற்கு அழைப்பு விடுத்த மாணவர் சங்கம் கூறியுள்ளது.

    மணிப்பூர் மாநிலத்தின் மக்கள்தொகையில் 53% பேர் மெய்த்தே சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

    இந்த சமூகத்தினர், மணிப்பூர் பள்ளத்தாக்கில் வசிப்பதோடு, "மியான்மர் மற்றும் வங்காளதேசியர்களின் பெரிய அளவிலான சட்டவிரோத குடியேற்றத்தால்" அவர்கள் சிரமத்தை எதிர்கொள்வதாகக் கூறுகின்றனர்.

    தற்போதுள்ள சட்டத்தின்படி மலைப்பகுதிகளில் மெய்த்தே சமூகத்தினர் குடியேற அனுமதி இல்லை.

    இதெற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்காக தங்களையும் பழங்குடியின பட்டியலில் சேர்க்குமாறு அவர்கள் கோரி வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பழங்குடியினர்

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    இந்தியா

    ஆபரேஷன் காவேரி: மேலும் 186 பேர் சூடானில் இருந்து மீட்பு சூடான்
    டெல்லி காவல்துறை விசாரணைக்கு பிரிஜ் பூஷன் ஷரண் சிங் அழைப்பு டெல்லி
    மும்பை கட்டிட விபத்து - பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!  மும்பை
    கிரேட் நிக்கோபார் தீவு திட்டம் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுத்தப்படும்: மத்திய அமைச்சர் அந்தமான் நிக்கோபார்

    பழங்குடியினர்

    பழங்குடியின பெருவிழாவைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025