NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முன்னாள் காதலியின் திருமணத்திற்கு வெடிகுண்டை பரிசளித்த நபர் கைது
    முன்னாள் காதலியின் திருமணத்திற்கு வெடிகுண்டை பரிசளித்த நபர் கைது
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    முன்னாள் காதலியின் திருமணத்திற்கு வெடிகுண்டை பரிசளித்த நபர் கைது

    எழுதியவர் Sindhuja SM
    Apr 05, 2023
    02:07 pm
    முன்னாள் காதலியின் திருமணத்திற்கு வெடிகுண்டை பரிசளித்த நபர் கைது
    இந்த வெடிவிபத்தில் ஒரு வயதுக் குழந்தை உட்பட 7 பேர் காயமடைந்துள்ளனர்

    புதிதாக திருமணமான தனது முன்னாள் காதலிக்கு "வெடிகுண்டை" பரிசளித்த 33 வயது நபர் நேற்று(ஏப் 4) சத்தீஸ்கர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த வெடிகுண்டு விபத்தில் அந்த பெண்ணின் கணவர் மற்றும் மைத்துனர் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தாம் மாவட்டத்தில் இந்த வினோத சம்பவம் நடந்துள்ளது. இந்த வெடிவிபத்தில் ஒரு வயதுக் குழந்தை உட்பட அந்த குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் காயமடைந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் காதலன், சர்ஜு மார்க்கம், தனது முன்னாள் காதலி வேறொரு நபரை திருமணம் செய்து கொண்டதால் கோபமடைந்தார். இதனால், புதுமணத் தம்பதிகளைக் கொல்வதற்காக ஹோம் தியேட்டரில் வெடிமருந்துகளை வைத்து அதை திருமண பரிசாக வழங்கினார்.

    2/2

    திருமணமாகி குழந்தைகள் இருப்பதை மறைத்து அந்த பெண்ணை ஏமாற்றிய மார்க்கம்

    அந்த பெண்ணின் கணவர் ஹேமேந்திர மேராவி (32), அவரது சகோதரர் ராஜ்குமாருடன்(30) சேர்ந்து அந்த ஹோம் தியேட்டரை 'ஆன்' செய்தவுடன் பெரிய அளவில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதனையடுத்து, மேராவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேராவியின் மனைவி 2020 முதல் திருமணமான மார்க்கம் என்பவருடன் தொடர்பு வைத்திருந்ததை போலீசார் விசாரணையில் கண்டுபிடித்தனர். திருமணமாகவில்லை என்று பொய் சொல்லி மேராவியின் மனைவியை மார்க்கம் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மார்க்கம் மீது இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 302 (கொலை), 307 (கொலை முயற்சி), 326 (கடுமையான காயம்) மற்றும் வெடிபொருள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    காவல்துறை
    காவல்துறை

    இந்தியா

    இந்தியாவில் 4 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: 15 பேர் உயிரிழப்பு கொரோனா
    மத்திய அரசால் 'மீடியாஒன்' சேனலின் மீது போடபட்டிருந்த தடை ரத்து: உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    சிக்கிம் பனிச்சரிவு: நாதுலாவில் 7 பேர் பலி, 12 பேர் படுகாயம் சிக்கிம்
    கோழிக்கோடு ரயில் விபத்து: மகாராஷ்டிராவில் சந்தேக நபர் கைது கேரளா

    காவல்துறை

    கோழிக்கோடு ரயிலில் சக பயணியை தீ வைத்து எரித்த நபர்: 3 உடல்கள் கண்டெடுப்பு இந்தியா
    சென்னை கலாஷேத்ரா மாணவிகள் எழுத்துபூர்வமாக புகார் - மகளிர் ஆணைய தலைவர் சென்னை
    அலுவலக நாற்காலியால் ஏற்பட்ட சண்டை: சக ஊழியரை துப்பாக்கியால் சுட்ட நபர் டெல்லி
    இஸ்லாமிய பெண்களின் பர்தாவை கழற்ற சொல்லி வம்பிழுத்த 7 பேர் கைது தமிழ்நாடு

    காவல்துறை

    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய பீகார் வாலிபர் கைது தமிழ்நாடு
    திருநெல்வேலியில் விசாரணைக்கு அழைத்துவந்தவர்களின் பற்களை பிடுங்கிய போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம் திருநெல்வேலி
    சென்னையில் 1 கோடி மதிப்பிலான நகைகளை பறித்து சென்ற வழக்கு - உண்மை அம்பலமானது சென்னை
    உத்திரபிரதேசத்தில் கள்ள காதலனுக்காக தன் இரு குழந்தைகளை கொன்ற தாய் கைது உத்தரப்பிரதேசம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023