NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தின் திறப்பு குறித்து அமைச்சர் சேகர் பாபு தகவல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தின் திறப்பு குறித்து அமைச்சர் சேகர் பாபு தகவல் 
    கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தின் திறப்பு குறித்து அமைச்சர் சேகர் பாபு தகவல்

    கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தின் திறப்பு குறித்து அமைச்சர் சேகர் பாபு தகவல் 

    எழுதியவர் Nivetha P
    May 23, 2023
    12:12 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை கோயம்பேடு பகுதியில் அரசு பேருந்துகளுக்கு என ஒரு தனி பேருந்து நிலையமும், தனியார் பேருந்துகளுக்கு என தனியாக ஒரு பேருந்து நிலையமும் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.

    இதனால் அப்பகுதியில் மிகப்பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால், தனியார் ஆம்னி பேருந்து நிலையத்தினை சென்னை வெளிவட்ட சாலைக்கு மாற்ற சி.எம்.டி.ஏ.அண்மையில் முடிவுச்செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

    இந்த பேருந்து நிலையமானது கிளம்பாக்கம் அருகே முடிச்சூர் பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.29 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது.

    இதனை சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, அமைச்சர்கள் சேகர் பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்கள்.

    தொடர்ந்து, இந்த பேருந்துநிலையம் பயன்பாட்டிற்கு வர தாமதமாகலாம் என்று அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார்.

    பேருந்து நிலையம் 

    பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையம் 

    இதுகுறித்து அவர் கூறியதாவது, கிளாம்பாக்கம் வரும் ஆம்னி பேருந்துகளுக்கு தனியாக முடிச்சூரில் பேருந்துநிலையமானது கட்டப்பட்டு வருகிறது.

    முந்தைய ஆட்சியில் இருந்தோர் இப்பணியினை துவங்கும்போது போதுமான திட்டமிடலை செய்யவில்லை.

    இந்த பேருந்துநிலையத்திற்கு வரும் பேருந்துகளின் போக்குவரத்தினை கருத்தில்கொள்ளாமல் வடிவமைத்துள்ளார்கள்.

    இது பயன்பாட்டிற்கு வரும் நிலையில், மக்களுக்கான அடிப்படைவசதிகள் எதுவுமே இதன் வடிவமைப்பில் கொண்டுவரப்படவில்லை என்பதை கண்டறிந்தோம்.

    அதனால் இந்த பேருந்துநிலையத்துக்கு வரும் போக்குவரத்து நெரிசலினை சமாளிக்க திட்டமிடல், இப்பேருந்து நிலையத்திற்கான அணுகுச்சாலைகள் ஆகியன குறித்து கணக்கிட்டு ஏற்பாடுச்செய்து வருகிறோம்.

    இதனால் தாமதமாகும் இப்பணி முடிந்தவரை ஜூனில் முடிக்கப்பட்டு, திறக்க முயற்சிக்கிறோம்.

    ஒருவேளை இதன் பணிகள் முடிய ஓரிருவாரங்கள் தள்ளிப்போனாலும் நிச்சயம் இந்த பேருந்துநிலையமானது ஜூலை மாதம் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சேகர் பாபு
    சென்னை

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    சேகர் பாபு

    சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை-அமைச்சர் சேகர்பாபு பேட்டி தமிழ்நாடு
    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் அறிவிப்பு  தமிழ்நாடு
    331 கோடியில் 745 கோவில்களின் திருப்பணிகள் நடைபெறும் -அமைச்சர் சேகர்பாபு  தமிழ்நாடு

    சென்னை

    சென்னையில் உருவெடுக்கும் 20 மாடி குடியிருப்பு கட்டிடங்கள்  தமிழ்நாடு
    தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பு - இன்றைய நிலவரம்!  தங்கம் வெள்ளி விலை
    சித்ரா பவுர்ணமி கிரிவலம் - திருவண்ணாமலைக்கு செல்ல 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!  திருவண்ணாமலை
    சென்னையில் 'மக்களைத் தேடி மேயர்' திட்டம் துவக்கம்  பட்ஜெட் 2023
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025