NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    எழுதியவர் Sindhuja SM
    Jul 06, 2024
    11:18 am

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் வைத்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் இன்று தெரிவித்தனர்.

    கே ஆம்ஸ்ட்ராங் நேற்று அவரது வீட்டின் அருகே பைக்கில் வந்தவர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

    இந்நிலையில், இது குறித்து பேசியிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவம் குறித்து விரைவாக விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

    "பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் ஆழ்ந்த வருத்தத்தையும் அளிக்கிறது. அந்த கொலையில் தொடர்புடையவர்களை இரவோடு இரவாக போலீசார் கைது செய்தனர். ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்." என்று மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    தமிழகம் 

    "வலுவான தலித் குரல்": ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை குறித்து பதிவிட்ட மாயாவதி 

    மேலும், "இந்த வழக்கை விரைந்து நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்றும் அவர் கூறியுள்ளார்.

    இதற்கிடையில், நேற்று ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை குறித்து பதிவிட்டிருந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, அவரது கொலை வருந்தத்தக்கது என்று தெரிவித்திருந்தார். மேலும், குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று அவர் மாநில அரசுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

    "தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தலைவரான திரு கே ஆம்ஸ்ட்ராங், அவரது சென்னை வீட்டிற்கு வெளியே கொடூரமான முறையில் கொல்லப்பட்டது மிகவும் வருந்தத்தக்கது மற்றும் கண்டனத்திற்குரியது. ஒரு வக்கீலான அவர், தமிழக்தில் ஒரு வலுவான தலித் குரலாக அறியப்பட்டார். மாநில அரசு. குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்," என்று மாயாவதி தெரிவித்திருந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    மு.க ஸ்டாலின்

    சமீபத்திய

    கார்த்திக் சுப்புராஜ்- சூர்யாவின் 'ரெட்ரோ' இந்த தேதியில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது நடிகர் சூர்யா
    மெக்சிகன் கடற்படைக் கப்பல் நியூயார்க்கின் பிரபல புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்து நியூயார்க்
    "நாங்களும் அனுப்புவோம்": இந்தியாவைத் தொடர்ந்து, பாகிஸ்தானும் மற்ற நாடுகளுக்கு எம்.பி.க்களை அனுப்பவுள்ளதாம்! பாகிஸ்தான்
    தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் வானிலை எச்சரிக்கை

    சென்னை

    100 ரூபாயைத் தாண்டியது 1 கிராம் வெள்ளியின் விலை  தங்கம் வெள்ளி விலை
    சென்னை பிராட்வே பஸ் ஸ்டாண்டின் புதிய பேருந்து நிலையத்தின் வரைபடம் வெளியீடு பேருந்துகள்
    ஆபரண தங்கத்தின் விலை சரிவு: சவரனுக்கு 320 ரூபாய் குறைந்தது தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 22 தங்கம் வெள்ளி விலை

    மு.க ஸ்டாலின்

    கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க திட்டம் - ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு சென்னை
    சென்னையில் அமையும் அடிடாஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி கூடம்  சென்னை
    கோவையின் புது அடையாளம்-தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட திருவள்ளுவர் சிலை கோவை
    "எனக்கு உடல்நிலை சரியில்லையா?": அயலக தமிழர் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு முதல் அமைச்சர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025