NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சிறையிலிருந்து வெளிவந்த 660 சிறைவாசிகளுக்கு உதவித்தொகை வழங்கினார் மு.க.ஸ்டாலின் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிறையிலிருந்து வெளிவந்த 660 சிறைவாசிகளுக்கு உதவித்தொகை வழங்கினார் மு.க.ஸ்டாலின் 
    சிறையிலிருந்து வெளிவந்த 660 சிறைவாசிகளுக்கு உதவித்தொகை வழங்கினார் மு.க.ஸ்டாலின்

    சிறையிலிருந்து வெளிவந்த 660 சிறைவாசிகளுக்கு உதவித்தொகை வழங்கினார் மு.க.ஸ்டாலின் 

    எழுதியவர் Nivetha P
    May 05, 2023
    05:36 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகளின் துறையின் சார்பில் இன்று(மே.,5) நடந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.

    பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளினை முன்னிட்டு பொது மன்னிப்பில் சிறையிலிருந்து முன்னதாக விடுதலை செய்யப்பட்ட 660 முன்னாள் சிறைவாசிகளுக்கு தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கத்தின் சார்பில் சுயத்தொழில் துவங்க 3 கோடியே 30 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கிடும் அடையாளமாக 10 முன்னாள் சிறைவாசிகளுக்கு காசோலைகளை வழங்கினார்.

    இதன் மூலம் விடுதலை செய்யப்பட்ட 660 சிறைவாசிகள் சுயதொழில் செய்து அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தி, சீரிய மறுவாழ்வு பெற்று மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடாமல் சமூகத்தில் புதிய வாழ்க்கையினை துவங்க வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.

    சிறை

    தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கம் 1921ம் ஆண்டில் துவங்கப்பட்டது 

    இந்த நிகழ்ச்சியில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை அமைச்சர் ரகுபதி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட உயரதிகாரிகள், உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இந்தியாவின் சிறைக்குழுவின் பரிந்துரைக்கிணங்க தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கம், அலுவல் சாரா நிறுவனமாக 1921ம் ஆண்டு துவங்கப்பட்டது.

    சிறையிலிருந்து வெளிவந்த நபர்களின் நல்வாழ்விற்காக, அவர்கள் சமூகத்தில் நேர்மையாக வாழ வழிவகை செய்யும் வகையில், மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் தடுக்க தேவையான நிதி உதவிகளை வழங்கவே இந்த சங்கத்தின் குறிக்கோளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மு.க ஸ்டாலின்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    தமிழ்நாடு

    தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி
    குடும்ப தகராறில் மனைவியை கொன்று மாந்தோப்பில் புதைத்த கணவன்  ஆந்திரா
    தமிழ்நாடு அரசியலில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்திய 'திமுக ஃபைல்ஸ்' ஓர் பார்வை  பாஜக
    தமிழகத்தின் சில மாவட்டங்களில் குறையும் கொரோனா பாதிப்பு  உலகம்

    மு.க ஸ்டாலின்

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் தாக்கல் தமிழ்நாடு
    பத்மஸ்ரீ விருது பெற்ற பாம்புப்பிடி வீரர்கள் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர் பத்மஸ்ரீ விருது
    தமிழகத்தில் பெண்களுக்கான உரிமை தொகை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு
    திருநெல்வேலியில் விசாரணைக்கு அழைத்துவந்தவர்களின் பற்களை பிடுங்கிய போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம் திருநெல்வேலி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025