NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தின் திறப்பு குறித்து அமைச்சர் சேகர் பாபு தகவல் 
    கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தின் திறப்பு குறித்து அமைச்சர் சேகர் பாபு தகவல் 
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தின் திறப்பு குறித்து அமைச்சர் சேகர் பாபு தகவல் 

    எழுதியவர் Nivetha P
    May 23, 2023
    12:12 pm
    கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தின் திறப்பு குறித்து அமைச்சர் சேகர் பாபு தகவல் 
    கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தின் திறப்பு குறித்து அமைச்சர் சேகர் பாபு தகவல்

    சென்னை கோயம்பேடு பகுதியில் அரசு பேருந்துகளுக்கு என ஒரு தனி பேருந்து நிலையமும், தனியார் பேருந்துகளுக்கு என தனியாக ஒரு பேருந்து நிலையமும் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இதனால் அப்பகுதியில் மிகப்பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால், தனியார் ஆம்னி பேருந்து நிலையத்தினை சென்னை வெளிவட்ட சாலைக்கு மாற்ற சி.எம்.டி.ஏ.அண்மையில் முடிவுச்செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த பேருந்து நிலையமானது கிளம்பாக்கம் அருகே முடிச்சூர் பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.29 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. இதனை சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, அமைச்சர்கள் சேகர் பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்கள். தொடர்ந்து, இந்த பேருந்துநிலையம் பயன்பாட்டிற்கு வர தாமதமாகலாம் என்று அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார்.

    2/2

    பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையம் 

    இதுகுறித்து அவர் கூறியதாவது, கிளாம்பாக்கம் வரும் ஆம்னி பேருந்துகளுக்கு தனியாக முடிச்சூரில் பேருந்துநிலையமானது கட்டப்பட்டு வருகிறது. முந்தைய ஆட்சியில் இருந்தோர் இப்பணியினை துவங்கும்போது போதுமான திட்டமிடலை செய்யவில்லை. இந்த பேருந்துநிலையத்திற்கு வரும் பேருந்துகளின் போக்குவரத்தினை கருத்தில்கொள்ளாமல் வடிவமைத்துள்ளார்கள். இது பயன்பாட்டிற்கு வரும் நிலையில், மக்களுக்கான அடிப்படைவசதிகள் எதுவுமே இதன் வடிவமைப்பில் கொண்டுவரப்படவில்லை என்பதை கண்டறிந்தோம். அதனால் இந்த பேருந்துநிலையத்துக்கு வரும் போக்குவரத்து நெரிசலினை சமாளிக்க திட்டமிடல், இப்பேருந்து நிலையத்திற்கான அணுகுச்சாலைகள் ஆகியன குறித்து கணக்கிட்டு ஏற்பாடுச்செய்து வருகிறோம். இதனால் தாமதமாகும் இப்பணி முடிந்தவரை ஜூனில் முடிக்கப்பட்டு, திறக்க முயற்சிக்கிறோம். ஒருவேளை இதன் பணிகள் முடிய ஓரிருவாரங்கள் தள்ளிப்போனாலும் நிச்சயம் இந்த பேருந்துநிலையமானது ஜூலை மாதம் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சேகர் பாபு
    சென்னை

    சேகர் பாபு

    சேகர் பாபு மகள் என்னிடம் உதவி கேட்டார் - பாஜக தலைவர் அண்ணாமலை  தமிழ்நாடு
    331 கோடியில் 745 கோவில்களின் திருப்பணிகள் நடைபெறும் -அமைச்சர் சேகர்பாபு  தமிழ்நாடு
    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் அறிவிப்பு  தமிழ்நாடு
    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு

    சென்னை

    நடிகர் சரத்பாபுவின் உடல், சென்னைக்கு கொண்டு வரப்பட்டது! கோலிவுட்
    சென்னையில் ஸ்குவாஷ் உலகக்கோப்பை போட்டி! வெளியானது அறிவிப்பு! உலக கோப்பை
    கலாஷேத்ரா விவகாரம் - 10க்கும் மேற்பட்ட மாணவிகள் நேரில் ஆஜராகி விளக்கம்  மனித உரிமைகள் ஆணையம்
    மூடப்பட்ட பழமையான திரையரங்கை வாங்கிய நயன்தாரா நயன்தாரா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023