NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் கேப்டன்; விஜயகாந்துக்கு மோடி புகழஞ்சலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் கேப்டன்; விஜயகாந்துக்கு மோடி புகழஞ்சலி
    விஜயகாந்துக்கு மோடி புகழஞ்சலி

    சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் கேப்டன்; விஜயகாந்துக்கு மோடி புகழஞ்சலி

    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 02, 2024
    06:54 pm

    செய்தி முன்னோட்டம்

    தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனரும், பிரபல நடிகருமான விஜயகாந்த் சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் கேப்டன் என்று கூறி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தினார்.

    இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார்.

    அதன் பின்னர், திருச்சி விமான நிலையத்தில் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, புதிய முனையத்தை திறந்து வைத்தார்.

    இரு நிகழ்ச்சிகளிலும், தமிழக முதல்வர் அவருடன் கலந்து கொண்டார். அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும், இருவரும் ஒரே மேடையில் இடம் பெற்றது கவனம் ஈர்த்தது.

    திருச்சி விமான நிலைய நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி விஜயகாந்தை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினார்.

    PM Modi paying tributes to Captain Vijakanth

    விஜயகாந்த் குறித்து பிரதமர் பேசியதன் முழு விபரம்

    பிரதமர் மோடி தனது உரையில், "சில நாட்களுக்கு முன்பு விஜயகாந்தை இழந்தோம். அவர் சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் கேப்டனாக இருந்தவர்.

    சினிமாவில் தனது பணி மூலம் மக்களின் மனதைக் கொள்ளை கொண்டவர். அரசியல்வாதியாக எப்போதும் தேசிய ரீதியில் சிந்தித்தவர்.

    அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.

    மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு துணை நிற்பதாகக் கூறிய பிரதமர் மோடி, இந்த நேரத்தில் மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்துள்ளதாகக் கூறினார்.

    தொடர்ந்து, இந்தியாவில் பசுமை புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி எம்எஸ் ஸ்வாமிநாதன் கடந்த செப்டம்பரில் மறைந்த நிலையில், அவருக்கும் அஞ்சலி செலுத்தினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விஜயகாந்த்
    பிரதமர் மோடி
    நரேந்திர மோடி
    திருச்சி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    விஜயகாந்த்

    "என் உயிரை நான் சந்தித்தபோது": கேப்டன் விஜயகாந்தை சந்தித்த இயக்குனர் S.A. சந்திரசேகர் கோலிவுட்
    தமிழகத்தில் புதிய நிலக்கரி சுரங்க விவகாரம் - எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த் அறிக்கை மத்திய அரசு
    வெளிநாட்டில் மாற்ற உடையின்றி தவித்த ரஜினிகாந்த்! என்ன நடந்தது? ரஜினிகாந்த்
    எந்த கூட்டணியுடனும் தற்போது செயல்படவில்லை: தேமுதிக அறிவிப்பு தேமுதிக

    பிரதமர் மோடி

    காலநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு: துபாய் சென்ற பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு  துபாய்
    2028ஆம் ஆண்டுக்கான காலநிலை மாநாட்டை இந்தியாவில் நடத்த முன்மொழிந்தார் பிரதமர் மோடி  துபாய்
    மஹுவா மொய்த்ரா தொடர்பான நெறிமுறைகள் குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது நாடாளுமன்றம்
    பிரதமர் மோடியின் ஆளுமையை பாராட்டிய ரஷ்யா பிரதமர் புடின் விளாடிமிர் புடின்

    நரேந்திர மோடி

    மிசோரத்தில் ரயில்வே பாலம் இடிந்து விபத்து: 17 பேர் பலி இந்தியா
    40 ஆண்டுகளுக்கு பின்னர் கிரீஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் மோடி இந்தியா
    செப்டம்பர் 8ஆம் தேதி நடக்கிறது மோடி-பைடனுக்கு இடையிலான  இருதரப்பு சந்திப்பு இந்தியா
    இந்தியாவின் பெயரை 'பாரதம்' என்று மாற்ற பாஜக அரசு நடவடிக்கை  இந்தியா

    திருச்சி

    திருச்சியில் 10ம் வகுப்பு மாணவன் சக மாணவர்களால் அடித்து கொலை - 3 பேர் கைது பள்ளி மாணவர்கள்
    திருச்சியில் ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்தவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை தமிழ்நாடு
    புதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை வழக்கு - திருச்சி நீதிமன்றத்தில் 7 பேர் சரண் புதுச்சேரி
    திருச்சியில் ரூ.600 கோடியில் டைடல் பார்க் - தொழில்துறையில் வெளியான புது அறிவிப்புகள் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025