NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கடத்தல் வழக்கில் கர்நாடகா எம்எல்ஏ ஹெச்டி ரேவண்ணா கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கடத்தல் வழக்கில் கர்நாடகா எம்எல்ஏ ஹெச்டி ரேவண்ணா கைது 

    கடத்தல் வழக்கில் கர்நாடகா எம்எல்ஏ ஹெச்டி ரேவண்ணா கைது 

    எழுதியவர் Sindhuja SM
    May 04, 2024
    08:03 pm

    செய்தி முன்னோட்டம்

    கர்நாடகா மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏ ஹெச்டி ரேவண்ணா மீது பதிவு செய்யப்பட்ட கடத்தல் வழக்கு தொடர்பாக கர்நாடக காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு(எஸ்ஐடி) கைது செய்தது.

    ஹெச்டி ரேவண்ணா, அவரது தந்தையும் முன்னாள் பிரதமருமான HD தேவகவுடா வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டதாக இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு ஆதாரங்கள் தெரிவித்துள்ளன.

    கடத்தல் வழக்கில் கைது செய்ய இடைக்கால பாதுகாப்பு கோரிய எச்.டி.ரேவண்ணாவின் கோரிக்கை பெங்களூரு நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, கர்நாடகா போலீஸ் குழு அவரை விரைவில் காவலில் எடுத்தது.

    20 வயது இளைஞனின் தாயை ஹெச்டி ரேவண்ணாவின் கூட்டாளி கடத்திச் சென்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, ஹெச்.டி.ரேவண்ணா மீது கடத்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இந்தியா 

    பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு 

    கடத்தப்பட்ட அந்த பெண்ணும் அவரது மகனும் ரேவண்ணாவின் பண்ணை வீட்டில் உதவியாளராக பணிபுரிந்திருக்கின்றனர்.

    ரேவண்ணாவின் உறவினரான சதீஷ் பாபன்னா என்பவரால் ஏப்ரல் 29 ஆம் தேதி அந்தப் பெண் தனது வீட்டிலிருந்து கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    மேலும் கலேநல்லியில் உள்ள எம்எல்ஏவின் நெருங்கிய உதவியாளர் ராஜசேகருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் அவர் சிறைபிடிக்கப்பட்டார்.

    அந்த பெண்ணை நேற்று முன்தினம் கர்நாடக போலீசார் மீட்டனர்.

    ஹெச்டி ரேவண்ணாவுக்கு எதிராக கடத்தல், கட்டாயக் கட்டுப்பாடு மற்றும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் கர்நாடக காவல்துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    எச்.டி.ரேவண்ணா, அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோரும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கர்நாடகா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கர்நாடகா

    செங்கல்பட்டில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் - பீதியடைந்த மக்கள்  செங்கல்பட்டு
    இந்தியாவில் ISIS பயங்கரவாத நெட்ஒர்க்: மகாராஷ்டிரா, கர்நாடகாவில் பெரும் சோதனையை நடத்தி வரும் பயங்கரவாத எதிர்ப்பு குழு மகாராஷ்டிரா
    சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - ஐயப்பனை தரிசிக்காமல் வீடு திரும்பும் பக்தர்கள் சபரிமலை
    தான் படித்த அரசுப் பள்ளியை தத்தெடுத்த காந்தாரா பட நடிகர் ரிஷப் ஷெட்டி அரசு பள்ளி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025