NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுரை ரயில் தீ விபத்து - கேஸ் சிலிண்டர் வெடிப்பு குறித்து 2வது நாளாக தொடரும் விசாரணை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதுரை ரயில் தீ விபத்து - கேஸ் சிலிண்டர் வெடிப்பு குறித்து 2வது நாளாக தொடரும் விசாரணை 
    மதுரை ரயில் தீ விபத்து - கியாஸ் சிலிண்டர் வெடிப்பு குறித்து 2வது நாளாக தொடரும் விசாரணை

    மதுரை ரயில் தீ விபத்து - கேஸ் சிலிண்டர் வெடிப்பு குறித்து 2வது நாளாக தொடரும் விசாரணை 

    எழுதியவர் Nivetha P
    Aug 28, 2023
    04:01 pm

    செய்தி முன்னோட்டம்

    மதுரை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியில் கடந்த ஆகஸ்ட்.26.,மிகப்பெரும் தீ விபத்து ஏற்பட்டதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    உத்திரபிரதேசம் லக்னோவிலிருந்து ராமேஸ்வரம் செல்ல சுற்றுலா பயணிகள் வந்த ரயில் கடந்த 25ம்தேதி இரவு மதுரை ரயில்நிலையத்திலிருந்து ஒரு கி.மீ.,தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    அந்த ரயிலில் 26ம்தேதி அதிகாலை திடீரென கேஸ் வெடித்து பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

    அதன்படி, சுற்றுலாப்பயணம் மேற்கொண்ட 63பேர் கொண்ட குழு லக்னோ ரயில்நிலையத்தில் இருந்து ஒரு பெட்டியினை வாடகைக்கு பிடித்து தங்களுடன் 5 சமையல்காரர்களையும் அழைத்து வந்துள்ளனர்.

    இந்த சமையல்காரர்கள் அதிகாலையில் டீ போட்டப்பொழுதுதான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதனிடையே ரயில்வே பாதுகாப்புத்துறை ஆணையர் சவுத்ரி நேற்று(ஆகஸ்ட்.,27)இதுகுறித்த விசாரணையினை நடத்தினார்.

    விசாரணை 

    எந்த ரயில் நிலையத்தில் வைத்து இந்த சிலிண்டர் ஏற்றப்பட்டது? என விசாரணை 

    2வது நாளான இன்றும்(ஆகஸ்ட்.,28)அவர் தனது விசாரணையினை தொடர்ந்து நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.

    சுற்றுலாவுக்கு செல்ல ஏற்பாடு செய்த நிறுவனமே கியாஸ் சிலிண்டரை ரயிலில் ஏற்றியுள்ளனர் என்று கூறப்படும் நிலையில், அவர்களுக்கு கியாஸ் சிலிண்டர் கொடுத்தது யார்? எந்த ரயில் நிலையத்தில் வைத்து இந்த சிலிண்டர் ஏற்றப்பட்டது? என்பதன் அடிப்படையில் தற்போது விசாரணை நடக்கிறது.

    அதேபோல் இந்த விபத்தில் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 8 பேரிடமும் விசாரிக்கப்பட்ட நிலையில், தப்பியோடிய சுற்றுலா நிறுவனத்தை சேர்ந்த 5 பேரையும் காவல்துறை தற்போது பிடித்து விசாரணை செய்து வருகிறது.

    மேலும், அவர்களுள் சமையல்காரர்களான 2 பேரை காவல்துறை விசாரணைக்கு அழைத்துவந்துள்ள நிலையில், இன்று மாலைக்குள் விசாரணை முடிந்து அதுகுறித்த தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மதுரை
    சுற்றுலா
    விபத்து
    காவல்துறை

    சமீபத்திய

    ஜாஃபர் எக்ஸ்பிரஸ் சம்பவம் பண்ணியது இப்படித்தான்; வீடியோ வெளியிட்டு பாகிஸ்தானை அலறவிட்ட பலோச் போராளிகள் பலுசிஸ்தான்
    ஹேக்கிங் அபாயம்; டெஸ்க்டாப்களில் கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு அதி உயர் எச்சரிக்கை கூகுள்
    கிரிக்கெட்டில் கோலியின் இறுதி கவுண்டவுன்: 2027 ஒருநாள் உலகக் கோப்பையுடன் முழுவதுமாக வெளியேற திட்டமா? விராட் கோலி
    கொரோனா பாதிப்புகளில் இந்தியாவில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? கொரோனா

    மதுரை

    மதுரையில் மருத்துவ கழிவுகளை குப்பையில் கலந்த தனியார் மருத்துவமனைக்கு அபராதம்  தமிழ்நாடு
    மதுரை சித்திரை திருவிழா - மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண பிரம்மோற்சவம்  திருவிழா
    மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் - லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு  சித்திரை திருவிழா
    மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவின் ஸ்வாரஸ்யங்கள் ஓர் பார்வை  சித்திரை திருவிழா

    சுற்றுலா

    உலக பாரம்பரிய தினம் 2023: இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் புனரமைக்கப்பட்ட புராதன சின்னங்கள் இந்தியா
    தமிழகத்தில் குறைந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை! காரணம் என்ன? தமிழ்நாடு
    இந்தோனேசியாவிற்கு சுற்றுலா செல்லும்பொழுது, நீங்கள் தவிர்க்க வேண்டிய சில தவறுகள் பயணம்
    குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்து குலுங்கும் பச்சை ரோஜா  தமிழ்நாடு

    விபத்து

    சென்னையிலிருந்து கேரளா சென்ற தனியார் பேருந்து விபத்து - இருவர்  உயிரிழப்பு சென்னை
    ரஷ்யா கிளர்ச்சியாளரும், வாக்னர் படைத்தலைவருமான எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் பலி ரஷ்யா
    வாக்னர் படைத்தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் மரணம், திட்டமிட்ட கொலை: அமெரிக்கா உளவுத்துறை  ரஷ்யா
    கேரளா வயநாட்டில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி கேரளா

    காவல்துறை

    கோவை டி.ஐ.ஜி.விஜயகுமார் தற்கொலை வழக்கு - 8 பேருக்கு சம்மன்  காவல்துறை
    விபச்சார வழக்கை சாதகமாக முடித்து தருவதற்கு லஞ்சம் வாங்கிய பெண் எஸ்ஐ கைது  திருச்சி
    பெங்களூரில் மாபெரும் தீவிரவாத தாக்குதல் நடத்த முயன்ற 5 பயங்கரவாதிகள் கைது  பெங்களூர்
    உத்தரகாண்ட்: மின்மாற்றி வெடித்ததால் ஒரே நேரத்தில் 15 பேர் பலி உத்தரகாண்ட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025