NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுரை எய்ம்ஸ்: டெண்டர் விண்ணப்பத்திற்கான கால அவகாசம் நீட்டிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதுரை எய்ம்ஸ்: டெண்டர் விண்ணப்பத்திற்கான கால அவகாசம் நீட்டிப்பு 
    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை - டெண்டர் விண்ணப்பத்திற்கான கால அவகாசம் நீட்டிப்பு

    மதுரை எய்ம்ஸ்: டெண்டர் விண்ணப்பத்திற்கான கால அவகாசம் நீட்டிப்பு 

    எழுதியவர் Nivetha P
    Sep 28, 2023
    01:05 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என்று கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது.

    இதற்காக மதுரை தோப்பூரில் இடமும் தேர்வு செய்யப்பட்டது.

    அதன்படி மதுரைக்கு புறநகரில், தோப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில், 224.24 ஏக்கர் பரப்பளவில், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக ரூ.1,977.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

    இந்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் மோடி, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக அடிக்கல் நாட்டினார்.

    ஆனால் அடிக்கல் நாட்டப்பட்டு 4 ஆண்டுகளாகியும் கட்டுமான பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது, மக்கள் மத்தியில் பல வித கேள்விகளை எழுப்பியது.

    எய்ம்ஸ் 

    அக்டோபர் மாதம் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

    ரூ.1,977.80 நிதியில், ரூ.1,627.80 கோடியினை ஜப்பான் நாட்டினை சேர்ந்த ஜைக்கா நிறுவனத்திடம் கடனாக பெறுவதாக மத்திய நிதி அமைச்சர் தெரிவித்தார்.

    அதனையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம், எய்ம்ஸ் மருத்துவமனையினை கட்டுவதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டது.

    இந்த ஒப்பந்த விண்ணப்பத்தினை(டெண்டர்) செப்.,18ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

    அதில் முக்கிய கோட்பாடாக, கட்டுமான பணிகள் 33 மாதங்களில் நிறைவுபெற வேண்டும் என்றும் கூறப்பட்டது.

    தொடர்ந்து, கடந்த 4ம்தேதி டெண்டருக்கு விண்ணப்பித்த நிறுவனங்களுடன், எய்ம்ஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒன்றும் நடத்தப்பட்டது.

    அந்த கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டதன் பேரில், முன்தகுதி விண்ணப்பக்கால அவகாசம், வரும் அக்டோபர் மாதம் 6ம் தேதிவரை நீட்டிக்கப்படுதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மதுரை
    எய்ம்ஸ்
    ஜப்பான்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    மதுரை

    மதுரையில் பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்  சித்திரை திருவிழா
    தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை என்ஐஏ
    தமிழ் பாடத்தில் 100க்கு 138 மதிப்பெண் பெற்ற மாணவி - 12ம் வகுப்பு சர்ச்சை விவகாரம்  தமிழ்நாடு
    மதுரை மெட்ரோ ரயில் திட்டம் - வைகை ஆற்றின் நடுவே மண் பரிசோதனை துவங்கியது  ரயில்கள்

    எய்ம்ஸ்

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து  டெல்லி
    கடன் பெற்று கட்டப்படும் மதுரை AIIMS: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்  மதுரை
    மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி அடுத்தகட்டத்துக்கு நகர்வு  மதுரை
    மூச்சு விடுவதை நிறுத்திய 2 வயது குழந்தைக்கு நடு வானில் உயிர் கொடுத்த விமானப் பயணிகள்  டெல்லி

    ஜப்பான்

    ஜப்பானிற்குள் இறங்கிய வட கொரியாவின் ஏவுகணை: என்ன நடக்கிறது வட கொரியா
    7,000 அறியப்படாத தீவுகளைக் கண்டுபிடித்த ஜப்பான் உலகம்
    ஜப்பானில் பரவிவரும் வார இறுதி திருமணங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உறவுகள்
    குவாட் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025