NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக புதிய ஊழல் வழக்கை பதிவு செய்த CBI
    அடுத்த செய்திக் கட்டுரை
    மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக புதிய ஊழல் வழக்கை பதிவு செய்த CBI
    மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக FIR பதிவு செய்யப்பட்டுள்ளது

    மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக புதிய ஊழல் வழக்கை பதிவு செய்த CBI

    எழுதியவர் Sindhuja SM
    Mar 16, 2023
    01:36 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி அரசின் கருத்துப் பிரிவு(FBU) தொடர்பாக எழுந்த ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியா மீது மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) ஒரு புதிய வழக்கை பதிவு செய்துள்ளது.

    2015 ஆம் ஆண்டு டெல்லியில் ஆட்சிக்கு வந்த பிறகு ஆம் ஆத்மி கட்சியால் FBU உருவாக்கப்பட்டது.

    "சட்டவிரோதமான முறையில் கருத்துப் பிரிவு உருவாக்கப்பட்டு செயல்படுவதால், அரசாங்க கருவூலத்திற்கு தோராயமாக Rs. 36 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது" என்று சிபிஐ கூறியுள்ளது.

    சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவருக்கு எதிரான இந்த வழக்கை பற்றி பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "நாட்டை பற்றி நினைத்தால் வருத்தமாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

    இந்தியா

    நாட்டை பற்றி நினைத்தால் வருத்தமாக இருக்கிறது: கெஜ்ரிவால்

    "மணீஷ் மீது பல பொய் வழக்குகளைப் போட்டு, அவரை நீண்ட காலம் காவலில் வைப்பதே பிரதமரின் திட்டம். நாட்டை பற்றி நினைத்தால் வருத்தமாக இருக்கிறது!" என்று கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார்.

    இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், சிசோடியா FBUஐ "அரசியல் சூழ்ச்சிக்கு" ஒரு கருவியாக பயன்படுத்துவதாக சிபிஐ குற்றம் சாட்டி இருந்தது.

    ரத்து செய்யப்பட்ட டெல்லி மதுபான கொள்கையை உருவாக்கி செயல்படுத்தியதில் ஊழல் செய்ததாக டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் சிசோடியா பிப்ரவரி 26 அன்று சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.

    இந்த குற்றசாட்டுகளை எல்லாம் மறுத்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், இவையெல்லாம் அரசியல் உள்நோக்கத்தோடு செய்யப்படுவதாக பாஜக மீது குற்றம் சாட்டி இருந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ஆம் ஆத்மி
    டெல்லி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    பாரம்பரிய சுற்றுலாவிற்கு சிறந்த இடமாக தமிழ்நாடு தேர்வு தமிழ்நாடு
    உங்கள் ஆதார் கார்டு தொலைந்துவிட்டால் முதலில் என்ன செய்யவேண்டும்? ஆதார் புதுப்பிப்பு
    பயனவாதிகளுக்கு நிதி வழங்கல்: ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் NIA ரெய்டு ஜம்மு காஷ்மீர்
    சோஹோ ஸ்ரீதர் வேம்பு மீது மனைவி குற்றச்சாட்டு உலகம்

    ஆம் ஆத்மி

    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED கோவா
    டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம் அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லியின் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றார் ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் இந்தியா
    மணிஷ் சிசோடியா கைது: கைதுக்கு காரணம் என்ன டெல்லி

    டெல்லி

    டெல்லி ஏர் விஸ்தாரா விமான நிறுவனத்திற்கு ரூ.70 லட்சம் அபராதம் விமானம்
    டெல்லி விமான நிலையத்தில் நூதன முறையில் தங்கம் கடத்திய 2 இந்திய பயணிகள் கைது விமானம்
    மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது தெலுங்கானா
    டெல்லி-ஆன்லைன் சூதாட்ட தளங்களின் விளம்பரங்கள் குறித்து திருமாவளவன் கேள்விக்கு மத்திய அரசு பதில் தொல். திருமாவளவன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025