NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: மீண்டும்  ஊரடங்கு உத்தரவு, என்ன காரணம்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: மீண்டும்  ஊரடங்கு உத்தரவு, என்ன காரணம்?
    மணிப்பூரில் மீண்டும் துவங்கிய பதற்றம்

    மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: மீண்டும்  ஊரடங்கு உத்தரவு, என்ன காரணம்?

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 12, 2024
    01:24 pm

    செய்தி முன்னோட்டம்

    மணிப்பூரில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக, பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ஜிரிபாம் மாவட்டத்தில், பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 11 பேர் நேற்று (நவம்பர் 11) கொல்லப்பட்டனர்.

    இந்த தாக்குதலுக்கு, குகி-ஜோ கவுன்சில் கடுமையாக கண்டனம் தெரிவித்து, இன்று காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது.

    இதன் காரணமாக, கடைகள் மூடப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    ஊரடங்கு

    மீண்டும் வன்முறை சம்பவங்கள் தலைத்தூக்கியதால் ஊரடங்கு உத்தரவு

    எனினும் இந்த கொலைகளுக்கு எதிராக, இம்பால் மேற்கு மற்றும் இம்பால் கிழக்கு மாவட்டங்களில் பல கிராமங்களில் வன்முறை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இம்பால் பள்ளத்தாக்கில் இரு தரப்பினரின் மோதலில் ஆயுதம் ஏந்திய குழுக்கள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதனால், மாநிலத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    கடந்த 3 நாட்களாக, மணிப்பூரின் மலை மற்றும் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில், ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் ஐஇடி வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அசாம் ரைபிள்ஸ் அறிவித்துள்ளது.

    தாக்குதல்

    காவல் நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்

    ஏற்கனவே வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில், இடையில் சில தினங்கள் அமைதி நிலவிய நிலையில், கடந்த 8ம் தேதி ஜிரிபாம் பகுதியில் தீவிரவாதிகள் 6 வீடுகளை தீ வைத்து கொளுத்தினார்கள்.

    மறுநாள், அப்பகுதியில் வேலை செய்து கொண்ட இளம்பெண்ணை சுட்டுக் கொன்றார்கள்.

    பின்னர், ஜிரிபாம் காவல் நிலையத்தைக் குறிவைத்து, குகி பழங்குடியின தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

    தாக்குதலுக்கான பதிலடி அளித்த போலீசாருடன் சேர்ந்து, சிஆர்பிஎஃப் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    இந்த தாக்குதலில், பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்ட்டரில் 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில், சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர் காயமடைந்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மணிப்பூர்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மணிப்பூர்

    நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பிரதமர் மோடி இன்று விவாதம் பிரதமர் மோடி
    மணிப்பூரில் வெளிச்சத்திற்கு வந்த மற்றொரு கூட்டு பாலியல் பலாத்கார சம்பவம்  இந்தியா
    மோடி அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது மோடி
    ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கம் குறித்து சோனியாகாந்தி தலைமையில் ஆலோசனை சோனியா காந்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025