NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திகார் சிறைக்கு மாற்றப்பட்டார் சிசோடியா: மார்ச் 20 வரை காவல் நீட்டிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    திகார் சிறைக்கு மாற்றப்பட்டார் சிசோடியா: மார்ச் 20 வரை காவல் நீட்டிப்பு
    தியான அறையில் வைக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை பரிசீலிக்குமாறு சிறை கண்காணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    திகார் சிறைக்கு மாற்றப்பட்டார் சிசோடியா: மார்ச் 20 வரை காவல் நீட்டிப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Mar 06, 2023
    07:18 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மார்ச் 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து திகார் சிறை எண்-1க்கு அவர் இன்று(மார் 6) மாற்றப்பட்டார்.

    ஒருவாரக் காவல் முடிவடைந்ததை அடுத்து, மத்தியப் புலனாய்வுப் பிரிவு(CBI) அவரை இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.

    டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் சிசோடியாவை CBI பிப்ரவரி 26 அன்று கைது செய்தது.

    ஆம் ஆத்மி கட்சி(AAP) தலைமையிலான டெல்லி அரசாங்கத்தின் ரத்து செய்யப்பட்ட 2021-22 டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக எட்டு மணிநேர விசாரணைக்குப் பிறகு சிசோடியா கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

    டெல்லி

    கண்ணாடி, பகவத் கீதை, டைரி, பேனா கோரி மனு தாக்கல்

    இந்த மதுபான கொள்கை மூலம் ஆம் ஆத்மி அரசு மதுபான வியாபாரிகளுக்கு தேவையற்ற சலுகைகளை வழங்கியதாகவும் அந்த ஊழல் பணத்தை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதாகவும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

    விசாரணைக்கு தலைமை தாங்கிய சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பாலிடம் தாங்கள் சிசோடியாவின் காவலை நீட்டிக்கக் கோரவில்லை என்று சிபிஐயின் வழக்கறிஞர் கூறினார். இருப்பினும், அடுத்த 15 நாட்களில் சிசோடியாவின் காவலை மீண்டும் கோரலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

    கண்ணாடி, பகவத் கீதை, டைரி, பேனா ஆகியவற்றைக் கோரி சிசோடியா தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் அனுமதித்தது. மேலும், தியான அறையில் வைக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை பரிசீலிக்குமாறு சிறை கண்காணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    இந்தியா
    ஆம் ஆத்மி

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    டெல்லி

    74வது குடியரசு தினம்-புனரமைக்கப்பட்ட கர்தவ்யா பாதையில் முதல்முறையாக அணிவகுப்புகள் குடியரசு தினம்
    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED கோவா
    டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம் அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லி-உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 5 நீதிபதிகள் முறையாக இன்று பதவியேற்பு உச்ச நீதிமன்றம்

    இந்தியா

    கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா - ராமேஸ்வரத்தில் இருந்து மக்கள் பயணம் ராமேஸ்வரம்
    ரத்தன் டாட்டாவை சந்தித்த பில்கேட்ஸ் - கொடுத்த ஆச்சர்யமான பரிசு என்ன? தொழில்நுட்பம்
    இந்து விரோத சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்: கைலாசா உலகம்
    ChatGPT-யில் வேலை இழப்பு? தைரியம் சொன்ன Infosys நிறுவனர்! சாட்ஜிபிடி

    ஆம் ஆத்மி

    டெல்லியின் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றார் ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் டெல்லி
    மணிஷ் சிசோடியா கைது: கைதுக்கு காரணம் என்ன டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025