NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மணிப்பூர் கலவரங்கள் தொடர்பான வீடியோக்கள் புகைப்படங்களை பரப்பத்தடை -மாநில அரசு உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மணிப்பூர் கலவரங்கள் தொடர்பான வீடியோக்கள் புகைப்படங்களை பரப்பத்தடை -மாநில அரசு உத்தரவு
    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 5 மாதங்களாக நடந்து வரும் கலவரத்தால், 50,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    மணிப்பூர் கலவரங்கள் தொடர்பான வீடியோக்கள் புகைப்படங்களை பரப்பத்தடை -மாநில அரசு உத்தரவு

    எழுதியவர் Srinath r
    Oct 12, 2023
    06:11 pm

    செய்தி முன்னோட்டம்

    மணிப்பூர் கலவரங்கள் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பரப்ப, மாநில அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, மணிப்பூர் மாநில ஆளுநர் அனுசியா மாநில உள்துறை மூலம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    இந்த உத்தரவு, மணிப்பூர் மாநிலத்தில் ஒருவர் உயிரோடு எரித்து கொள்ளப்படும் வீடியோ வைரலானதற்கு 3 நாட்களுக்குப் பின் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மெய்ட்டி இன மக்கள், தங்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்கக்கோரி கடந்த மே 3 ஆம் தேதி நடத்திய போராட்டம், வன்முறையாக மாறியது.

    இந்த கலவரத்தில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    2nd card

    தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான காரணங்கள்

    இந்த உத்தரவு, கலவரங்கள், மக்கள் கொல்லப்படுவது மற்றும் துன்புறுத்தப்படுவது போன்ற வீடியோக்கள் பரப்பப்படும் போது, அது மேலும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை உண்டாக்கும் என்பதால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதனால் கலவரங்கள் கட்டுப்படுத்தப்பட்டு மணிப்பூர் பழைய நிலைமைக்கு திரும்ப வழிவகுக்கும் என மாநில அரசால் கூறப்பட்டுள்ளது.

    இந்த உத்தரவை மீறுவோர் மணிப்பூரின் சட்ட விதிகளின்படி தண்டிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மணிப்பூரில் அக்டோபர் 16 ஆம் தேதி வரை, இணையதள சேவை முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வன்முறை தொடர்பான அதிகப்படியான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதால் இணையதள சேவை முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    எனினும் இந்த உத்தரவு சற்று முன்னரே விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மணிப்பூர்
    ஆளுநர் மாளிகை
    வைரல் செய்தி
    மாநில அரசு

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மணிப்பூர்

    மணிப்பூர் - புரட்சியின் குரல் என்னும் பெயரில் குகி பழங்குடியினரின் புதிய செய்தித்தாள்  போராட்டம்
    மணிப்பூர் ஒருமைப்பாட்டினை வலியுறுத்தி மத்திய அரசின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை பாஜக
    மக்களின் வலியினை பாஜக அரசு உணராது - ராகுல் காந்தி ராகுல் காந்தி
    மணிப்பூர் கலவரம் - வழக்கு விசாரணை சிபிஐ'க்கு மாற்றம்  சிபிஐ

    ஆளுநர் மாளிகை

    ஜார்கண்ட் மாநில ஆளுநராக பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக
    ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்
    திமுக கூட்டணி கட்சிகள் ஏப்ரல் 12ம் தேதி ஆளுநர் மாளிகை முன் போராட்டம் ஆர்ப்பாட்டம்
    தமிழ் மொழி மீது இந்தி மொழியினை திணிக்க முடியாது - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  தமிழ்நாடு

    வைரல் செய்தி

    வைரல் வீடியோ: சேற்றில் NCC ட்ரில்; பிரம்பால் விளாசும் சீனியர் மும்பை
    நண்பர்கள் தினத்தை முன்னிட்டு 'ஒருநாள் டெலிவரி பாயாக' மாறிய ஜொமோட்டோ சிஇஓ நண்பர்கள் தினம்
    'இது ஜெயிலர் வாரம்': கொண்டாட்டமாக ட்வீட் செய்த தனுஷ் தனுஷ்
    ஜெயிலர் ஃபீவர்: ஊழியர்களுக்கு இலவசமாக ஜெயிலர் பட டிக்கெட்ஸ் அளிக்கும் நிறுவனங்கள் ஜெயிலர்

    மாநில அரசு

    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் ஆந்திரா
    சென்னையில் பேனா நினைவு சின்னம்-மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு மத்திய அரசு
    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025