NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில் கச்சா வெடிகுண்டு வெடித்ததில் ஒரு சிறுவன் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில் கச்சா வெடிகுண்டு வெடித்ததில் ஒரு சிறுவன் பலி

    மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில் கச்சா வெடிகுண்டு வெடித்ததில் ஒரு சிறுவன் பலி

    எழுதியவர் Sindhuja SM
    May 06, 2024
    12:24 pm

    செய்தி முன்னோட்டம்

    மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் கச்சா வெடிகுண்டு வெடித்ததில் ஏழு வயது சிறுவன் இன்று உயிரிழந்தான்.

    பாண்டுவாவில் நடந்த இந்த குண்டுவெடிப்பில் மேலும் இரண்டு மைனர் சிறுவர்களும் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பாண்டுவாவின் நேதாஜிபள்ளி காலனியில் உள்ள ஒரு குளத்தின் அருகே ஏராளமான குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்டுகிறது.

    இந்நிலையில், திடீரென அப்பகுதியில் பலத்த சத்தம் கேட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் விரைந்து வந்து பார்த்தபோது, ​​சில குழந்தைகள் மயங்கிய நிலையில் கிடந்தனர்.

    மூன்று சிறுவர்களும் முதலில் பாண்டுவா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ஒருவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

    இந்தியா 

     குண்டுவெடிப்பில் திரிணாமுல் காங்கிரசுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு 

    மற்ற இருவரின் நிலை கவலைக்கிடமானதாக இருந்ததால், அவர்கள் சுஞ்சுரா இமாம்பரா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுகுறித்து ஹூக்ளி ரூரல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி, பாண்டுவாவில் உள்ள ஹூக்ளி மக்களவை தொகுதியில் அக்கட்சி வேட்பாளர் ரச்சனா பானர்ஜியை ஆதரித்து இன்று தேர்தல் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தார்.

    இந்த குண்டுவெடிப்பில் திரிணாமுல் காங்கிரசுக்கு தொடர்பு இருப்பதாக உள்ளூர் பாஜக எம்பி லாக்கெட் சட்டர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

    மேற்கு வங்கத்தில் நாளை மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த மாநிலத்தில் நான்கு தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறவுள்ளது

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மேற்கு வங்காளம்
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மேற்கு வங்காளம்

    மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு பெரும் வெற்றி  மம்தா பானர்ஜி
    மணிப்பூரை அடுத்து மேற்கு வங்கத்தில்: அரை நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட 2 பெண்கள் மணிப்பூர்
    ஐபோன் வாங்குவதற்காக 8 மாத குழந்தையை விற்ற மேற்கு வங்காள தம்பதி இந்தியா
    'ஜனநாயகத்தின் சாம்பியன்கள்': எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி  எதிர்க்கட்சிகள்

    இந்தியா

    இந்தியப் பயணத்தை ஒத்திவைத்தார் எலான் மஸ்க் எலான் மஸ்க்
    தூர்தர்ஷனின் லோகோ காவி நிறமாக மாறியதால் சர்ச்சை  இந்தியா
    காங்கிரஸ் தலைவரின் மகள் கொலை: 'லவ் ஜிஹாத்' சம்பவம் என குற்றச்சாட்டு கர்நாடகா
    அற்புதமான எக்ஸ்சேஞ் திட்டத்தை இந்தியாவில் அறிவித்தது டுகாட்டி ஆட்டோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025