சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்
மிக்ஜாம் புயல் தமிழக கடற்கரையை நெருங்கி வருவதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். இதனால் 60 -70 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகம் முழுவதும் கனமழை காரணமாக கடந்த 3 நாட்களில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 140 கால்நடைகள் இறந்துள்ளன என்றும் 572 குடிசைகள் சேதமடைந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இரு தினங்களுக்கு பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்றும், மின்கம்பங்கள், மரங்கள் அருகே நிற்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.