NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கின் ஆறாவது குற்றவாளி கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கின் ஆறாவது குற்றவாளி கைது 
    மகேஷின் உறவினர் கைலாஷிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கின் ஆறாவது குற்றவாளி கைது 

    எழுதியவர் Sindhuja SM
    Dec 16, 2023
    03:29 pm

    செய்தி முன்னோட்டம்

    நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கின் ஆறாவது குற்றவாளியான மகேஷ் குமாவத்தை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

    நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சதித்திட்டத்தில் மகேஷ் குமாவத்துக்கும் பங்கு இருக்கிறது என்பதை தெரிந்துகொண்ட அதிகாரிகள் அவரையும் கைது செய்தனர்,

    பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான கடந்த டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்தது.

    அப்போது மக்களவை பூஜ்ஜியம் நேரத்தின் போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்த இருவர், புகை குண்டுகளை வீசினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அந்த சம்பவம் நடக்கும் போது ராஜஸ்தானின் நாகௌர் மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷ் குமாவத்தும் டெல்லி வந்திருக்கிறார்.

    ட்ஜஒய்க்ள்

    குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்த மகேஷ் குமாவத்

    நேற்று வரை தலைமறைவாக இருந்த இந்த சம்பவத்தின் முக்கிய சதிகாரரான லலித் ஜா, ராஜஸ்தானில் உள்ள மகேஷின் மறைவிடத்தில் தான் தங்கி இருந்து, ஆதரங்கள் அடங்கிய மொபைல் போன்களை அழித்திருக்கிறார்.

    இந்த விவரங்கள் எல்லாம் காவல்துறை விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, ராஜஸ்தானை சேர்ந்த மகேஷ் குமாவத் கைது செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட 5 பேருடனும் மகேஷ் குமாவத் பல நாட்களாக தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

    லலித் மற்றும் மகேஷ் இருவரும் வியாழக்கிழமை புது டெல்லி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஒன்றாக சரணடைந்தனர்.

    லலித்தின் கைது வெள்ளிக்கிழமை பதிவு செய்யப்பட்டது. மகேஷின் உறவினர் கைலாஷிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் இதுவரை அவரை போலீசார் கைது செய்யவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாடாளுமன்றம்
    மக்களவை
    டெல்லி
    காவல்துறை

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    நாடாளுமன்றம்

    திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை திமுக
    சட்டம் பேசுவோம்: தற்கொலையை குற்றமற்றதாக்குகிறதா புதிய குற்றவியல் மசோதாக்கள்? சட்டம் பேசுவோம்
    ஹேக்கிங் விவகாரம்: ஆப்பிள் நிறுவன அதிகாரிகளை நாடாளுமன்ற குழு சம்மன் செய்ய இருப்பதாக தகவல்  ஆப்பிள்
    திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக நாளை கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு  மக்களவை

    மக்களவை

    டெல்லி அவசர சட்டம் தொடர்பான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு  தாக்கல் செய்தது டெல்லி
    குடியரசு தலைவரை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர்கள்: என்ன விவாதிக்கப்பட்டது? நாடாளுமன்றம்
    தகுதி நீக்கம் வாபஸ்: மீண்டும் எம்.பி ஆனார் ராகுல் காந்தி ராகுல் காந்தி
    'அன்பு வெறுப்பை வென்றது': ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி அந்தஸ்து கிடைத்ததை கொண்டாடும் காங்கிரஸ்  ராகுல் காந்தி

    டெல்லி

    உலகளவில் மிகவும் மாசுபட்ட டாப் 10 நகரங்களின் பட்டியலில் 3 இந்திய நகரங்கள் மும்பை
    தீபாவளியை அடுத்து டெல்லி காற்று மாசுபாடு கடுமையானதாக மாறியது  காற்று மாசுபாடு
    இந்திய விருந்தோம்பல் துறையின் முன்னோடி, ஓபராய் குழுமத்தின் தலைவர் பிஆர்எஸ் ஓபராய் காலமானார் ஹோட்டல்
    டெல்லி மாசுக்காற்று: மருத்துவர்கள் பரிந்துரைப்படி, ஜெய்ப்பூருக்கு செல்கிறார் சோனியா காந்தி சோனியா காந்தி

    காவல்துறை

    பள்ளிக்கு வெளியே குழந்தைகள் கத்தியால் குத்தப்பட்டதை அடுத்து அய்ர்லாந்தில் வெடித்த வன்முறை காவல்துறை
    26 வயது இந்திய பிஹெச்டி மாணவர் அமெரிக்காவில் காரில் சுட்டுக்கொலை அமெரிக்கா
    சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை  கொலை
    அமெரிக்காவில் பாலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு துப்பாக்கி சூடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025