NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவின் பாதுகாப்பிற்கு எதிராக செயல்பட மாட்டோம்; மாலத்தீவு அதிபர் முகமது முய்சு உறுதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் பாதுகாப்பிற்கு எதிராக செயல்பட மாட்டோம்; மாலத்தீவு அதிபர் முகமது முய்சு உறுதி
    மாலத்தீவு அதிபர் முகமது முய்சு

    இந்தியாவின் பாதுகாப்பிற்கு எதிராக செயல்பட மாட்டோம்; மாலத்தீவு அதிபர் முகமது முய்சு உறுதி

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 07, 2024
    10:34 am

    செய்தி முன்னோட்டம்

    இருதரப்பு பயணமாக முதல்முறையாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, ​​இந்தியாவின் பாதுகாப்பிற்கு எதிராக மாலத்தீவு ஒருபோதும் செயல்படாது என்று உறுதியளித்தார்.

    தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அவர் அளித்த பேட்டியில், இதைக் கூறியதோடு மேலும், இந்தியா தங்களுடைய மதிப்புமிக்க கூட்டாளி மற்றும் நண்பராக செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

    இந்தியாவுடனான ஒத்துழைப்பு, குறிப்பாக பாதுகாப்பில் முன்னுரிமையாக இருக்கும் என்று எடுத்துரைத்தார்.

    முன்னதாக, இந்தியா அவுட் என்ற தனது தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் சீனா ஆதரவாளராக கருதப்படும் முய்சு, தற்போது இவ்வாறு கூறியுள்ளது சர்வதேச அரசியலில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது.

    அவர் தனது 'மாலத்தீவுகளுக்கு முதலில்' கொள்கையின் கீழ் சர்வதேச உறவுகளை பன்முகப்படுத்தினாலும், அதனால் இந்தியாவின் நலன்களை சமரசம் செய்ய மாட்டோம் என்று உறுதியளித்தார்.

    பேச்சுவார்த்தை

    பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை

    இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பில், பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் மேம்பாடு குறித்து முய்சு விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு முய்சுவின் இந்திய வெறுப்பு செயல்பாட்டால் ஏற்பட்ட இராஜதந்திர பதட்டங்கள் காரணமாக, அங்கு செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்த நிலையில், தங்கள் நாட்டிற்கு தொடர்ந்து வருகை தருமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

    மேலும், இந்திய ராணுவ வீரர்களை தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றும் முடிவில் உறுதியாக இருந்தாலும், பிரதமர் மோடியைப் பற்றி அவதூறாக பேசிய மூன்று மாலத்தீவு அமைச்சர்களை இடைநீக்கம் செய்தது குறித்தும் முய்சு கூறினார்.

    இந்தியா-மாலத்தீவு இடையேயான உறவு என்பது பல நூற்றாண்டுகளாக பகிரப்பட்ட மதிப்புகளின் அடிப்படையில் ஆழமான வேரூன்றிய பிணைப்பு என்று அவர் விவரித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மாலத்தீவு
    இந்தியா
    பாதுகாப்பு துறை

    சமீபத்திய

    விரைவில் டும்டும்டும்... அதுவும் காதல் திருமணம்தான்.. நடிகர் விஷால் வெளியிட்ட தகவல் விஷால்
    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி

    மாலத்தீவு

    பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசிய மாலத்தீவு அமைச்சர்கள்: அந்நாட்டு தூதருக்கு இந்தியா சம்மன்  இந்தியா
    பிரதமர் மோடியின் பயணத்திற்கு பிறகு லட்சத்தீவுக்கான தேடல் 3,400% உயர்வு இந்தியா
    'இந்தியாவை எதிர்ப்பது மாலத்தீவு அரசாங்கத்தின் குறுகிய பார்வையை காட்டுகிறது': மாலத்தீவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் லட்சத்தீவு
    இந்தியா-மாலத்தீவு பிரச்சனைக்கு மத்தியில் அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புமாறு சீனாவிடம் மாலத்தீவு அதிபர் வலியுறுத்தல் சீனா

    இந்தியா

    வெளிநாட்டு முதலீடுகளை கண்காணிக்க ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டம் முதலீடு
    ஐஎம்எப்பை விட அதிகமாவே கொடுத்திருப்போம்; பாகிஸ்தானை கிண்டல் செய்த ராஜ்நாத் சிங் ராஜ்நாத் சிங்
    அக்டோபர் 1 முதல் எஸ்எம்எஸ்களுக்கு கட்டுப்பாடு;  டிராய் அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் தொழில்நுட்பம்
    வாரத்தின் முதல் நாளில் வீழ்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை

    பாதுகாப்பு துறை

    மத்திய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை விமானங்கள் விமானம்
    இந்தியாவின் மேல் பறந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் இந்தியா
    நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் தர்மேந்திராவின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மும்பை
    SCO பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்: ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025