NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: 7 நாள் ED காவலில் சிசோடியா
    இந்தியா

    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: 7 நாள் ED காவலில் சிசோடியா

    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: 7 நாள் ED காவலில் சிசோடியா
    எழுதியவர் Sindhuja SM
    Mar 10, 2023, 07:23 pm 1 நிமிட வாசிப்பு
    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: 7 நாள் ED  காவலில் சிசோடியா
    ஊழல் செய்யப்பட்ட பணம் குறைந்தது ரூ.292 கோடி இருக்கும் என்று ED தெரிவித்துள்ளது.

    ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவை 7 நாள் காவலில் வைக்க அமலாக்க இயக்குநரகத்திற்கு(ED) டெல்லியில் உள்ள ரூஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று(மார் 10) அனுமதி அளித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி(AAP) தலைமையிலான டெல்லி அரசாங்கத்தின் ரத்து செய்யப்பட்ட 2021-22 டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் சிசோடியாவை விசாரித்த பிறகு அமலாக்கத்துறை வியாழக்கிழமை அன்று அவரை கைது செய்தது. இதே வழக்கில் சிசோடியா மத்திய புலனாய்வுப் பிரிவினரால்(சிபிஐ) கைது செய்யப்பட்டிருந்த நிலையில், திட்டமிடப்பட்ட ஜாமீன் விசாரணைக்கு ஒரு நாள் முன்னதாகவே ED சிசோடியா கைது செய்துள்ளது.

    பாஜகவை குற்றம்சாட்டும் ஆம் ஆத்மி

    இந்த மதுபான கொள்கை மூலம் ஆம் ஆத்மி அரசு மதுபான வியாபாரிகளுக்கு தேவையற்ற சலுகைகளை வழங்கியதாகவும் அந்த ஊழல் பணத்தை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதாகவும் சிபிஐ குற்றம் சாட்டி இருந்தது. இதை எல்லாம் மறுத்த ஆம் ஆத்மி, இது பாஜக எதிர்கட்சிகளை பழிவாங்க எடுத்திருக்கும் நடவடிக்கை என்று குற்றம்சாட்டியது. சிசோடியாவின் காவல் ஏன் அவசியம் என்பதை விளக்கிய ED, இன்று சிறப்பு நீதிமன்றத்தில், டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் ஊழல் செய்யப்பட்ட பணம் எங்கு சென்றிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளது. மேலும், ஊழல் செய்யப்பட்ட பணம் குறைந்தது ரூ.292 கோடி இருக்கும் என்றும் ED தெரிவித்துள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    இந்தியா
    பாஜக
    ஆம் ஆத்மி

    இந்தியா

    'மனதை பிழிந்த புகைப்படங்கள், தூக்கமே வரல' : துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா! மல்யுத்தம்
    "இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர்  உலகம்
    காயம் காரணமாக FBK போட்டியிலிருந்து விலகினார் நீரஜ் சோப்ரா! இந்திய அணி
    மரணதண்டனை மனு விசாரணை: யாசின் மாலிக்கை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட NIA உயர்நீதிமன்றம்

    பாஜக

    தமிழ் ஆதீன குருமார்களுக்கு அமோக கவனிப்பு: மத்திய அரசு என்னென்ன செய்தது தமிழ்நாடு
    எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்: நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்  இந்தியா
    புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு புதிய பெயர் வைக்கப்படலாம்  இந்தியா
    புதிய நாடாளுமன்றத்தில் தமிழத்தின் 'செங்கோல்': தமிழர்களின் இதயங்களை தொட முயற்சிக்கிறதா பாஜக  இந்தியா

    ஆம் ஆத்மி

    ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை ஒற்றுமையாக புறக்கணிக்கும் 19 எதிர்க்கட்சிகள்  இந்தியா
    டெல்லி அரசின் முடிவுகளுக்கு லெப்டினன்ட் கவர்னர் கட்டுப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு  இந்தியா
    மதுபானக் கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் பெயர் சிபிஐ குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023