NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் நிராகரித்தது
    அடுத்த செய்திக் கட்டுரை
    மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் நிராகரித்தது
    தற்போது நீதிமன்ற காவலில் உள்ள மணீஷ் சிசோடியா, ஏப்ரல் 3 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

    மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் நிராகரித்தது

    எழுதியவர் Sindhuja SM
    Mar 31, 2023
    05:42 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி மதுபானக் கொள்கையை வடிவமைத்து அமல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை நகர நீதிமன்றம் இன்று(மார் 31) நிராகரித்தது.

    இதற்கு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக முன்னாள் அமைச்சர் சிசோடியா தெரிவித்துள்ளார்.

    தற்போது நீதிமன்ற காவலில் உள்ள மணீஷ் சிசோடியா, ஏப்ரல் 3 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

    வழக்கில் அனைத்து சோதனைகளும் ஏற்கனவே செய்யப்பட்டு விட்டதால், தன்னை காவலில் வைத்திருப்பதில் எந்த பயனும் இல்லை என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியா, ஜாமீன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    சிபிஐ

    ஆம் ஆத்மியின் குறுக்கீடு அதிகம் இருக்கிறது: சிபிஐ

    "அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டால், அது எங்கள் விசாரணையை சீர்குலைக்கும். ஏனெனில் அவர்களின் செல்வாக்கு மற்றும் குறுக்கீடு பெரிய அளவில் உள்ளது," என்று சிபிஐ எதிர்ப்பு மனுவில் தெரிவித்திருக்கிறது.

    மதுபானக் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் ஊழல் செய்ததாகக் கூறி பிப்ரவரி 26ஆம் தேதி சிசோடியா சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.

    அமலாக்க இயக்குனரகமும் (ED) டெல்லி மதுபான ஊழல் தொடர்பாக தனியாக விசாரணையைத் தொடங்கியது. அதனையடுத்து பணமோசடி குற்றச்சாட்டில் மார்ச் 9 அன்று சிசோடியாவை ED கைது செய்தது.

    அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்த ஆம் ஆத்மி கட்சி, இது எதிர்கட்சிகளை ஒழிக்க நினைக்கும் பாஜகவின் முயற்சி என்று கூறி இருந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    ஆம் ஆத்மி

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    டெல்லி

    மும்பை-டெல்லி விரைவு சாலையின் ஒரு பகுதியை திறந்து வைத்தார் பிரதமர் மோடி மும்பை
    வீடியோ: குடி போதையில் காரை இடித்து 3 கிலோ மீட்டருக்கு இழுத்து சென்ற லாரி இந்தியா
    காதலியை கொன்று உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்த உணவக உரிமையாளர் இந்தியா
    குளிர்சாதன பெட்டிக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் சிசிடிவி காட்சி இந்தியா

    ஆம் ஆத்மி

    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED கோவா
    டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம் அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லியின் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றார் ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் இந்தியா
    மணிஷ் சிசோடியா கைது: கைதுக்கு காரணம் என்ன டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025