NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருநெல்வேலி மக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருநெல்வேலி மக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
    திருநெல்வேலி மக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

    திருநெல்வேலி மக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

    எழுதியவர் Nivetha P
    Dec 18, 2023
    09:47 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த 200 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு தமிழ்நாடு மாநில தென்மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது.

    இம்மாவட்டத்தின் பல பகுதிகள் தனி தீவுகளாக காட்சியளிக்கிறது.

    இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இதர அமைச்சர்கள், கூடுதல் ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் திருநெல்வேலி மாவட்டத்திற்கு விரைந்துள்ளனர்.

    அங்கு மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார்.

    பின்னர் மழைநீர் மற்றும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை ஆய்வு செய்த உதயநிதி, செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார்.

    அப்போது அவர், "திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 3 பேர் மழை, வெள்ளம் காரணமாக உயிரிழந்துள்ளனர்" என்று தெரிவித்தார்.

    அமைச்சர் 

    ஸ்ரீ வைகுண்டத்தில் ரயிலில் சிக்கி தவிக்கும் பயணிகளை விமானப்படை ஹெலிகாப்டர்கள் கொண்டு மீட்க நடவடிக்கை

    மேலும் அவர், '3500 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளும் தயார் நிலையில் உள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கிய மக்களை மீட்க படகு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்யும் பணி வெள்ளம் முழுவதும் வடிந்த பின்னரே மேற்கொள்ளப்படும் என்றும்,

    வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களுக்கான நிவாரணத்தொகை குறித்த அறிவிப்பு 3 நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

    தொடர்ந்து, ஸ்ரீ வைகுண்டம் பகுதியில் ரயிலில் சிக்கி தவிக்கும் பயணிகளை விமானப்படை ஹெலிகாப்டர்கள் கொண்டு மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல் ஹெலிகாப்டர் மூலம் உணவு, குடிநீர் உள்ளிட்டவை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

    ட்விட்டர் அஞ்சல்

    கள பணியில் உதயநிதி ஸ்டாலின் 

    #JUSTIN | “களத்தில் அமைச்சர் உதயநிதி!”

    திருநெல்வேலியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரணம் வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!#UdhayanidhiStalin | #NellaiRains | #KalaignarSeithigal pic.twitter.com/nj8zSVLP2p

    — Kalaignar Seithigal (@Kalaignarnews) December 18, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருநெல்வேலி
    வெள்ளம்
    உதயநிதி ஸ்டாலின்
    உதயநிதி ஸ்டாலின்

    சமீபத்திய

    JNUவைத் தொடர்ந்து ஜாமியா மிலியா பல்கலைக் கழகமும் துருக்கியுடனான தொடர்பை முறித்துக் கொள்வதாக அறிவிப்பு பல்கலைக்கழகம்
    இந்திய சிஎன்ஜி வாகன சந்தையில் அறிமுகமாகும் சிட்ரோயன்; சி3  ஹேட்ச்பேக்கிற்கான சிஎன்ஜி கிட் வெளியீடு சிட்ரோயன்
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25க்கான பரிசுத் தொகை அறிவிப்பு; 3வது இடம் பிடித்த இந்தியாவிற்கு எவ்வளவு? டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    மே 17ஆம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: மண்டல வானிலை மையம் கனமழை

    திருநெல்வேலி

    வட மாநில தொழிலாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்
    நெல்லை மாவட்டத்தில் பங்குனி உத்திரத்திருவிழா முன்னிட்டு ஏப்ரல் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை உள்ளூர் செய்தி
    திருநெல்வேலியில் விசாரணைக்கு அழைத்துவந்தவர்களின் பற்களை பிடுங்கிய போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம் மு.க ஸ்டாலின்
    திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - மனித உரிமை மீறல் ஆணையத்தில் புகார் தமிழ்நாடு

    வெள்ளம்

    சீனாவில் 4 நாட்களாக தொடரும் கனமழை, வெள்ளம்: 11 பேர் பலி  சீனா
    உத்தரகாண்டில் கனமழை: கடும் வெள்ளத்தில் இடிந்து விழுந்த கல்லூரி கட்டிடம் உத்தரகாண்ட்
    உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசத்தில் கனமழை சீற்றம்: 54 பேர் பலி உத்தரகாண்ட்
    கனமழையை மாநில பேரிடராக அறிவித்தது இமாச்சல்: 5 நாட்களில் 77 பேர் பலி  ஹிமாச்சல பிரதேசம்

    உதயநிதி ஸ்டாலின்

    சனாதனம் குறித்த பேச்சு - உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக டெல்லி காவல்துறையில் புகார்  உதயநிதி ஸ்டாலின்
    'எதிர்க்கட்சிகள் இந்து மதத்தை வெறுக்கின்றன': உதயநிதியின் கருத்துக்கு அமித்ஷா பதில்  அமித்ஷா
    "எந்த வழக்கையும் எதிர்கொள்ள தயார்": சனாதன தர்மம் குறித்த சர்ச்சைக்கு உதயநிதி பதில்  திமுக
    சர்ச்சையை கிளப்பி இருக்கும் 'சனாதன தர்மம்' என்றால் உண்மையில் என்ன? சனாதன தர்மம்

    உதயநிதி ஸ்டாலின்

    உதயநிதி ஸ்டாலினின் 'சனாதன தர்ம' கருத்துக்கு குவியும் எதிர்ப்புகள்: யார் யார் என்ன சொன்னார்கள்? திமுக
    உதயநிதி ஸ்டாலினின் 'சனாதன தர்ம' கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் மம்தா பானர்ஜி உதயநிதி ஸ்டாலின்
    உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு 10 கோடி ரூபாய் பரிசு அறிவித்த மத போதகர்: என்ன நடக்கிறது? திமுக
    'சனாதன தர்ம' கருத்து: உதயநிதி ஸ்டாலின், பிரியங்க் கார்கேவிற்கு எதிராக FIR பதிவு  திமுக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025