NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி மிரட்டலுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட ஆசிரியை; மத்திய பிரதேசத்தில் சோகம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி மிரட்டலுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட ஆசிரியை; மத்திய பிரதேசத்தில் சோகம்
    டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி மிரட்டலுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட ஆசிரியை

    டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி மிரட்டலுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட ஆசிரியை; மத்திய பிரதேசத்தில் சோகம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 06, 2025
    06:35 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்திய பிரதேச மாநிலம் மௌகஞ்ச் மாவட்டத்தில் பகுதிநேர ஆசிரியை ரேஷ்மா பாண்டே, சைபர் கிரைம் மோசடி நபர்களின் அச்சுறுத்தல் காரணமாக விஷம் குடித்து உயிரிழந்தார்.

    குரேத்தா வார்டு எண். 12ல் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அங்கு அரசுப் பள்ளியில் பணிபுரியும் ரேஷ்மா பாண்டே ஒரு விரிவான மோசடிக்கு பலியானார்.

    சனிக்கிழமையன்று (ஜனவரி 4), ரேஷ்மா பாண்டேவுக்கு வாட்ஸ்அப்பில் செய்திகள் மற்றும் வீடியோக்கள் வந்தன, இதில் போலீஸ் மற்றும் ராணுவ வீரர்கள் சீருடையில் இருக்கும் காட்சிகள் அடங்கும்.

    அடுத்த வீடியோ அழைப்பின் போது, ​​ஒரு அதிகாரி போல் காட்டிக்கொண்டு ஒரு மோசடி செய்பவர், பார்சலைப் பெறத் தவறியதற்காக டிஜிட்டல் முறையில் கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.

    அவர்களின் கோரிக்கைகளுக்கு இணங்காவிட்டால், திருட்டு வழக்கில் சிக்கவைப்பதாக மிரட்டியுள்ளனர்.

    கைது மிரட்டல்

    உள்ளூர் போலீசாரை வைத்து கைது செய்யப்போவதாக மிரட்டல்

    முதலில் ரேஷ்மா பாண்டேவிடமிருந்து ₹22,000 மிரட்டி பணம் பறித்த மோசடிக்காரர்கள், பின்னர் கூடுதலாக ₹50,000 கேட்டு, உள்ளூர் காவல்துறையால் கைது செய்யப் போவதாக மிரட்டியுள்ளனர்.

    மிரட்டல்களால் பயந்துபோன பாண்டே விஷம் குடித்துவிட்டு வெளியூரில் இருந்த தனது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். ரேவாவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    குடும்பத்தினர் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். மேலும், போலீஸ் சூப்பிரண்டு ரஸ்னா தாக்கூர் தொடர்ந்து விசாரணையை உறுதிப்படுத்தினார்.

    அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் மருத்துவமனை சிஎம்ஓ யத்னேஷ் திரிபாதி தெரிவித்தார்.

    அரசு தொடர் விழிப்புணர்வு மேற்கொண்டுவரும் நிலையிலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாக நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சைபர் கிரைம்
    மத்திய பிரதேசம்
    இந்தியா
    ஆன்லைன் மோசடி

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    சைபர் கிரைம்

    சைபர் தாக்குதலுக்கு உள்ளான உலகின் பெரிய வங்கியான சீனாவைச் சேர்ந்த ICBC சீனா
    Mozilla Firefox உலாவியில் பாதுகாப்புக் குறைபாடுகள்? எச்சரிக்கை விடுத்த CERT-In இந்தியா
    சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் - காவல்துறை தீவிர சோதனை  சென்னை
    பெண் பஸ் ஓட்டுநர் ஷர்மிளா மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு கோவை

    மத்திய பிரதேசம்

    உஜ்ஜைன் பாலியல் பலாத்கார சம்பவம்- பாதிக்கப்பட்ட மாணவிக்கு உதவ முன்வந்த காவலர்கள் இந்தியா
    தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் இந்தியா
    இந்தியாவின் பழமையான நகரங்களையும் அவற்றின் காலத்தால் அழியாத அழகையும் பற்றி ஒரு பார்வை  இந்தியா
    பெண்களுக்கு அரசு வேலையில் 35% இட ஒதுக்கீடு: மத்திய பிரதேச அரசு அறிவிப்பு  இந்தியா

    இந்தியா

    இந்தியாவில் 1 லட்சம் விற்பனை மைல்கல்லை எட்டியது கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி கியா
    டாப் 5 நாடுகளின் மொத்த தங்க கையிருப்பை விட இந்திய பெண்களின் தங்க இருப்பு அதிகம் தங்க விலை
    2025 ஜனவரியின் வரி காலண்டர்; வரி செலுத்துபவர்கள் கண்டிப்பாக நினைவில் கொள்ளவேண்டியவை வருமான வரி விதிகள்
    உலகத்தில் நான்காவது நாடு; SpaDeX ஐ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இஸ்ரோ இஸ்ரோ

    ஆன்லைன் மோசடி

    டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள்.. எச்சரிக்கும் விவிஃபை நிறுவன CEO!  கடன்
    யூடியூபின் பெயரில் மின்னஞ்சலில் மோசடி.. பயனர்களே உஷார்!  கூகுள்
    ஆன்லைன் ஆர்டர் செய்யப்பட்ட ஐபோன்கள்.. போலி ஐபோன்களாக மாற்றிய டெலிவரி பாய்!  ஆப்பிள்
    AI உதவியுடன் ஆன்லைன் மோசடி.. இணைய பாதுகாப்பு நிறுவனத்தின் ஆய்வு! செயற்கை நுண்ணறிவு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025