NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இரவில் பொறுப்பில்லாமல் காரை ஓட்டிய டிரைவர்.. டெல்லியில் பரபரப்பு!
    இரவில் பொறுப்பில்லாமல் காரை ஓட்டிய டிரைவர்.. டெல்லியில் பரபரப்பு!
    1/3
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    இரவில் பொறுப்பில்லாமல் காரை ஓட்டிய டிரைவர்.. டெல்லியில் பரபரப்பு!

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 01, 2023
    10:35 am
    இரவில் பொறுப்பில்லாமல் காரை ஓட்டிய டிரைவர்.. டெல்லியில் பரபரப்பு!
    டெல்லியில் அபாயகரமாக காரை ஓட்டிய நபர்

    டெல்லியில் இரவு 11 மணியளவில் பானெட்டில் நபர் ஒருவர் தொங்கிக் கொண்டிருக்க, அவரோடு ரோட்டில் ஓடிய காரால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியின் ஆஷ்ரம் சௌக் முதல் நிஜாமுதீன் தர்கா வரை கார் ஒன்றின் பானெட்டில் நபர் ஒரு கீழே விழும் நிலையில் அபாயகரமாக தொங்கிக் கொண்டிருக்க, அதனைப் பொருட்படுத்தாமல் ஓட்டுநர் காரை ஓட்டியிருக்கிறார். போலீசார் அவரைப் பின்தொடர்ந்து காரை வழிமறித்திருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தையடுத்து நடைபெற்ற விசாரணையில் அந்தக் காரானது பீகார் லோக் சபா எம்பி சந்தன் சிங்கின் கார் என்றும், அதனை அவரது டிரைவர் ராம்சந்த் குமார் ஓட்டி வந்ததும் தெரியவந்திருக்கிறது.

    2/3

    பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம்: 

    இது குறித்து பாதிக்கப்பட்ட சேட்டன் பேசும் போது, தான் டிரைவராகப் பணிபுரிவதாகவும், பயணி ஒருவரை இறக்கவிட்டு வரும் வழியில், எம்பி-யின் கார் தன்னுடைய காரின் மீது இடித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இறங்கி எம்பி-யின் காரின் முன்பக்கம் செல்ல, டிரைவர் தன்னைப் பொருட்படுத்தாமல் காரை இயக்கியதாகத், தெரிவித்துள்ளார் அவர். தான் பலமுறை காரை நிறுத்தப் கோரியும், அவர் காரை நிறுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், தான் எதுவும் செய்யவில்லை, பாதிக்கப்பட்டவரே தாமாக தன்னுடைய கார் பானெட்டின் மீது குதித்ததாக கூறியிருக்கிறார் எம்பி-யின் டிரைவர் ராம்சந்த் குமார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ராம்சந்த் குமார் மீது வேகமாகவும், பொறுப்பில்லாமலும் காரை ஓட்டியதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

    3/3

    Twitter Post

    #WATCH | Delhi: At around 11 pm last night, a car coming from Ashram Chowk to Nizamuddin Dargah drove for around 2-3 kilometres with a person hanging on the bonnet. pic.twitter.com/54dOCqxWTh

    — ANI (@ANI) May 1, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    டெல்லி
    இந்தியா

    டெல்லி

    மல்யுத்த அமைப்பின் தலைவர் மீது இன்று வழக்கு பதிவு செய்யப்படும்: டெல்லி போலீஸ்  இந்தியா
    ஜூன் 5ம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு  சென்னை
    WFI பிரச்சனை: மல்யுத்த வீரர்களின் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது இந்தியா
    மதுபானக் கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் பெயர் சிபிஐ குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது இந்தியா

    இந்தியா

    ஜம்மு-காஷ்மீரில் 14 மொபைல் மெசஞ்சர் ஆப்களுக்கு தடை  ஜம்மு காஷ்மீர்
    சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மீண்டும் குறைப்பு!  இந்தியா
    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிகரிக்கும் புதிய கார் மாடல் அறிமுகங்கள்..! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    திருமண சமத்துவம்: இந்த இக்கட்டான நிலையை உச்சநீதிமன்றத்தால் தீர்க்க முடியுமா? உச்ச நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023