NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மத்திய பிரதேசம்: ஆசிரமத்தில் இருந்த 5 குழந்தைகள் மர்ம நோயால் உயிரிழப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மத்திய பிரதேசம்: ஆசிரமத்தில் இருந்த 5 குழந்தைகள் மர்ம நோயால் உயிரிழப்பு 

    மத்திய பிரதேசம்: ஆசிரமத்தில் இருந்த 5 குழந்தைகள் மர்ம நோயால் உயிரிழப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 03, 2024
    01:16 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஸ்ரீ யுக்புருஷ் தாம் ஆசிரமத்தில் 72 மணி நேரத்திற்குள் அடையாளம் தெரியாத நோயினால் மனநலம் குன்றிய ஐந்து குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

    முதலில் அந்த ஆசிரமத்தில் பாதிக்கப்பட்ட எட்டு வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை காலமானான். அதைத் தொடர்ந்து அடுத்த நாள் மேலும் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.

    நேற்று மேலும் இரு குழந்தைகள் அதே ஆசிரமத்தில் உயிரிழந்தது.

    206 குழந்தைகள் வசிக்கும் அந்த ஆசிரமத்திற்கு மூன்றாவது மரணம் ஏற்படும் வரை மருத்துவ உதவி கிடைக்கவில்லை.

    இதற்கிடையில், அந்த நோய்க்காக சிகிச்சை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 4 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் ஆஷீஷ் சிங் இன்று தெரிவித்தார்.

    இந்தியா 

    10 குழந்தைகளுக்கு "இரத்த தொற்று" இருப்பதாக புகார் 

    குழந்தைகள் அனைவரும் நகரின் அரசு சாச்சா நேரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நான்கு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்கு இருக்கும் அறிகுறிகள் கெட்டுப்போன உணவை சாப்பிட்டதனால் ஏற்படும் அறிகுறிகளை போல் இருக்கின்றன.

    ஆனால், இதை பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் உறுதி படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    "அடுத்த 48 மணிநேரங்களுக்கு ஆசிரமத்தை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணிப்போம். குழந்தைகளிடம் ஏதேனும் அறிகுறிகள் காணப்பட்டால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள்" என்று காவல்துறை கூறியுள்ளது

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கினால் ஏற்படும் நீரிழப்பு காரணமாக ஆபத்தான நிலையில் உள்ளனர்.

    இதற்கிடையில், 10 குழந்தைகளுக்கு "இரத்த தொற்று" இருப்பதாகக் ஆசிரமத்தின் நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால் இந்தக் கூற்று இன்னும் சரிபார்க்கப்படவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய பிரதேசம்
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மத்திய பிரதேசம்

    உஜ்ஜைன் பாலியல் பலாத்காரம்- ஆட்டோ டிரைவர் கைது, மூவரிடம் போலீசார் விசாரணை பாலியல் வன்கொடுமை
    உஜ்ஜைன் பாலியல் பலாத்கார சம்பவம்- பாதிக்கப்பட்ட மாணவிக்கு உதவ முன்வந்த காவலர்கள் இந்தியா
    தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் இந்தியா
    இந்தியாவின் பழமையான நகரங்களையும் அவற்றின் காலத்தால் அழியாத அழகையும் பற்றி ஒரு பார்வை  இந்தியா

    இந்தியா

    வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்று கொள்பவர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு: மத்திய அரசு அறிவிப்பு  மத்திய அரசு
    வெளிநாடுகளில் இருக்கும் இந்தியாவின் தங்க கையிருப்பு 6 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு குறைந்தது யுகே
    முதலீட்டை மோசடி செய்ததாக GROWW தளத்தின் மீது குற்றச்சாட்டு  வணிகம்
    'கேரளம்' ஆகிறது கேரளா: மாநிலத்தின் பெயரை மாற்ற சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் கேரளா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025