NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தேசத்தந்தை காந்தி: வழக்கறிஞராக அவரை பற்றி நீங்கள் அறியாத சில விஷயங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தேசத்தந்தை காந்தி: வழக்கறிஞராக அவரை பற்றி நீங்கள் அறியாத சில விஷயங்கள்

    தேசத்தந்தை காந்தி: வழக்கறிஞராக அவரை பற்றி நீங்கள் அறியாத சில விஷயங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 29, 2024
    06:14 am

    செய்தி முன்னோட்டம்

    தேசபிதா என்று அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் பிறந்தநாள் அக்டோபர் 2ஆம் தேதி.

    மகாத்மா காந்தியை ஒரு சுதந்திரப் போராட்ட வீரராகவும், இந்திய சுதந்திர இயக்கத்தின் தலைவராகவும் பல கதைகளை கேட்டிருப்பீர்கள்.

    இருப்பினும், அவரது வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகள் ஒரு வழக்கறிஞராக, நியாயத்தின் போராளியாக அவர் வாழ்ந்து வந்தார்.

    அந்த காலகட்டமே, அவரின் சுதந்திரப் போராட்டத்திற்கான அணுகுமுறையை பாதித்தது.

    சட்டப் படிப்பு

    மகாத்மா காந்தியின் சட்டப் படிப்பு

    மோகன்தாஸ் கரமச்சந்த் காந்தி 1887ல் பள்ளி தேர்வில் தேர்ச்சி பெற்றார்.1888ல் இங்கிலாந்து சென்று சட்டம் படித்து பாரிஸ்டர் ஆனார்.

    1888 ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி, காந்திஜி இன்னர் டெம்பிளில் மாணவராக அனுமதிக்கப்பட்டார்.

    இந்த நேரத்தில், அவர் லண்டனில் உள்ள பல்கலைக்கழகக் கல்லூரியில் இந்திய சட்டம் மற்றும் நீதித்துறையில் படிப்பிற்காக மாணவராக சேர்ந்தார்.

    இன்னர் டெம்பிள் என்பது 14ஆம் நூற்றாண்டிலிருந்து இருந்து வரும் ஒரு இணைக்கப்படாத உறுப்பினர் சங்கமாகும்.

    இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வழக்கறிஞர் பயிற்சி பெற மாணவர்களை அழைக்கும் பிரத்யேக உரிமையை இன்ஸ் ஆஃப் கோர்ட் கொண்டுள்ளது.

    தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, காந்திஜி 1891ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டார்.

    முதல் வழக்கு

    காந்திஜியின் முதல் வழக்கு

    இந்தியா திரும்பிய பிறகு, மகாத்மா காந்தி பம்பாயில் ஒரு வழக்கறிஞராகப் பயிற்சியைத் தொடங்கினார்.

    இங்கே, அவர் தனது முதல் வழக்கை எடுத்துக் கொண்டார். மாமிபாய் என்ற பெண்ணுக்காக அவர் வாதாடினார்.

    அப்போது அவரது கட்டணம் 30 ரூபாய்.

    காந்திஜி பிரதிவாதியான மாமிபாய் சார்பாக ஆஜராகியதால், நீதிமன்றத்தில் எதிர் தரப்பு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய வேண்டியிருந்தது.

    ஆனால் பதட்டம் காரணமாக அவர் குறுக்கு கேள்விகள் கேட்க தவறியதால், அந்த வழக்கிலிருந்து விலகி கொள்வதாக தெரிவித்து, பணத்தையும் திருப்பி கொடுத்துவிட்டாராம்.

    6 மாதங்கள் பம்பாயில் தங்கியிருந்த காந்திஜி தனது தனது வழக்கறிஞர் பணியை ராஜ்கோட்டில் தொடர் திட்டமிட்டார்.

    டர்பன்

    காந்திஜியின் டர்பன் பயணம்

    1893 ஆம் ஆண்டில், காந்திஜி டர்பனில் உள்ள தாதா அப்துல்லா அண்ட் கோ நிறுவனத்திடம் பணி கிடைத்ததும் தென்னாப்பிரிக்காவிற்குச் சென்றார்.

    அங்கே காந்திஜி, ஒரு வழக்கறிஞரின் கடமை சட்ட மற்றும் எதிரிகளின் நன்மைகளைப் பயன்படுத்துவதல்ல, மாறாக சமரசம் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதே என்பதை உணர்ந்தார்.

    முடிந்தவரை, அவர் தனது வாடிக்கையாளர்களை நீதிமன்றத்திற்கு வெளியே தங்கள் எதிரிகளுடன் சமரசமாக தீர்த்துக்கொள்ளவே அறிவுறுத்தினார்.

    தான் வழக்கில் வெல்ல வேண்டும் என்பதை விட, சத்தியத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்பதற்காக சாட்சிகளும் பொய் சொல்ல கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்.

    எனினும் ஜனவரி 1915 இல் தென்னாப்பிரிக்காவிலிருந்து சமூக செவ்வையாக இந்தியாவுக்குத் திரும்பி நமது சுதந்திரப் போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவராக ஆனார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    தென்னாப்பிரிக்கா

    சமீபத்திய

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்
    அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன? மின்சார வாகனம்
    நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது! மெட்டா

    இந்தியா

    ஓபன் செஸ் ஒலிம்பியாட்டில் முதல்முறையாக தங்கம் வென்று வரலாறு படைத்தது இந்தியா செஸ் போட்டி
    லாஸ் ஏஞ்சல்ஸ், பாஸ்டன் நகரில் இரண்டு புதிய இந்திய தூதரகங்கள்: பிரதமர் மோடி பிரதமர் மோடி
    வாரத்தொடக்கத்திலேயே புதிய உச்சம்; இந்திய பங்குச் சந்தைகள் அபாரம் பங்குச் சந்தை
    எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன்களை ஒருங்கிணைக்க மெர்சிடிஸ் பென்ஸ் சிஇஓ வலியுறுத்தல் மெர்சிடீஸ்-பென்ஸ்

    தென்னாப்பிரிக்கா

    தென்னாப்பிரிக்காவில் இருந்து சந்திரயான்-3 தரையிறங்குவதை பார்வையிட இருக்கிறார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கீழே விழுந்து கிடந்த மூவர்ண கொடி: பிரதமர் மோடியின் நெகிழ வைக்கும் வீடியோ  பிரதமர் மோடி
    'ஒரே நாடு ஒரே தேர்தலின்' வரலாறும் அதை சாத்தியப்படுத்தி இருக்கும் நாடுகளும் இந்தியா
    நெல்சன் மண்டேலாவின் பேத்தி மார்பக புற்று நோயால் காலமானார் புற்றுநோய்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025