மிக்ஜாம் புயல் : சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை அறிவிப்பு
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 5) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் சென்னைக்கு வடகிழக்கே 90 கிமீ தூரத்தில் உள்ள மிக்ஜாம் புயல் 8 கிமீ வேகத்தில் கரையை நெருங்கி வருகிறது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்துவரும் நிலையில், புயல் கரையைக் கடக்கும்போது 90 முதல் 100 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான்கு மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை பொதுவிடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, திங்கட்கிழமையும் இந்த நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.